கல்லெடுத்துச் சிலைவடித்து
கருவறையில் உருவமைத்து
கடவுளென்று காட்டுகின்ற
கயவர்களின் கால்கழுவி
நீரருந்தும் மடமையிங்கே
நெடுநாளாய் மாறவில்லை
கொட்டுகின்ற காணிக்கைக்
கோடிகளும் குறையவில்லை
உலகமெங்கும் கோயில்கட்டி
உள்ளேயரு குடிலமைத்துப்
பரம்பொருளைக் காட்டுவதாய்ப்
பாசாங்கு செய்துகொண்டு
கருவறையில் பெண்களுடன்
காமுகனாய் வாழ்வோரை
நம்புகின்ற மனிதர்களைப்
பக்தரென்பதா, பித்தரென்பதா?