துகள்களாய் துளிர்த்தப்
பச்சைக் கிளையில்
துகள்களாய்
அமர்ந்திருக்கிறது பறவை

பாதைச் சாரிகளோ
சற்றழுத்தக் காற்றோ
வாய்த்தால் பெய்யக் கூடிய
மழையவன்றி
பறக்கப் போவதில்லை

சற்று முன்
கிண்ணத்திலிருந்து உயிர்ப்பித்த
அக்கைகளுக்காய்
முழு இரவை ஒற்றைக் காலூன்றி
தவத்தில் கழிக்கும் அப்பறவை.

- பிரபாவரசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.