கடந்த இதழின் தொடர்ச்சி:

மிகைசெயல்:

மேலும் பார்வை நரம்புகளின் கிரகிக்கும் தன்மையில் குறைபாடு இருக்கலாம். படிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும். ஓரளவு வளர்ந்த பிறகும் கூட இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்து விடும் தன்மையும் இருக்கலாம். மரபணுக்களில் 5,6,11 போன்ற ஜீன்களில் மாறுபாடு அல்லது குறைபாடு காரணமாக இவ்வாறு ஏற்படலாம் என மருத்துவம் கூறுகிறது.முன் மூளைப் பகுதியில் உள்ள நரம்புக் கடத்திகளின் செயல் திறன் குறைவினால் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் உள்ள, ஈடுபாட்டுடன் இணக்கமும் இல்லாத குடும்ப சூழல் இவைகள் காரணமாகவும் இது போன்ற பிரச்சனைகள் தோன்றக் கூடும்.

Stammerting - திக்குவாய்:

இக்குழந்தைகள் தொடக்கத் திலேயே தாமதாகத்தான் பேச ஆரம்பிப்பார்கள். கொஞ்சம் வளர்ந்த பிறகும், பேசும் பொழுது தொடர்ச்சியாக பேச இயலாமல், ஒரே வார்த்தை அல்லது ஒரே வாக்கியத்தை அழுத்தமாக திணறி திணறி உச்சரிப்பார்கள். இதனை திக்குவாய்க் குறைபாடு என்பார்கள். இதனால் இக்குழந்தைகளிடம் இறுக்கமான மனநிலை தோன்றி, தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மற்றவர்களுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து விடுவதும் உண்டு.

Nail Biting - நகம் கடித்தல்:

சில குழந்தைகள் என்னதான் திட்டினாலும், அடித்தாலும் அவர்களையும் அறியாமலேயே நகத்தை கொரித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களால் இப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளவே இயலாது. இத்துடன் மேலும் சில குறைபாடுகளும் சேர்ந்து காணப்படலாம். அதாவது எழுதும் பொழுது எழுத்துக்களை இடையில் விட்டு விடுதல், கணக்கில் எண்களை மாற்றி விடுவது, விட்டு விடுவது போன்ற சிறுசிறு தவறுகள் செய்வதுண்டு. அவர்களுடன் பழகும் சக தோழர்களிடம் இயல்பாகப் பழக மாட்டார்கள். அவர்களை விட வயது குறைந்த சிறுவர்களுடன் பழகுவார்கள். பயம் அதிகமாக இருக்கும்.

திக்கு வாய் மற்றும் நகம் கடிக்கும் குழந்தைகளிடம் காணப்படும் இத்தகைய குறைபாடுகள் மன உறுத்தல் காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம். அன்பும், பராமரிப்பும் கிடைக்கவில்லை என்ற எண்ணத்தால், அல்லது உண்மையிலேயே அவ்வாறு கிடைக்காத காரணத்தால் இத்தகைய குறைபாடுகள் ஏற்பட லாம்.  பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் தனிமையை உணரும் குழந்தைகள், பெற்றோரிமிருந்து போதுமான அளவிற்கு அன்பும், கவனிப்பும் கிடைக்காத நிலையில் இது போன்ற பிரச்சனைகளுக்கு ஆட்படலாம்.

தூக்கத்தில் குறைபாடு:

இரவில் தூக்கத்தின் இடையில் திடீரென்று எழுந்து உட்கார்ந்து கொள்வார்கள், சிலர் எழுந்து நடப்பார்கள், சிலர் உட்கார்ந்து கொண்டு அலறுவார்கள், இதயம் படபடவென அடித்துக் கொள்ளும். ஆனால் இவர்களுக்கு தூக்கம் கலைந்திருக்காது. காலையில் விழித்த பின்பு இது பற்றி கேட்டால் அவர்களுக்கு எதுவும் நினைவில் இருக்காது.

Enuresis - படுக்கையில் சிறுநீர் கழித்தல்:

சில பிள்ளைகள் ஓரளவு வளர்ந்த பின்னரும் இரவில் தங்களை அறியாமலேயே தூக்கத்திலேயே சிறுநீர் கழித்து விடுவார்கள். இதற்கு பரம்பரைத் தன்மை, மன உளைச்சல், பயந்த சுபாவம், சர்க்கரை வியாதி, வலிப்பு நோய், சிறுநீர் குழாய் பாதிப்பு, குழந்தையின் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாமல் இருப்பது, மற்றும் வேறு நோய்களும் காரணமாக இருக்கலாம்.

Encodpresis - மலம் கழிப்பதில் ஒழுங்கின்மை:

கழிப்பிடத்திற்கு சென்று மலம் கழிக்காமல், நினைத்த இடத்தில், கண்டபடி மலம் கழித்துவிடுவார்கள். இத்தகைய நிலைக்கு மனரீதியான பிரச்சனைகள், மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், தான தனியாக விடப்படக் கூடாது எப்போதும் தன்னை கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற மனோபாவம் காரணங்களாகும்.

Factitious Disorder - போலித்தனம்:

இவர்கள் மற்றவர்கள் கவனத்தைத் தன் மீது திருப்புவதற்காக போலியாக நடிப்பார்கள். பெற்றோர்கள் தன்னை கவனிக்கும்படி செய்வதற்காக, தனக்குத் தானே உடல் மற்றும் மனரீதியான அதாவது உடல் வலி , நோய் இருப்பது போன்ற போலியான பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டு, பெற்றவர்களுக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் இம்சை தரும் சூழலை உருவாக்குவார்கள்.

Kleptomania - திருடும் குணம்:

இத்தகைய குழந்தைகள், பணத் தேவைகளுக்காகவோ, பொருள் தேவை களுக்காகவோ திருடுவது கிடையாது. தங்களை அறியாமலேயே மன உந்துதல் காரணமாக அடிக்கடி திருடிவிடுவார்கள். இவர்களுக்கு உணடாகும் மன உளைச்சலை தணித்துக் கொள்ளவே இத்தகைய திருட்டுத் தனத்தில் ஈடுபட்டு விடுகிறார்கள் என்று உளவியல் மருத்துவம் கூறுகிறது.

Oppositional Defiant Disorder -  எதிர்ப்பு மனப்பான்மை:

சில குழந்தைகள், தேவையான நேரத்தில், தேவையான விஷயங்களுக்குக் கூட கீழ் படிய மாட்டார்கள், பணிவும், பொறுமையும்,விவேகமும் இருக்காது. எந்த நேரமும் மிகுந்த துணிச்சலுடன், எதிர்வாதமும், பிடிவாதமும் செய்து அடுத்தவர்களை வேதனையடையச் செய்வார்கள். அவசியமற்ற காரியங் களுக்குக்கூட வலிந்து சண்டை போடு வார்கள். அவர்கள் செய்த காரியங் களினால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் கூட அருகில் உள்ளவர்கள் மீதே குற்றம் சாட்டுவார்கள். தாங்கள் செய்து விட்ட தவறை மனம் திறந்து ஒத்துக் கொள்ளும் மனோபாவம் இருக்காது. அதனை மறைத்து, எதிர்த்துப் பேசும், எதிர்ப்பு மனப்பான்மை உடையவர் களாக இருப்பார்கள்.

உணர்ச்சிக் களத்தில் மாறுபட்ட, நலமற்ற தன்மை, பெற்றோர்களின் அடக்குமுறை இவைகளால், குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் ஏற்படும் உளப் போராட்டம் போன்றவற்றால் இத்தகைய மனநிலை உருவாகி விடுவதுண்டு.

Behavioural Disorder - நடத்தை மாறுபாடு:

இந்த குழந்தைகள் அடுத்தவர்களை ஏமாற்றுவது, வேண்டுமென்றே திருடுவது, சட்ட திட்டங்களை மீறுவது, என்று மொத்தத்தில் செய்யக்கூடாத செயல்களை செய்யும், அடாவடித் தனங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளாக எதிர்காலத்தில் மாறி விடக் கூடிய குணங்களை கொண்டி ருப்பார்கள்.

சமூக விரோத நடவடிக்கைகளில் உள்ள குடும்பப் பிண்ணனி, மூளையிலும், தண்டு வடத்திலும்இருக்க வேண்டிய திரவத்தின் அளவு குறைவுபடுதல் (செரிப்ரோ சாபைனல் ப்ளூயிட்), குடும்பத்தில் குழப்பம், வன்முறை செயல்பாடுகள், தாய்,தந்தையின் இணக்க மற்ற தன்மை, கவனிக்க இயலாத அளவு பெரிய குடும்பம், பொருளாதாரத் தில் மிகவும் பின் தங்கிய குடும்ப சூழல், பள்ளியில் படிப்பில் தோல்வி, மற்றவர் களால் ஒதுக்கப்படும் சூழல், போன்ற ஏதேனும் சில காரணங்களால் இத்தகைய சமூக விரோதிகளாக சில குழந்தைகள் உருவாகிவிடுகிறார்கள்.

பெற்றோர் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்:

டிசாலெக்சியா குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டிய முறை:

இது ஒரு வியாதி அல்ல. இந்த குழந்தைகளுக்கு அதிகமாக வீட்டுப் பாடங்கள் தருவதையும் அதிகமாக எழுதச் சொல்லுவதையும் விட்டு விட்டு, பேசுவதன் மூலமும், கேட்டதைத் திரும்பச் சொல்ல வைப்பதன் மூலமும் இவர்களை எளிதாக நல்ல முறையில் படிக்க வைக்க முடியும்.

ஆடிஸம் குழந்தைகளை கவனிக்க வேண்டிய முறை:

இத்தகைய குழந்தைகளை முதலில் பெற்றோர் மனதளவில் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் சாதாரண குழந்தைகளை விட இக்குழந்தைகளை கவனித்துக் கொள்ள அதிகப் படியான பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். மிகுந்த அக்கறையுடனும், அன்புடனும், தேவையான நேரத்தில் கண்டிப்பும் செய்து பக்குவமாக கையாள வேண்டும். இவர்களை கவனித்துக் கொள்ள அளவற்ற பொறுமையும், அன்புள்ளமும் அவசியம் தேவை. தற்காலத்தில் இத்தகைய குழந்தைகளுக்கென்று தனிப் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் அவர்களுக்கு ஏற்ற முறையில் பயிற்சி அளித்து சிறந்த முறையில் கல்வியும் கற்றுத் தரப்படுகிறது. இத்தகைய கல்விக் கூடங்களில் சேர்த்து அவர்களையும் சிறந்த முறையில் வளர்க்க முடியும்.

மிகை செயல்:

இவர்கள் நிலை கொள்ளாமைத் தன்மை கொண்டிருப்பதால் எதையும் உள்வாங்கிக் கொண்டு மனதில் நிலை நிறுத்துவது சிரமமாக இருக்கும். இவர்கள் தவறு செய்யும் போது பெற்றோர்கள் கோபத்தினால் சத்தம் போட்டு திட்டுவதாலோ அல்லது அடிப்பதனாலோ எதிர்பார்கும் பலன் இருக்காது. இப்படிச் செய்வதால் மிகுந்த பயம், அல்லது வெறுப்பு அல்லது எதிர்த்து பேசுதல் என நிலைமை இன்னும் மோசமாகவே மாறி விடும்.

பொதுவாக இந்தக் குழந்தைகளின் பெற்றோர் அதிகப் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எப்பொழுதும் அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே, அதைத் தொடாதே, அங்கே போகாதே என்று வாய் ஓயாமல் அவர்களை கண்டனம் செய்து கொண்டே இருப்பார்கள். இது மிகவும் தவறு. அதைச் செய்யாதே என்று சொல்வதை விட, இந்தா இதைச்செய், இதைப் பார், இந்த இடத்திற்கு போ என்று அவர்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டும். அவர்கள் எப்படியெல்லாம் ஓடி ஆட விரும்புகிறார்களோ அப்படியே விளையாட விடலாம். ஆனால் மிகுந்த கவனத்துடன் அவர்கள் செய்வதை கண்காணிக்கலாம். மிகவும் அவசியமான, ஆபத்தான விஷயங்களுக்கு மட்டும் எச்சரிக்கை செய்வதும் அல்லது கண்டிக்கவும் செய்யலாம்.

எல்லா குழந்தைகளையுமே சதா சர்வ காலமும் கண்டிப்பு காட்டி வளர்ப்பது தவறு. அவர்களுக்கான சுதந்திரம் அளித்து அதே சமயம் தேவையான நேரத்தில் கண்டிப்பும் காட்டி அவர்களை நல்வழிப்படுத்துவது பெற்றோர்கள் கையில்தான் இருக்கிறது. அவர்களே நல்லது, கெட்டதுகளை அறிந்து கொள் வதற்கான திறமையைப் பெறவும், சிறந்த மனிதனாக வளர்வதற்கு உண்டான தன்மையையும் உருவாக்குவதும் தான் பெற்றோர்களின் கடமை ஆகும்.

இது போன்ற குழந்தைகள் பிறப்பதற்கு பெரும்பாலும் பரம்பரைத் தன்மை காரணமாக உள்ளது. பெற்றோரின் இரத்தத்தில் ஆர்.எச். காரணி ஒருவருக்கு ஆர்.எச்.நெகட்டிவாகவும், மற்றவருக்கு ஆர்.எச் பாஸிட்டிவாகவும் இருந்தால் இது போல குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மிகுந்த நெருக்கமான மாமன் மகள், அக்கா மகள் என மிகுந்த நெருக்கமான உறவுகளில் திருமணம் செய்வதாலும் வருவதற்கு வாய்ப்புண்டு. தாய்க்கு கருவுற்ற காலத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், இத்தகைய குறைபாடுகள் நிகழ்வதுண்டு. தாயின் பிரசவ நேரத்தில் நிகழும் பாதிப்புகளும் காரணமாகி விடலாம். பிறந்த குழந்தைக்கு ஏற்படும் நோய்களுக்குத் தரப்படும் தேவையற்ற அளவுக்கு அதிகமான ஆங்கில மருந்துகளும், சில சமயங்களில் தடுப்பு மருந்துகளினாலும் இத்தகைய குறைபாடு கள் ஏற்படுவதுண்டு.

குறைபாடு உள்ள குழந்தைகளை வளர்ப்பதும், கையாள்வதும் எவ்வாறு என்று அறிந்து கொண்டாலும், மிகத் தீவிரமான குறைபாடுகளை ஓரளவு மாற்றிடவும், ஆரம்ப நிலையில் அல்லது தீவிரமற்ற நிலையில் உள்ளவர்களை நலம் செய்யவும் மருந்துகளும் அவசியம் அல்லவா?   அவை நிச்சயம் ஹோமியோபதி மருத்துவத்தில் மட்டுமே உள்ளது எனலாம். ஏனெனில் ஹோமியோபதி மருத்துவம் தான் மனதையும், உடலையும் இணைத்துப் பார்த்து மருந்துகளை தேர்வு செய்யும் மருத்துவ முறையாகும். தொண்டுள்ளம் கொண்ட மருத்துவர்களிடமும், மனிதர்களிடமும் ஹோமியோ மருந்துகள் கொடுக்கப்பட்டு துல்லியமாக மன உணர்வுகள், அதில் எழும் மாறுபாடு கள்மற்றும், உடல் பிரச்சனைகள் எவ்வாறு எவ்விதம் எழுகின்றன என்று ஆதியோடு அந்தமாக அனைத்தையும் பரிசோதித்து குறித்து வைத்துள்ளனர். இதைக் கண்டுபிடித்த மருத்தவர் ஆங்கில மருத்துவம் பயின்ற சாமுவேல் ஹானெமன் என்பவர் ஆவார். அவர் கண்டுபிடித்தது 250 ஆண்டுகள் முன்னர். ஆயினும் இன்று வரை எந்த மருந்துகளும் பயனற்றது என்ற காரணத்திற்காக தடை செய்யப் பட்டதில்லை. மேலும் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லை. குழந்தை களும் விரும்பிச் சாப்பிடும்படியாக மாத்திரைகள் இனிப்பு உருண்டைகளாக இருக்கின்றன.

ஒரே விதமான வியாதி என்றாலும் ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு விதமான நடவடிக்கைகளை வெளிப்படுத்து வார்கள். ஆகவே அந்தக் குழந்தைகளின் தனித் தன்மைக்கு ஏற்ற மருந்தினை தேர்வு செய்து அளிக்க ஹோமியோபதி மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் உள்ளன.

உதாரணத்திற்கு டிசாலெக்ஸியா குழந்தைகளின் கவனமின்மைக்கு அனகார்டியம், ஸிரோபைலம், எண்களை கணக்கிடுவதில் குறை என்றால் அம்மோனியம் கார்ப், சாடெபி, சாடாராமோனியம், மிக மந்தமாக இருப்பது, படிப்பதில் மந்தத் தன்மை என்றால் காலிபுரோமேட்டம், அதே போல் ஆடிஸம் குழந்தைகளிடம் காணப்படும் திடீரென்று கத்துவது, அடிப்பது, அழிப்பது போன்ற தன்மைகளுக்கு பெல்லடோனா,                    கிளிப் பிள்ளை போல சொன்னதையே சொல்வதை மாற்ற, உடலை அசைத்துக் கொண்டேயிருப்பதை மாற்ற ஸிங்கம் மெட், பொருளை பிடிக்க இயலாமல் நழுவ விடுவதை போக்க சாடேனம், மிகை செயல் குழந்தைகளை மாற்ற ரசாடாக்சா, ஆர்சனிக், டேரன்டுலா, நகம் கடிப்பதை நிறுத்த அனகார்டியம், நேட்ரம் மூர், காலிபுரோம், என்று ஒவ்வொரு தன்மைக்கும் ஏற்றவாறு பலவிதமான அற்புதமான மருந்துகள் இருக்கின்றன.

குழந்தைகளுக்கு இருக்கின்ற குறைகள் குறித்து இனி கவலைப் பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. எந்த விதமான பிரச்சனைகள் என்றாலும் மருந்துகள் என்றால், அது ஹோமியோபதி மருந்தாக இருக்கட்டும்.

ஹோமியோ மருந்துகள் மட்டும் தான் பக்கவிளைவுகள் இல்லாமல் மிகுந்த பாதுகாப்பை, தாயின் அரவணைப்பு போன்ற பாதுகாப்பை அளிக்கும். குழந்தைகள் நலத்தில் மிகுந்த அக்கறையும், உண்மையிலேயே அன்பும் செலுத்தும் பெற்றோரா நீங்கள்? அப்படி என்றால் ஹோமியோ மருத்துவரை அணுகிப் பாருங்கள்!

நிச்சயம் வித்தியாசத்தை உணர முடியும். ஹோமியோபதி எனும் நிதர்சனமான உண்மையின் மூலம் நம்பிக்கையாக நலம் பெற முடியும் என்பதை அறிவீர்கள்!

-Dr.ஆர்.லோகநாயகி

Pin It