(1881-1925)
1998
இந்திய விடுதலைப்போரில் தீவிரமாக ஈடுபட்டவர். இந்திய விடுதலை வீரர் வீர சாவர்க்காருடன் பாரதியார் ஆசிரியராக இருந்த ‘இந்தியா’ ஏட்டின் இலண்டன் நிருபராகப் பணியாற்றியவர். பாண்டிச்சேரியில் பாரதியார், அரவிந்தர் ஆகியோருடன் சேர்ந்து விடுதலைப் போராட்டங்களை நடத்தத் துணைபுரிந்தவர். ‘தேசபக்தன்’ நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றுகையில் ஆங்கில அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து எழுதியதற்காக ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றவர். சிறையிலேயே ‘கம்பராமாயணம் ஓர் ஆராய்ச்சி’ ‘கரிபால்டி’ `நெப்போலியன்’ உட்பட ஒன்பது தமிழ் நூல்களை எழுதியவர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
குருகோவிந்த சிங்கன் (அலையன்ஸ்)
சந்திரகுப்த சக்ரவர்த்தி சரித்திரம் (அலையன்ஸ்)
தன்னம்பிக்கை (மொழி பெயர்ப்பு)
திருக்குறள் (மொழி பெயர்ப்பு)
மங்கையர்க்கரசியின் காதல் (அலையன்ஸ்)
வீர சாவர்க்கர்
Kambaramayanam – A study