நிலமதிரும் ஆட்டம்
ஆடுகிறார்கள் பிள்ளைகள்
புலர்காலை அந்திப்பூக்கள் இயற்றும்
வாசப்பாடல்கள் வீதியெங்கும்
இடையுருவிய குறுவாள்
நடனமிடும் காற்றில்
கட்டுடைத்த இசைப்பெருக்கு
சிதறும் கரங்களும் சிரங்களும்
உன் வாள்நுனி வசமிருந்தன அன்று
வேட்கையற்ற நிலமுறிஞ்சும்
ரத்தம் இம்முறையுனது
பறக்கவியலா மைனாக்களின்
பிசுபிசுத் தொட்டிய சிறகினை
கழுவும் மேகம் சூழடைந்து
பூக்கத் தொடங்கும் வனம்
போர்வையாகும் நீல அழகில்
துளி அழுக்கில்லை
எல்லைத்தாண்டிய கரும்புகை
நேற்று வரைந்ததே தன் கடைசியோவியம்
குப்பிவிஷம் கண்ணி வெடி
களைந்த நாளன்றில்
போர்தீர்க்கும் பந்தயம்
வெல்லும் பிள்ளை பெறுவான்
பரிசாய் குறுவாள் பளபளவென்று
சமயம் வருகையில்
வாள் சோதிக்க
எதிரிகளென எவருமில்லையினி.
புன்னகை - ஜனவரி 2011
எங்கள் காடு பூக்கும் இனி...
- விவரங்கள்
- கணேசகுமாரன்
- பிரிவு: புன்னகை - ஜனவரி 2011
More articles by கணேசகுமாரன்
- ஒரு யானையின் கனவில் ஒரு யானை இருந்தது (23 ஜன 2015)
- அணங்கு வலி மொழிந்த உடல்மொழி அரங்கு (24 அக் 2011)
- ஆயிரம் மைல்களுக்கப்பால் பெய்யும் மழை (29 ஜூலை 2011)
- சூரியப்பெண் (27 ஜூலை 2011)
- மிருக விதூசகம் - ஓர் அனுபவம் (11 ஜன 2011)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.