எனது அன்பின் பெருக்கில்
உன்னைச் செல்லமாய்
தட்டவிழைந்தாலும்
பலத்த அடியாகிப் போய்விடும்
அபாயம் இருக்கிறது
லேசா அணைக்க நினைத்தாலும்
எலும்புகள்
நொறுங்கிவிடலாம்
செல்லமாய்க் கிள்ளிப் பார்க்க விரும்பினால்
மண்ணள்ளும் இராட்சத இயந்திரங்களின்
விரல்கள் நினைவிலெழுந்து மிரட்டுகிறது
உன்னாலேயே அறிந்து கொண்டேன்
முத்தம் என்பது ஏன் இத்தனை
உன்னதமானதாயிருக்கிறதென்று.

- சா.முத்துவேல்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.