மனிதன்
வீடு திரும்பும்
மற்றொரு விலங்கு.
பெரியவைகள் அதி சோர்வுடன்
சிறியவைகள் மிகு உற்சாகத்துடன்
என்ற சிறு முரணோடு
சின்னதும்
பெரியதுமாய்
பழக்கப்பட்ட வழியில்
திரும்பிவிடுகின்றன
எண்களின் வழி
காலத்தை ஊகித்தவாறு
தொண்டை கரகரக்கையில்
கிடைக்கும் சுக்கு வெந்நீரில்
சூட்டிலும் மணத்திலும்
அம்மாவின் கைப்பக்குவம்
புத்தக மூட்டையுடன்
ஓடிவந்து
முதுகில் ஒட்டிய எல்.கே.ஜி
இறங்கிப் போய்
பூட்டிய கதவை சரிபார்க்கிறது
பாட்டியின் சொச்சமாய்.
“இறப்பென்றால்
நினைவுக் காம்பிலிருந்து உதிர்வது’’
யாரோ சொன்னதைக்
கொண்டுவந்து பார்த்தேன்.
அடுத்தடுத்த நாளில்
எப்பவும்போல்
வலம்வரத் தொடங்கினாள்
அம்மா
என் மனைவியாக குழந்தையாக.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
கதைசொல்லி - பிப்ரவரி 2007
- விவரங்கள்
- சுமதி இராமசுப்ரமணியம்
- பிரிவு: கதைசொல்லி - பிப்ரவரி 2007