கடந்த ஆண்டு இறுதியில் (12.12.2012) சென்னையில் ஓர் அவசரத் திருவிழா அரங்கேறியது

ஒரே நாளில் 21ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி நியமன ஆணை!விடிய விடிய கலந்தாய்வு நடத்திப் பணிஇடங்கள் இறுதி செய்யப்பட்டன.இதுவரை கல்வித் துறை வரலாற்றில் இல்லாத ‘மாபெரும் புரட்சி!’36பேருக்குத் தமிழக முதல்வரே நேரில் வந்து ஆணை வழங்கினார்.மற்ற அனைவருக்கும் அமைச்சர்கள் ஆணை வழங்கினர் என்று ஊடகங்களெங்கும் செய்திகள் நிரம்பி வழிந்தன.ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் நாட்டில் இத்தகைய நிகழ்வு புரட்சிதான்.

“அப்படியே, இன்னும் இருக்கும் ஆசிரியர் தேவையையும் உடனடியாகத் தீர்த்து வைத்துவிட வேண்டியதுதானே.ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்தான் லட்சக் கணக்கில் இருக்கிறார்களே?” என்றொரு கேள்வி எழுந்தது.

“இல்லை, அவர்களுக்கெல்லாம் இன்னும் தகுதி வரவில்லை”

“அப்படியா, அவர்களெல்லாம் ஆசிரியர் பயிற்சிக்யோ, ஆசிரியர் பட்டப்படிப்போ முடித்தவர்கள்தானே!”

“இருக்கலாம். இருந்தாலும் அவர்களுக்குத் தகுதி உண்டா, இல்லையா என்பதைத் தனித் தேர்வு நடத்தித் தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் ஆணை.அதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு.அதில் தேர்வானவர்கள் தான் ஆசிரியர் ஆவதற்கான தகுதி பெற்றவர்கள்.”

“ஓகோ...பிறகெதற்கு ஆசிரியர் பட்டமோ, பயிற்சியோ? சரி, அது இருக்கட்டும். அப்படித் தமிழ்நாட்டில் எத்தனை பேர் ஆசிரியர்களாகத் தகுதி பெற்றவர்கள்?அதில் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது?”

“தகுதி வாய்ந்தவர்கள் அத்தனை பேருக்கும் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குத்தானே இந்த விழா”

“பரவாயில்லையே, தகுதி உடையவர்கள் அத்தனை பேருக்கும் வேலை என்பது சாதனைதான். எவ்வளவு பேர் மொத்தம் தேர்வு எழுதினார்கள்?”

“6.5 லட்சம் பேர்”

“தேர்வானவர்கள்?”

“அதுதான் சொன்னோமே... முதுநிலைப் பட்டதாரிகள் தவிர்த்து, கிட்டத்தட்ட 18 பேருக்கும் மேல்”

“என்னப்பா இது? அப்போ மிச்ச மிருக்கிற 6.25 லட்சம் பேர் ஆசிரியர் தகுதியற்றவர்களா?”

“தகுதியும், திறமையும் தானுங்களே முக்கிய மு. தரம்தான் நிரந்தரம். அதனால தான் இப்படி வடிகட்டி எடுத்திருக்காங்க”

“ஆமா... மொத்தம் எவ்வளவு பணியிடங்கள் காலி? அதுல எவ்வளவு பேர் நிரப்பப்பட்டிருக்கிறாங்க?எந்தெந்தப் பிரிவுல எவ்வளவு பேர் வேணும்?எவ்வளவு பேர் தேறியிருக்காங்க?”

“அது தெரியலிங்களே...”

“அட...வேலைக்குப் போடுறதுன்னா...அதுக்கு முன்னாடியே அறிவிக்கை ஒன்னு முறைப்படி கொடுப் பாங்கப்பா...எவ்வளவு இடங்கள் காலி,அதில் திறந்த நிலை போட்டி எவ்வளவு? பிற்படுத்தப்பட்டோருக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எவ்வளவு? தாழ்த்தப்பட்டோருக்கு எவ்வளவு?அதில் பெண்கள் எவ்வளவு?மாற்றுத்திறனாளிகள் எவ்வளவு?எல்லாமே விவராமா வந்திருக்குமே? அதைப் பார்த்தா தெரிஞ்சுடுமே!”

“அது வந்து... அது வந்து... அது வரலீங்களே!”

“எது வந்தது... எது வரல?”

“தேர்வானவங்களுக்கெல்லாம்வேலைகொடுத்தாச்சுங்க...ஆனால்வேலை கொடுக்கிறதுக்கான அறிவிக்கை வரலீங்க...”

“அட... நீ தெரியாம சொல்றப்பா... கண்டிப்பா வந்திருக்கும். சட்டப்படி அது வராம வேலையே போட முடியாதப்பா!”

“இல்லீங்க...எவ்வளவு இடம் காலியாயிருக்குங்கற அறிவிக்கை வரவே இல்லீங்க”

“என்ன?”

இந்த அதிர்ச்சிதான் தொடக்கம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.முடிவு வெளிவந்தது.கொஞ்சம் பேர்தான் தகுதியானர்கள். பாவம், போனால் போகுது என்று மற்றவர்களுக்கு மட்டும் மறுதகுதித் (?) தேர்வுநடத்தப்பட்டது.முடிவுவெளிவந்தது.அதில்தகுதிமதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கெல்லாம் பணிகள் வழங்கப் பட்டன. இதுவரை இல்லாத புரட்சி இது!

என்று சுபம் போட்டு முடித்து விட்டார்கள் கதையை!

ஆனால்,இதற்கு நடுவே தொக்கி நிற்கின்றன ஆயிரம் கேள்விகள்?அதற்கெல்லாம் யார் விடை சொல்வார்?

“எந்தெந்தப் பிரிவினரில் எவ்வளவு பேர் தேர்வு செய்யப்பட்டனர்? இடஒதுக்கீட்டில் வாய்ப்புப் பெற்றவர்கள் எவ்வளவு பேர்” என்று கேட்டால்...

“அப்படியயல்லாம் கிடையாது சார்... தகுதியானவங்களுக்கெல்லாம் வேலை. அதில் எல்லா பிரிவினரும் இருக்காங்க” இதுதான் பதில்.

தகுதி,தகுதி என்று இவர்கள் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லும்போதே இதில் ஏதோ மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கிறது என்று பொறி தட்டவில்லையா?

தகுதியானர்களுக்கெல்லாம் வேலை. அதில் அனைத்துப் பிரிவினரும் இருக்கிறார்கள்

சரி, தகுதிக்கான அளவுகோல் என்ன?

தகுதித் தேர்வில் தேர்வானவர்கள் பட்டியல் எங்கே?அதில் இடஒதுக்கீடு அளவுப்படியே தேர்வானவர்கள் எண்ணிக்கையும் இருக்கிறதா?இல்லை,மிகச்சரியாக அவரவர் இடஒதுக்கீடுக்கேற்ப தேர்வாகியிருக்கிறார்களா?

தேர்வு என்று முடிந்தால், அதற்கு முடிவு என்று வெளியிட்டிருக்க வேண்டுமே, அது எங்கே?

வேலைவாய்ப்புப் பெற்றவர்களின் இடஒதுக்கீட்டு விவரம் என்ன?

ஆனால் இந்த கேள்விகளை எழுப்புவதற்கான வாய்ப்பை மறந்தும் ஏற்படுத்தவில்லை, ஆசிரியர் தேர்வு வாரியம்.

ஒவ்வொரு பரிவினருக்குமான,கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு?இதுதான் மிக முக்கியமான கேள்வி.இடஒதுக்கீட்டை சந்தேகமற உறுதி செய்யும் ஒரே அளவுகோல் கட்ஆப் மதிப்பெண்கள்தானே!

சமூக நீதியின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் நடந்திருக்கும் மாபெரும் சமூகநீதி மோசடி அங்கேதான் தொடங்குகிறது.ஒட்டுமொத்தமாக சமூக நீதிக்குக் குழி தோண்டியிருக்கும் இந்தப் பணி நியமனத்தில் நடந்திருப்பது என்ன?

தகுதித் தேர்வின் மூலம் இட ஒதுக்கீட்டு அளவுகோலின்படி ஆசிரியர் தகுதி கிடைத்திருக்க வேண்டிய 2லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் படிப்பு முடித்தவர்களின் எதிர்காலத்தை இருளாக்கியது யார்?

நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து ஆணை வழங்கிய பின்னும், அடுத்த மாதமே அந்த ஆணையைக் குப்பைத் தொட்டிக்கு அனுப்பிவிட்டு,அதேபோன்ற புதிய மோசடியை அரங்கேற்றும் தைரியம் எங்கிருந்து வந்தது?

சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள்,இந்த மோசடிக்கெதிராக களம் காண வேண்டிய நாள் நெருங்குகிறது.

(நன்றி: விடுதலை நாளேடு)

Pin It