நாத்திக காற்றில்
சாத்திக் கொள்கிறது
சடங்குகளும் சம்பிரதாயங்களும்
மடமையாய் இருந்த
தடைகள் எல்லாம் மடிந்துவிட்டது
பகுத்தறிவு பாதையில்
சூழ்ச்சமங்களாய் இருந்த வலை
சுருண்டு விட்டது
சுயமரியாதையால்
அடிமை சமுதாயம் எதிரியை
அடக்க அலையாய் எழுகிறது
விடுதலை என்னும் பெயரால்
குரல் கொடுத்தால்
அதிர்ந்துவிடும் அக்கிரகாரமே
இனி
மண்ணுக்காக அலைந்தவர்கள்
மடிந்து தான் போக வேண்டும்
மண்ணை மீட்டெடுப்போம்
ஆதி தமிழராய் நாமளே ஆளுவோம்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.