துணை முதல்வர் பொறுப்பு ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ‘மெட்ரோ ரயில்’ திட்ட தொடக்க விழாவில் பார்ப்பன புரோகிதர்கள் வேதம் ஓத - அதை துணை முதல்வர் பயபக்தியோடு வணங்கி ஏற்க திட்டம் தொடங்கியதாம்.
இதேபோல், தமிழக அரசு புதிதாக கட்டி வரும் சட்டசபைக் கட்டிடத்துக்கு “பூமி பூஜை” போடப்பட்டு அமைச்சர்கள் பார்ப்பன வேத புரோகிதர்கள் முன் பயபக்தியுடன் நின்றார்கள்.
பா.ஜ.க.வின் ‘இந்துத்துவா’ ஆட்சியில் நடப்பதுபோல் தி.மு.க. ஆட்சியிலும் சடங்குகள் நடக்கின்றன. இது தான் மதச்சார்பின்மை ஆட்சிக்கான இலக்கணமா? அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை அகற்றக் கோரி அண்ணா போட்ட உத்தரவை - அவரது நூற்றாண்டில்கூட செயல்படுத்தக் கூடாதா?
அலுவலக வளாகங்களில் கோயில் கட்டுவதுகூட அதிகரித்து வருகிறது. தி.மு.க. தனது கொள்கை அடையாளங்களை கைவிடுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
மதச்சார்பின்மைக்கு எதிரான இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தொடர்புடைய படைப்புகள்
இதுதான் மதச்சார்பின்மையா?
- விவரங்கள்
- பெரியார் முழக்கம் செய்தியாளர்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2009
More articles by பெரியார் முழக்கம் செய்தியாளர்
- கார் கண்ணாடி உடைப்பு பற்றி கி. வீரமணியின் அறிக்கை (12 ஜூலை 2010)
- அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார்! (28 ஜூன் 2010)
- பெரியார் படைப்புகளுக்கு எந்த பதிப்புரிமையும் கிடையாது (22 ஜூன் 2010)
- தகர்ந்தது தடை; கிழிந்தது துரோகிகளின் முகத்திரை (22 ஜூன் 2010)
- பெரியார் சொத்துக்கள்: வழக்கறிஞர் துரைசாமி எழுப்பும் கேள்வி (22 ஜூன் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.