•              தமிழ்நாட்டில் ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு சமூக அமைதியைக் குலைக்க முயலும் ஜாதித் தலைவர்களைக் கண்டித்தும் -

•              தீண்டாமைக் குற்றங்களை இழைப்போர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்ய வலியுறுத்தியும் -

•              ஜாதி மறுப்பு காதல் திருமணங்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் -

•              சட்டப்படி வயது வந்தோர் தங்கள் விருப்பப்படி செய்து கொள்ளும் திருமண வாழ்வுரிமையில் குறுக்கிட்டு அச்சுறுத்துவோர் மீது உரிய நடவடிக்கை கோரியும் -

•              பிப்ரவரி 6 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்;

திராவிடர் விடுதலைக் கழகத்துடன் சாதி எதிர்ப்பு இயக்கங்களை இணைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கோருகிறோம்!

குறிப்பு: கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு முறையான அனுமதி கோரி உடனடியாக காவல் துறையிடம் விண்ணப்பிப்பதோடு உடன்பாடுள்ள அமைப்புகளோடு தொடர்பு கொண்டு செயலாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

•              சமூகத்தில் இருவேறு பிரிவினருக்கிடையே பகைமை மோதலை உருவாக்க திட்டமிட்டு செயல்படுவோர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் கழக சார்பில் கோரிக்கை மனுக்களாக அளிக்குமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

- கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

Comments

1 comment

1
ARUNTHATHIYAN-ONDIVEERAN
Welcome to All, Periyar are the Real Hero, who want to destroy this Caste, sure they can fight for this illegal activities of the Caste Hindus......... Dr.Ambedkar and Thanthai Periyar are born for defeat this caste discrimination in caste hindu India........

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.