ஆஹா! வரப்போகிறது. கிறிசாது பிறந்த நாளான கிறிசாதுமசும், புது வருடப் பிறப்பும். கொண்டாட்டமும், கும்மாள மும்தான்! கிறிசாதுமசா தினத்தன்று கிறிசாதவர்கள் சர்ச்சுக்குச் சென்று, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வார்கள். புதுவருட பிறப்பன்று மெழுகுவர்த்தியினை ஏற்றி, புது வருடத்தை சந்தோஷமாக வரவேற்பார்கள். இந்த மெழுகு இதற்கு மட்டும் தானா பயன்படுகிறது? மேலும் பல அரிய தகவல்களையும் தெரிந்து கொள்வோமே!

இப்படி பிரார்த்தனையின் போதும், விழாக்காலங்களின் போதும், ஏன் இன்று கார்த்திகை தீபத்திரு விழாவின் போது கூட சிலர் எண்ணெய் விட்டு தீபமேற்றுவதில்லை. மெழுகு தீபங்களை ஏற்றி வழிபடுகிறார்கள். மின்சாரம் இல்லாத போது, இருட்டைப் போக்கி, வெளிச்சம் பெற மெழுகுவர்த்தி ஏற்றுகிறோம். இப்படியாகத்தான் மெழுகின் பயனை நாம் அறிவோம்! ஆனால், அதையும் தாண்டி மருந்தாகவும் பயன்படுகிறது என்பது பலருக்குத் தெரியாது. அதைப் பற்றிக் காண்போம்!

மெழுகானது தன்னைத் தானே அழித்துக்கொண்டு, மற்றவர்களுக்கு வெளிச்சத்தைத் தருகிறது. மனிதர்களாகப் பிறந்த நாமும், பிறருக்கும் எந்த விதத்திலாவது உதவியாக இருக்க வேண்டும் என்ற கருத்தினைக் கூறும் பொழுது, மெழுகு போல் என்று உதாரணமாகக் கூறுவார்கள். இதன் உபயோகம் பல வகைகளில் உள்ளது.

பிறந்த நாள் விழாவின் போது, மெழுகு வர்த்தி ஏற்றி கொண்டாடு வார்கள். தங்க வேலை செய்யும் ஆசாரிகளுக்கு உதவியாக இருக்கிறது. அலோபதி வைத்திய முறையில், ஆர்த்ரைடிசா போன்ற மூட்டு வலிகளுக்கு சிகிச்சையின் போது, மெழுகு காய்ச்சி ஊற்றி, அந்த இளம் சூட்டிலேயே மசாஜ் செய்வது இதமாக இருக்கும் என்று பயன் படுத்துகிறார்கள்.

இன்னும் பழம் மற்றும் காய்கறிகளில் கூட பளபளப்பாக இருக்க வேண்டும் என்று மேல் பூச்சாகப் பயன்படுத்துகிறார்கள். இது உடலுக்கு தீங்கையே விளைவிக்கும் என்பதெல்லாம் கண்டு கொள்வ தில்லை. தோலுடன் பழம் அல்லது காய்கறிகளை சாப்பிடும் போது இவையும் உள்ளுக்கு செல்வதால் உடலுக்கு கெடுதலையே விளைவிக் கின்றன. அதிக அளவில் ஃபாரஃபின் உள்ளுக்கு செல்லும் பொழுது, அது விஷமாகிறது. வயிற்று வலி, குமட்டல், வாந்தி, மலச்சிக்கல் போன்ற வியாதிகள் உண்டாகக் காரணமாகிறது.

ஆனால், இதே மெழுகை, ஹோமியோபதி என்னும் வைத்திய முறையில் வீரியப்படுத்திக் கொடுக்கப் படும் பொழுது மருந்தாகிறது. தன்னைத் தானே அழித்துக் கொண்டு வெளிச்சம் தருவது மட்டுமன்றி, தானே மூலப் பொருளாகவும் இருந்து, மனித குலத்தை துயரத்திலிருந்து காப்பாற்று கிறது. கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்கும் பொழுது, அத்துயரருக்கு பாரஃபின் மருந்து உதவுகிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.

பாரஃபின் துயரருக்கு ஏற்படும் வலிகள் யாவும் முறுக்குவது போலவும், கிழிப்பது போலவும், கொட்டுவது போலவும், கீழ் நோக்கிப்    பரவக் கூடிய தாகவும் இருக்கும். உடலின் மேல் பாகத்தில் சூடான வியர்வை, முன் நெற்றியில் அதிகமாக இருக்கும். முகமும், கை களும் சூடாகவும், சிவந்தும் இருக்கும். குளிர், சூடு, வியர்வை மாறி மாறி வரும். அதே போல், தொண்டை வலியும், வயிற்றுவலியும் மாறி மாறி வரும். பசி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இதனால், அதிகமாக உண்பதால், வயிற்று வலி உண்டாகும். வயிற்று வலியின் போது, அடி வயிற்றிலிருந்து பிறப்புறுப்புகள், ஆசனவாய், முதுகுத் தண்டின் நுனிவரை வலி பரவும். உட்கார்ந்தால் இதமாக இருக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான மலச்சிக்கல். இதனால், மூலம் போன்ற உபாதைகள் தோன்றும். அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழிக்க தூண்டுதல். தலைவலியின் போது, வலி உச்சந் தலையில் ஆணி அடிப்பது போன்று வலி ஏற்படும். முகமும், தலையும் இடது பக்கம் அதிகமாக பாதிக்கப்படும். பல் வலியில் வலி, கிழிப்பது போன்றும், முறுக்குவது போன்றும், வலி கீழ்த்தாடை வரை பரவக் கூடியதாகவும் இருக்கும். வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். அதே சமயம் அதிக தாகமும் இருக்கும்.

பார்வை மங்கலாகுதல். கருப்பு புள்ளிகள் தோன்றி மறைவது போன்ற உணர்வு ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ப் போக்கு தாமத மாகவும், அதிகமாகவும், கருப்பாக வும் இருக்கும். பால் போன்ற வெள்ளைப் படுதல் காணப்படும். கணுக்கால், குதிகால், பாதம் மற்றும் மூட்டுகளில் வலி. ஷாக் அடித்தது போன்ற வலி இருக்கும். வலி கால் விரல்களுக்கும், விரல் மூட்டுகள் வரையிலும் பரவக் கூடியதாகவும் இருக்கும். தீப்பட்ட புண்களுக்கு மேல்பூச்சாக பூசவும் பயன்படுகிறது. கடுங்குளிர் மற்றும் பனியினால் சிலருக்கு கை, கால் மற்றும் உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு புண்ணாகும். மற்றும் தோல் அதிகமாக வறண்டு போகும். இதை பாரஃபின் சரி செய்கிறது. வறண்ட தோல் விஎயாதியில் பாரஃபின் -ஐ வெளிப் பூச்சாக பூசுவதன் மூலம் தோல் அதிகம் வறண்டு போவதால் ஏற்படும் உபாதைகளை சரி செய்கிறது.

வாருங்கள்! நாமும் மெழுகை ஏந்தியபடி இதற்கு நன்றி கூறுவோம். ஹோமியோபதியில் மருந்தாக தன் கால் பதித்ததற்காக!.

-ஆர்.பி.நாகலதா

Pin It