எதேச்சையாய்
அந்தக் கொலைவாள்
என் கைக்குக் கிடைத்தது.

அதன்
கூர்மை...
பளபளப்பு...
கொடுவசீகரம்....
யாவும் பிரமிப்பூட்டின.

மேலும் -
கொஞ்சம் பயமும்கூட ;
என் மீது பாய்ந்துவிட்டால்...?

எடுத்துச் சுழற்ற ஆரம்பித்தேன்.
எளிதாகத்தான் இருந்தது.

ஒன்று...
இரண்டு...
நூறு...
ஆயிரம்....
நண்பர்கள்...
எதிரிகள்...
யாரெனவும் தெரியாதவர்கள்...

எதிர்ப்பட்ட தலைகள்
யாவும் வீழ்ந்தன.

கைப்பிடியைத் தளர்த்தாதவரை
வாளின் கூர்முனை
என் தலைக்குத் திரும்பாது.

- ம.ஜெயப்பிரகாஷ்வேல்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.