0
தானிய
விளைச்சல் இல்லை...
காயப்போட
முற்றம் இல்லை...
காவலாய் இருந்து
கதைகள் பேசிட
படிகள் இல்லை...
புடைத்தல்...
குத்தல்...
திரித்தல்...
அரைத்தல்...
எதுவுமின்றி
சிந்துதல்...
சிதறுதல் இதுவுமின்றி
சிட்டுக்குருவிகள் மட்டும்
 எப்படி?
- பே.இராஜேந்திரன், பாளையங்கோட்டை

More articles by பே.இராஜேந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.