பேருந்து
உஷ்ணம் உமிழ்ந்துகொண்டிருக்கும் பேருந்தில்
உடல்களின் சிதைவுகளுக்கிடையே
விதைப் பைகள் நசுங்கி
பிடிப்பற்றுத் தடுமாறும் அவன் கைகளில்
முன்னிற்கும் அவள் முலைகள் தட்டுப்படுகின்றன
குழந்தையைச் சாக்கிட்டு
அவள் தன் ஜாக்கெட்டைத் தளர்த்துகிறாள்
பின்னிருந்து பேண்ட் ஜிப்பைத் திறந்து
குறி துழாவும் மனிதனை
இவனால் திரும்பிப் பார்க்க இயலவில்லை
கீழே விழுந்த சில்லறைக்காக குனிந்த அவன்
இவள் பாவாடைக்குள் தேடிக்கொண்டிருக்கிறான்
அவளும் கால்களை அகட்டிக் கொடுக்கிறாள்
இந்த நேரத்தில்தான் வீரிடுகிறது குழந்தை
கழுத்தை நெக்கிறாள் அவள்
அனைத்தையும் கண்டு சாத்தானைப் போல புன்னகைக்கும்
நடத்துநர் விசில் ஊதுகிறார்
திரும்பிப் பார்க்காமல்
பாதையில் மட்டும் கவனம் வைத்து
பேருந்தைச் செலுத்துகிறார் ஓட்டுநர்
ஒரு கடவுளைப் போல.
ஊர்ந்து செல்லும் இரவு
சுயத்துடன் தொடங்கும் இப்புலர்காலையை
சுயபுணர்ச்சியுடன் தொடங்குகிறேன்
அலுவலகம் சென்று
என் சக அலுவலக மயிரான்களை
மாலை வரை சகித்திருந்துவிட்டு
வீதிகளில் வோட்காவும் விஸ்கியும் தேடி அலைகிறேன்
சாலைகளில் திட்டமிட்டே
பின்புறம் அசைத்துப் போகும்
பெண்களின் பிம்பங்களை
கழிப்பறைக்கு இட்டுச் செல்வதைத் தவிர வேறுவழியில்லை
ஊர்ந்து செல்லும் இரவை
புகை பிடித்தே நகர்த்திக்கொண்டிருக்கும் போதே
இந்தத் தாயோளி காலை வந்தேவிடுகிறது.
வனம் - செப்டம்பர் 2007
ஊர்ந்து செல்லும் இரவு
- விவரங்கள்
- பயணி
- பிரிவு: வனம் - செப்டம்பர் 2007
More articles by பயணி
- வர்ணமடிப்பவன் (07 மே 2010)
- கடுங்கோடைக் காலம் (02 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.