மனிதர்களே!
மாடுகளைக் கொன்று
உங்கள்
வயிற்றில் புதைக்காதீர்கள்.
உங்களைவிட
பசுமாடு என்பது
பலமடங்கு உயர்ந்தது.
நீங்கள்
தொட்டால் தீட்டு
உங்களைத்
தொட்டாலும் தீட்டு
பசுவின் பீ நறுமணம்
அதன் மூத்திரம் மங்களம்.
மனிதர்களே
(தாழ்த்தப்பட்டவர்களே)
தேசிய ஒருமைப்பாட்டுக்கு
உதாரணம் போல்
இந்தியா முழுக்க
பரவலாக பல ஊர்களில்
உங்கள் உடைமைகளைக்
கொளுத்தியிருக்கிறோம்
உயிர்களைக் குடித்திருக்கிறோம்
உண்மையைச் சொல்லுங்கள்
உங்கள் மாடுகளை நாங்கள்
மாய்த்திருக்கிறோமா?
மனிதர்களே
(இஸ்லாமியர்களே)
பிரிவினையின்போதும் சரி
குஜராத்திலும் சரி
கர்ப்பிணியின் வயிறு கிழித்து
உங்கள் குழந்தையின்
உயிர் கிழித்தோம்
நெஞ்சில்
கை வைத்து சொல்லுங்கள்
உங்கள் கன்றுக்குட்டிகளை
நாங்கள் காயப்படுத்தினோமா?
மனிதர்களே
(பிற்படுத்தப்பட்டவர்களே)
மனிதர்களே
(பிற சாதிக்காரர்களே)
மனிதர்களைக் கொன்றாவது
மாடுகளைக் காப்பாற்றுங்கள்.
விழி - டிசம்பர் 2007
மிருகாபிமானம்
- விவரங்கள்
- வே.மதிமாறன்
- பிரிவு: விழி - டிசம்பர் 2007
More articles by வே.மதிமாறன்
- மூலதனமும் நீயே... மூலப்பொருளும் நீயே... அன்புடன் ஆட்கொள்வாய் கூட்டணித் தாயே! (06 மே 2014)
- பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே! (10 மே 2010)
- ஈவ்டீசிங் (23 ஏப் 2010)
- காமராஜரின் சிறப்பு எது? - எளிமையா? பெரியாரா? (20 பிப் 2010)
- மறைமலையடிகளின் தலித் விரோதம் - பெரியார் இயக்கத்தின் கடும் எதிர்ப்பு (20 பிப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.