கடக்க முடியாத
மதில்கள் நிற்கின்றன
இரவின் எல்லைகளில்
துயரின் ஆழ்கருமை
நீர்நிற ஓவியக்கரைசலாய்
படிந்து கிடக்கிறது
ஓவியச் சட்டகத்தின் வெளியே.
நுழைவாயிலிலும்
புழைக்கடை வேலிப்படலிலும்
நிலவொளியின் புழுதியாய்
சூரியனின் செதில்களாய்
உறுத்திக்கொண்டிருக்கிறது
உன் முகம்
வெளியேறுதல் சாத்தியமற்ற
நினைவுச்சிக்கில்
கடந்து போகின்றன இரவுகள்
உன் வலது முலையின் மேல்
விழும் நட்சத்திர ஒளியின்
பிரதிபலிப்பில்
உறக்கமற்று மூடிய விழிகளுக்குள்
வெறிபிடித்து அலைந்துகொண்டிருக்கிறது
விடியலுக்கான ஒரு கனவு.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.