நீடிய மலையும் மலைசூழ்ந்த
நிலமும் குறிஞ்சி அறிதம்பி!
காடும் காடு சூழ்இடமும்
கவின்மிகு முல்லை உணர்தம்பி!
வயலும் வயல்கள் சூழ்இடமும்
வளமார் மருதம் ஆம்பாப்பா!
பயிலும் நெய்தல் கடல், மற்றும்
கடல்சூழ் பகுதி அறி பாப்பா!
எரிக்கும் பாலை இங்கில்லை
எனினும் அறிவோம் அச்சொல்லை!
குறிக்கும் இந்தத் திணை வாழ்க்கை
கொண்ட தொல்குடி வேறில்லை!
பொங்கல் தைமுதல் பெருநாளாம்
போற்றும் தமிழர் திருநாளாம்!
வையப் புலவன் வள்ளுவனை
வாழ்த்த வருநாள் மறுநாளாம்!
வீட்டில் பொங்கல் பொங்கட்டும்
வேதனை போய்ஒளி தங்கட்டும்
கேட்டில் உழலும் ஈழத்தின்
கிழக்கில் வெளிச்சம் தோன்றட்டும்.
சிந்தனையாளன் - ஜனவரி 2012
சிறுவர் பாடல் - பொங்கல் திருநாள்
- விவரங்கள்
- தமிழேந்தி
- பிரிவு: சிந்தனையாளன் - ஜனவரி 2012
More articles by தமிழேந்தி
- அண்ணலின் அரும்புகழ் வாழ்க! (22 மே 2023)
- தமிழுக்கான இலக்கியம் (15 மே 2020)
- ‘அன்னவர்கள்’ வாழி! வாழி!! (06 ஜூன் 2019)
- தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? (2) (30 மே 2019)
- தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? (30 மே 2019)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.