சென்னை- மறைமலை நகரில் 18.11.2012 அன்று நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கலைஞர் கருணாநிதி, “திராவிட இனம் நமது பூர்வீக இனம். அந்த இனத்தின் உரிமையைப் பெற இளைஞர் அணி தங்கள் பணி என்ன என்பதை வகுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் “திராவிடத்தை ஏற்காதவர்களை புறம் தள்ள வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.
“ஊக- வரலாறெழுதுதல்” என்ற அடிப்படையில் தவறான ஒரு சொல் தொல் குடியினரான தமிழர்களுக்குச் சூட்டப்பட்டு திரும்பத் திரும்ப நிலை நிறுத்தப்படுகிறது. “திராவிடர்” என்ற பெயர் தமிழினத்துக்கு வரலாற்றில் ஒரு போதும் வழங்கியதில்லை. ஆனால், தென்னிந்தியப் பகுதிக்கு வந்தேறிய ஆரியர்களை, வட இந்தியாவில் இருந்த ஆரியக் குடியினர் “திராவிடர்”( தென்புலம் குடியேறியோர்) என சமஸ் கிருத இலக்கியங்கங்களில் குறித்தனர். ஆரியத்தின் தென்கிளையே திராவிடர் ஆவர்.
தமிழினம் தன்னை ஒரு போதும் “திராவிடர்” என்று அழைத்துக் கொண்டதில்லை. எந்தத் தமிழ் இலக்கியமும் தமிழர்களைத் “திராவிடர்” என்று குறித்ததில்லை. அதுமட்டுமன்றி, தென்னிந்திய மொழியினங்கள் எவையும் தங்களைத் “திராவிடர்” என்று எந்த இலக்கியத்திலும் குறித்ததில்லை; இன்றுவரைத் தங்களைத் “திராவிடர்” என்று கருதியதுமில்லை.
திராவிடர் என்ற பழைய சொல்லுக்கு, புதிய பொருளை வழங்கியவர் பிஷப் இராபர்ட் கால்டுவெல். 1856-ஆம் ஆண்டு இராபர்ட் கால்டுவெல்லின் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” தென்னிந்திய மக்களுக்குத் “திராவிடர்” என்ற இனப் பெயரைச் சூட்டியது. “தமிழகம்” என்ற சொல்லின் திரிந்த வடிவமே “திராவிடம்” என்பது. தென்னிந்திய நிலப்பகுதியைக் குறிக்க நீண்டகாலமாகத் திராவிடம் என்ற சொல் ஆரியர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. ஆனால், தென்னிந்திய மக்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டதில்லை.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 8-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவராகக் கருதப்படும் குமாரில பட்டரின் “தந்திர வார்த்திக” என்னும் பூர்வமீமாம்ச சூத்திரத்திரத்தின் உரைக்கான் துணை உரை நூலில், பயன்படுத்தப்பட்டுள்ள “ஆந்திர-திராவிட பாஷா” என்னும் சொற்கோவையை கால்டுவெல் ஒரு சான்றாக எடுத்துக் கொண்டார். தென்னிந்திய மொழிகளை ஆய்வு செய்த கால்டுவெல், அவை ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதைக் கூறினார். குமரிலப்பட்டர் குறிப்பிடும் “ஆந்திர” என்பது தெலுங்கையும் அதிலடங்கிய கன்னடத்தையும் குறிக்கும் என்றும், “திராவிட” என்பது தமிழையும் மலையாளத்தையும் சேர்த்துக் குறிக்கும் என்றும் கூறினார்.
திராவிடம் என்ற சொல் தமிழைக் குறிக்க, பிராமணர்களாலும், தமிழ்மேதாவிகளாலும் அப்போது பயன்படுத்தப்பட்டு வந்தது. தமிழைக் குறிக்கத் “தமிழ்” என்ற சொல்லையும், மொழிக் குடும்பத்தைக் குறிக்கத், “திராவிட” என்ற சொல்லின் அடைமொழிவடிவமான “Dravidian” என்பதையும்தான் தெரிவு செய்து கொள்வதாகக் கால்டுவெல் கூறினார். “நான் காணும் சிறந்த சொல் இதுவே என்றாலும் அதுவும் குழப்பத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை” என்றும் குறிப்பிடுகிறார்.
தென்னிந்திய மொழிகள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது சரியானது. ஆனால் அதைக் குறிக்க “திரவிடியன்” என்று தன் விருப்பப்படி ஒரு சொல்லைத் தேர்வு செய்தது தவறானது. தமிழையும் தொடர்புடைய பிற மொழிகளையும் குறிப்பிட Tamulic மற்றும் Tamulian என்ற சொற்களையே ஐரோப்பியர் அதுவரை பயன்படுத்தி வந்தனர். ஆனால், கால்டுவெல் அவற்றைக் கைவிட்டு “திராவிடியன்” என்ற சொல்லை அம்மொழிகளுக்குச் சூட்டினார். திராவிட மொழிக் குடும்ப மொழிகளைப் பேசிய மக்கள் “திராவிடர்” என அடையாளப்படுத்தப்பட்டனர்.
தென்னிந்திய மக்களுக்கு இன அடையாளமாகத் “திராவிடர்” என்ற சொல்லைக் கால்டுவெல் சுமத்தினர். இந்தத் “திராவிடர்” என்ற சொல்லை வழங்கிய மூல ஆவணங்கள் மனுஸ்மிருதி, மகாபாரதம், பாகவத புராணம் போன்றவையே ஆகும். மனுஸ்மிருதி (X 43,44), “கீழ்க்காணும் சத்திரியக் குடிகள் புனித சடங்குகளை பின் பற்றாமையாலும், பிராமணர்களின் தொடர்பற்றுப் போனமையாலும் சாதியிறக்கம் பெற்று “விரிஷாலா” ஆயினர்’ என்று கூறி 12 குடியினரைக் குறிக்கிறது. “சத்திரியர்” என்று குறிப்பதன் மூலம் அவர்கள் ஆரிய வருணங்கள் நான்கில் இரண்டாவது பிரிவினர் என்பதை மனுஸ்மிருதி தெளிவுப்படுத்துகிறது. அந்த 12 குடியினரில் திராவிடரும் குறிப்பிடப்படுகின்றனர். சாதியிறக்கம் பெற்ற சத்திரியரான திராவிடர் மட்டுமே தென்னிந்தியப் பகுதியினர் என்று கால்டுவெல் கருதினார்.
இதில் சோழர், பாண்டியர் போன்ற ஆளும் குடியினரின் பெயர்கள் வட இந்தியாவில் அறியப்பட்ட ஒன்று என்றும், “திராவிடர்” என்பது அனைவரையும் சேர்த்து குறிக்கும் சொல் என்றும் கால்டுவெல் குறிப்பிடுகிறார். பாகவத புராணத்தில் குறிப்பிடப்படும் சத்தியவிரதன் என்பவன் “திராவிட மன்னன்” என்று அந்தப் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கால்டுவெல் குறிப்பிடுகிறார். தென்னிந்திய மக்களின் இனம் “திராவிட இனம்” என்று காட்டுவதற்கு கால்டுவெல் காட்டும் சான்றுகள் இவைதாம். ஆரியச்சார்புடைய, பார்ப்பனிய சமஸ்கிருத இலக்கியங்களைத்தான் கால்டுவெல் சான்று காட்டுகிறார். உண்மையில் புராண இதிகாசங்கள் குறிப்பிடும் திராவிடர்கள் யார்?
யுதிஷ்ட்ரன் ராஜசூய யாகம் செய்ய முற்பட்ட போது, சகாதேவன் திக் விஜயம் மேற்கொண்டு, திராவிடர், சோழர், கேரளர், பண்டியர் ஆகியோரை வென்றான் என்றும், பட்ட மேற்பு விழாவிற்கு சோழர், திராவிடர், ஆந்திரர் போன்றோர் வருகை புரிந்தனர் என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது. திராவிடர் என்போர் சேர, சோழ, பாண்டியர் அல்லாதவர் என்பதையும், அப்படி ஒரு திராவிட தேசம் இருந்தது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
யார் இந்த திராவிடர்கள்? எது திராவிட தேசம்? கி.பி.7 ஆம் நூற்றாண்டில் இந்தியா வருகை தந்த சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்ட பல்லவ நாட்டைத் “திராவிட தேசம்” என்று குறிக்கிறார்.
பல்லவர்கள் தங்கள் செப்பேடுகளில் தங்களைப் பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பரத்வாஜர் துரோணர், அஸ்வத்தாமன் வழிவந்தவர்கள் என்றும், தாங்கள் “சத்திரிய- பிராமணர்கள்”( சத்திரியத் தொழிலை மேற்கொண்ட பிராமணர்கள்) என்றும் விவரிக்கிறார்கள். இவர்கள்தம் திராவிட தேசத்தை ஆண்டு வந்தவர்கள்.
பல்லவர் ஆட்சி நிறுவப்பட்டவுடன்(கி.பி.400) பெருவாரியாக வட இந்திய ஆரியக் குடியினர் தென்னிந்தியாவுக்குள் புகுந்து பல்லவத் தலைநகரான காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு பரவினர். இவ்வாறு தென்னிந்தியாவுக்கு வந்தேறிய ஆரியக் குடிகளை வட ஆரியர் “திராவிடர்” என்று அடையாளப்படுத்தினர். தென்னிந்தியா திராவிடம் என்று வடமொழியாளர்களால் குறிக்கப்பட்டது. பார்ப்பனியமும், சமஸ் கிருதமும், வேதக் கல்வியும் செழித்த பல்லவ திராவிட தேசத்திலிருந்து தென்னிந் தியா முழுவதும் திராவிடர் என்ற தென் ஆரியர் பரவினர்.
அவர்கள் கைக்கொண்ட புதியவகை கடுஞ்சடங்கு முறைக்கு “திராவிட சம்பிரதாயம்” என்று பெயர். இச்சம்பிரதாயத்தைக் கைக்கொண்ட பார்ப்பனர்கள் “திராவிடர்” என அறியப்பட்டனர். தமிழகம்( கேரளம் உள்ளிட்டு), ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், கூர்ஜரம்(குஜராத்) ஆகிய ஐந்து பகுதிகளில் திராவிட சம்பிரதாயத்தைக் கைக் கொண்ட பிராமணர்கள் பரவினர். இவர்களே “பஞ்ச திராவிடர்” என அடையாளம் பெற்றனர்.
சமஸ்கிருதக் குடிவழி தொடர்பற்ற (Non – Sanskritic) மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் பேசும் பார்ப்பனர்களும், சம்ஸ்கிருதத்தில் தோற்றம் பெற்ற (Sanskritic) மராத்தி, குஜராத்தி மொழிப் பார்ப்பனர்களும் “பஞ்ச திராவிடர்” என்ற ஒரு சமூக அடையாளத்தை இவ்வாறே பெற்றனர்.
திராவிடர்கள் என்ற சொல் நீண்டகாலமாக ஆரியர்களின் தென்கிளையைக் குறிக்கும் சொல்லாக விளங்கி வந்த நிலையில்தான், கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் அச் சொல்லை தென்னிந்திய மொழிகளைப் பேசும் மக்களுக்குச் சூட்டியது. இத் தவறான பயன்பாடு 1947-இல் சுட்டிக் காட்டப்பட்டது.
என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா தனது 15- வது பதிப்பில்(1947) ஒரு வரலாற்றுத் திருத்ததைப் பதிவு செய்கிறது:
“திராவிடர்” என்ற பெயர் இந்திய வழக்கில் பார்ப்பனர்களின் தென்னகப் பிரிவை மட்டுமே குறிக்கும் பெயர் ஆகும். ஆனால், “திராவிடர்” என்ற சொல், “துரதிர்ஷ்ட வசமாக” Unfontunately) இந்தியாவில் விந்திய மலைகளுக்குத் தெற்கேயும், இலங்கையின் வடக்குப் பாதிப் பகுதியிலும் வாழும் மண்ணின் மக்களுக்கு (Indigenous peoples) பயன்படுத்தப்படுகிறது. அது (திரவிடம் என்ற சொல்) இப்பகுதிகளின் மொழிகளைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்”
அதன் பிறகு, “திரவிடியன்” என்ற சொல் ஓர் இனத்தைக் குறிக்கப்பயன்படுத்தப் படுவதைக் கூறி, தென்னிந்திய மக்களின் உடற்கூறு, பண்பாடு ஆகியவற்றை விவரிக்கிறது.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இச்சொல் சமூக உணர்வாளர்களைத் தொட்டது. “மண்ணின் மைந்தர்களான திராவிடர்களுக்குச் சூத்திரப்பட்டம் கட்டி, ஆரியப் பார்ப்பனர்கள் அவர்களை இழிநிலைக்குத் தள்ளினர்” என்ற கால்டுவெல்லின் கருத்து சமூக உணர்வாளர்களைப் பற்றிக்கொண்டது. அயோத்திதாசப் பண்டிதர், மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்றோர் “திராவிட” என்ற சொல்லைப் பயன் படுத்தினர்.
1901-அம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, இனவகையில் பதிவு செய்தனர். 1901-இல் தென்னிந்திய மக்களுக்கு “திராவிடர்” என்று இனப்பெயராகப் பதிவு செய்து அருள்பாலித்தவர் அன்றைய கணக்கெடுப்பு ஆணையாளரான சர் ஹெர்பர்ட் ரிஸ்லி. இதன் பிறகு “திராவிடர்” என்ற சொல் அதிக அளவில் பயன்படத் தொடங்கியது.
மொழியியல், மாந்தவியல், தொல்லியல் ஆகிய துறைகள் 19 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்றன. பல மொழியினங்கள் உள்ளன. தென்னிந்தியா பற்றி அய்வுகளுக்கு ஒரு “கூட்டுச் சொல்” ஆய்வாளர்களுக்குத் தேவைப்பட்டது. கால்டுவெல் வழங்கிய “திராவிடர்” என்ற சொல் ஆய்வாளர்களுக்கு வசதியாக(convenience) இருந்தது. திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் என ஆய்வுகள் தொடங்கின. ஆய்வாளர்களைப் பொறுத்தவரை அச்சொல் அவர்கள் தேவையை நிறைவு செய்தது. உண்மையில் இவை “தமிழின மொழிகள்” “மரபு தமிழினம்”, “தமிழர் நாகரிகம்” என்று அடையாளப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
திராவிடர் என்பது தமிழர்களின் பூர்வீக இனம் என்று காட்டுவதற்குக் கலைஞர் காட்டும் சான்றுகள் கருதும் தகுதியற்றவை. “ஜன கன மன “ என்னும் பாடலில் தாகூர் தென்னிந்தியாவைத் “திராவிடம்” என்று குறிப்பிடுவதைச் சுட்டுகிறார். ஆரியர்கள் அவ்வாறுதான் தென்னிந்தியவைக் குறிபிட்டனர். திராவிடர் ஓர் இனம் என்பதை இது எப்படி நிரூபிக்கும்?
மனோன்மணியம் சுந்தரனாரும் “திராவிட நல் திருநாடு” பற்றி பேசுகிறார். இதில் இனம் எங்கே குறிப்பிடப்படுகிறது?
உ.வே.சாமிநாதய்யரின் பட்டத்தைப் பார்த்தாலே அது முழுமையாகச் சமஸ்கிருதப் பட்டம் என்பது புரியும் “மகா மகோ பாத்யாய டாக்டர் திராவிட வித்யா பூஷண்” என்ற பட்டத்தில் தமிழைத் திராவிட என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 20 ஆம் நூற்றாண்டிலும் கூட ஆரியர்களும், பார்ப்பனர்களுக்கு இணையான சமூகத் தகுதி வேண்டிக் கிடந்த தமிழ்ப் புலவ மேதாவிகளும் தமிழைத் திராவிடம் என்றே குறித்தனர். இவற்றில் திராவிட இனம் பூர்விக இனம் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?
தமிழினத்திற்கோ, தென்னிந்திய பிற மொழியினங்களுக்களுக்கோ “திராவிடர்” என்ற பெயர் ஒரு போதும் இருந்ததில்லை. திராவிடர் என்ற தவறான அடையாளத்துடன் சமூக இயக்கம் எழுந்ததும், பின்னர் அரசியல் கட்சிகளாகி ஆட்சி அதிகாரம் செய்வதும் வேறு விடயம். ஆனால் “திராவிட இனம் நமது பூர்வீக இனம்” என்று இளைஞர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது உண்மைக்குப் புறம்பானது. உண்மைக்குப் புறம்பான ஒன்றைச் சொல்லிக் கொடுப்பது திராவிடக் கட்சிகளின் எதிர்கால அரசியலை உத்தரவாதப்படுத்தும் முயற்சியே ஆகும்.
தன்னை பகுத்தறிவாளர் என்று கூறிக்கொள்ளும் கலைஞர், “திராவிடம்” என்று ஓர் இனம் இருப்பதாக பரப்பும் மூட நம்பிக்கையைக் கைவிடட்டும்.
"எந்தத் தமிழ் இலக்கியமும் தமிழர்களைத் “திராவிடர்” என்று குறித்ததில்லை. அதுமட்டுமன்றி, தென்னிந்திய மொழியினங்கள் எவையும் தங்களைத் “திராவிடர்” என்று எந்த இலக்கியத்திலும் குறித்ததில்லை; இன்றுவரைத் தங்களைத் “திராவிடர்” என்று கருதியதுமில்லை. "
இந்தக் கட்டுரையாசிரிய ரின் மேற்குறிப்பிட்ட கருத்தை மறுப்பதற்கு உங்களிடம் ஆதாரமுண்டா? இக்காலத்தில் கூட திராவிடர் என்ற பதம் தனிப்பட்ட முறையில் தமிழினத்தைக் குறிக்கவில்லை. கன்னடர்கள், தெலுங்கர்கள் மலையாளிகள் எல்லோருடனும் சேர்ந்து தமிழர்களும் கும்பலில் கோவிந்தா போட்டால் தான் நாங்களும் திராவிடர்களாக லாம். தமிழன் என்ற தனித்துவமான அடையாளத்தை விடுத்து, திராவிடன் என்று கும்பலில் கோவிந்தா போட, தமிழர்கள் எல்லோரும் தயாராக இல்லை. திரு.கவி எழுதிய கட்டுரையிலாவத ு திராவிடர் என்ற பதம் தமிழினத்தை மட்டும் குறிக்கிறது என்பதற்கான ஆதாரமிருந்தால் அதை நீங்கள் இங்கு பதிவு செய்யலாமே? மறைமலையடிகள ், தேவநேயப்பாவாண ர் போன்ற தமிழறிஞர்கள் திராவிட என்ற பதம் தமிழினத்தை மட்டும் குறிப்பிடுவதாக க் கூறியிருக்கிறார ்களா?
Twa stanyam manye dharanidhara kanye hridhayatha
Paya paraabhaara parivahathi saaraswathamiva
Dhayavathya dhattham DRAVIDA SISU raaswadhya thava yat
Kaveenam proudana majani kamaniya kavayitha
Oh daughter of the king of mountains,
I feel in my mind,
That the milk that flows from your breast,
Is really the goddess of learning, Sarswathi,
In the form of a tidal wave of nectar.
For , milk given by you ,who is full of mercy,
Made the child of DRAVIDA*,
The king among those great poets,
Whose works stole one’s mind.
திரு. தொல் திருமாவளவன் அவர்கள் நவம்பர் 2012 இல் உலகத்தமிழர் மாநாட்டில் இலங்கைத்தமிழ ர்களுக்கு கொள்கை விளக்கமளித்த ு, அவர்களின் பல சந்தேகங்களுக ்கும் கேள்விகளுக்கும ் விடையளித்தார். அதில் அவர் "சாதியொழிப்பையு ம் தமிழ்த்தேசியத ்தையும் இணைத்து களமாடி வருகின்ற ஒரு இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம்" எனக் குறிப்பிட்டார். ஆனால் கீற்றில் என்னடாவென்றால் சில தலித்துகளும், அவர்களின் ஆதரவாளர்களு ம், தமிழ்தேசியத்து க்கு எதிராக அல்லது தமிழ்த்தேசியம ் சாதியொழிப்புக்க ு எதிரானது போன்று கருத்துக்களை முன்வைக்கின்றன ர். எங்கு தமிழ்த்தேசியம ் பேசப்படுகிறத ோ அங்கெல்லாம் எதிர்க்கருத்து க்களைக் கூறுவதற்கு, தமிழ்த்தேசியத ்துக்கு எதிரானவர்களு டன் ஒன்று சேர்கிறார்கள். சில தமிழரல்லாதார ின் தூண்டுதலாலும், திராவிட மாயையிலும் மூழ்கி, தமிழ்த்தேசியத ்துக்கு எதிராக அணிதிரண்டுள்ள தமிழரல்லாத திராவிடர்களின ் கைகளில கைப்பாவையாகி தலித்துகள் எல்லாம் தமிழ்த்தேசியத ்துக்கெதிரான கோடரிக்காம்புக ளாக மாறி விடுவார்களோ என்ற பயமும், ஆதங்கமும் கீற்றில் தலித்துக்களின ் ஆதரவாளர்களா க காட்டிக் கொள்பவர்களின் எழுத்துக்களைப் படிக்கும் போது என்னைப் போன்ற தமிழர்களுக்க ு ஏற்படுவது தவிர்க்கமுடிய ாதது. விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் சாதியொழிப்பையும ், தமிழ்த்தேசியத ்தையும் இணைத்துக் களமாடி வருகிற இயக்கமாக இருந்தால், சாதியொழிப்புக்க ாகப் போராடுபவர்கள ், எதற்காக தமிழ்த்தேசியத ்தையும் ஆதரித்துப் பேசுவதில்லை. தமிழ்தேசியத்த ின் வழியாகத் தான் சாதியொழிக்கப்ப டலாமென்பது, அண்ணன் திருமாவளவனுக ்குத் தெரிகிறது,அது ஏன் அவர்களது தொண்டர்களுக்க ுப் புரியவில்லை. உண்மையான தமிழ்த்தேசியவ ாதிகள் அனைவரும் சாதியொழிப்பை வேண்டுபவர்கள ே. லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் தர்மபுரியில் குடிசைகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை திருமாவளவன் குறிப்பிட்டதும ், ஈழத்தமிழர்க ள் தமது எதிர்ப்பையும்,ந ம்பமுடியாத அதிர்ச்சியையும் , அவர்களது முழு ஆதரவையும் அவருக்குத் தெரிவித்தனர். அங்கே "ஒடுக்கப்பட்ட தமிழர்களை தமிழ்த்தேசியக ்களத்தில் அணிதிரட்டிய முதலாவது இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் தான்" எனப் பெருமைப் பட்டுக்கொண்டார ் திரு. தொல். திருமாவளவன், அப்படியானால் அவர்களது தொண்டர்கள் கீற்றில் தமிழ்த்தேசியத ்தை வசைபாடுவது கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கே எதிரானதாகத் தோன்றுகிறதல்ல வா. இதற்கு முதல் காரணம் என்னவென்றால், இங்குள்ள சில திராவிடவாதிகள ் தமது எழுத்துக்களின் மூலம் சீமானை தமிழ்தேசியத்த ின் முற்று முழுதான குத்தகைதாரராக மாற்றி விட்டார்கள். அதனால் சீமானிலுள்ள காழ்ப்புணர்வை தமிழ்த்தேசியத ்தின் மீது மற்றவர்களும ் காட்டுகிறார்கள ் போல் தெரிகிறது.
இதற்க்கு பதில் சொல்லும் லட்சணத்தைப்பார் த்திர்களா? என்னமோ லண்டனில் கழட்டினார்களாம் .கீற்று தளத்தில் இக்கொடுமையை எதிர்த்து ஒரு சிறு கருத்து எழுத மனமில்லாத அசைவன்,நீட்டி முழக்குகிறார்.இ வர் யார்?
“ அரு கந்தர்
முன் கலங்க நட்ட முடை கெழுமுமால் இன்னம்
புண் கலங்கல் வைகைப் புனல்.” கழுவேற்றப்பட்ட சமணர்களின் பிணங்கள் நிறைந்து வைகை நதி நாற்றமடித்துக் கலங்கி ஓடுகிறதாம் என்று பெருமை பேசிய நம்பியாண்டார் நம்பி வழித்தோன்றல்கள் .அன்பே சிவம் என்று அன்பு வழி பேசும் வியாசர்களுக்கு சமணரும் ஒன்றே,தலித்தும் ஒன்றே!சவுந்தரலஹ ரியை சவுரியமாக கையாளும் இவர். முப்பிரி நூல் அணியும் முன் ஒரு பிறப்பு,முப்புர ி நூல் அணிந்தபின் இன்னொரு பிறப்பு என “ இருவழியும் தூயவந்த வேளாளர்.”
நெஞ்சமெல்லாம் ஆதிக்க சாதித்தீ ..சைவத்தீ.எரியு ம் நாம் தமிழர்.
அப்பனே ரெங்கசாமி, "தான் போக வழி தெரியாத மூஞ்சூறு விளக்குமாத்தைய ும் தூக்கிக் கொண்டு கிழம்பிச்சுதாம ்". தமிழர்களிடைய ேயே சாதியொழிப்பு என்பது இன்னும் சாத்தியப்படவி ல்லை, ஒடுக்கப்பட்ட தமிழர்களை ஒட்டுவங்கிகளா க மட்டும் வைத்திருக்கவும ், அவர்கள் எல்லோரும் தமிழ்த்தேசியத ்தின் கீழ் ஒன்றிணைந்தால், தமிழர்கள் ஒன்றுபட்டால், தமிழ்நாட்டில் தங்களின் ஆதிக்கத்துக்கு ஆபத்து வந்து விடுமென்பதால் தமிழரல்லாதவ ர்கள், ஒடுக்கப்பட்ட தமிழர்களைத் தலித்துகள் என்ற போர்வையில் பிரித்தாள நினைக்கிறார்கள ். மற்ற மாநிலத்திலுள்ள தலித்துக்களுக ்காக போராட வேண்டுமென்பது உயர்ந்த நோக்கம் தான், ஆனால் அப்படியான தனக்கில்லாத போது தானம் செய்யும், தேவையற்ற வரட்டுப் பெருந்தன்மை தான் தமிழர்களை இன்று தமக்கென சொந்தமாக ஒரு நாடற்ற, நாதியற்ற இனமாக மாற்றியிருக்கிற து. தமிழ்நாட்டுக்க ுப் பிழைக்க வந்த நடிகர்கள் கூட முயன்றால் முதலமைச்சராக லாம் என்ற நிலையிருக்கிறத ு. அதை விட, ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமையின் விடுதலைக்காகப ் போராட முடியும். தமிழ்த்தேசியத ்தின் மூலம் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் விடுதலை பெற்று, அவர்களின் வாழ்க்கைத்தரம ் உயர்ந்தால், அவர்களும் சமுதாயத்தில் சமத்துவத்தை அடைந்தால் மட்டுமே, அவர்களால் மற்ற மாநிலத் தலித்துகளுக்க ு உதவ முடியும். முதலில் அம்பேத்கர் போராட்டத்தை ஆரம்பித்தது மகாராட்டிர தலித்துகளுக்க ாகத் தான், அவரது போராட்டத்தால் கவரப்பட்டு, அதனால் உந்தப்பட்டு, மற்ற மாநிலத் தலித்துகளும் அவரைப் பின்பற்றினார்க ள். அம்பேத்காரை அவ்வளவுக்கு நேசிக்கும், பின்பற்றும் உங்களின் பெயர் ரங்கசாமி என்பதைப் பார்க்க குபேரன் என்ற பெயரை வைத்துக் கொண்டு பிச்சை எடுப்பது போலிருக்கிறது. வேத வியாசர் ஒரு மீனவகுலத்தைச் சேர்ந்த தமிழர், அவர் தமிழிலக்கண வழியின் படியே வேதங்களை வகைப்படுத்தின ார் என்பர். வேதம் என்பதின் தமிழ் வேர்ச்சொல் வேய்(தல்), அதாவது மறைத்தல், அதனால் தான் வேதங்களுக்கு மறை என்றும் பெயருண்டு. ஆரியர்கள் தமிழிலிருந்து தான் வேதங்களை சமக்கிருதத்தில ் மொழிபெயர்த்தன ர் என்றும் கூறுவர்.எல்லாம ் தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்டவ ை தான். ஆனால் அதை விளக்குமளவுக ்கு எனக்கு அந்த விடயத்தில் அவ்வளவு அறிவும், பரிச்சயமும் கிடையாது. ஆனால் வேத வியாசர் ஒரு தமிழன் என்ற கருத்து உண்மையோ, பொய்யோ எனக்குப் பிடித்துக் கொண்டது. நீங்கள் ரெங்கசாமி என்ற பெயரை வைத்துக் கொண்டு, அம்பேத்காரையும் துணைக்கழைத்துக ் கொண்டு தலித் விடுதலை பற்றிப் பேசும்போது, நான் வியாசன் என்ற பெயருடன் தமிழ்த்தேசியம ் பேசக் கூடாதா? :-)
திராவிட இயக்கத்தில் எல்லாம் பாமரத்தனம் (மேடை நாடகத்துக்கும் சினிமாவுக்கும் இடையே உள்ள அடிப்படை வித்தியாசம் தெரியாமல் கதை வசனம் எழுதியது மட்டுமல்லாமல் இன்றளவும் அதை நினைத்து புளகாங்கிதம் வேறு). வீதிக்கு நான்கு பிராந்திக்கடை. கூட்டத்துக்கு ஆள்சேர்க்க குவார்ட்டரும் பிரியாணியும். அனைத்தும் இலவச மயம். ஈ.வே. ராமசாமி தொடங்கிய திராவிட இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு அதன் பின்னால் போன தமிழ் மக்கள் மிகவும் மோசம் போயிருக்கிறார்க ள். காவிரி பிரச்சினை, ஒகெனக்கல் எல்லை தகராறு, முல்லைப்பெரியாற ு அணை பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, தமிழக மீனவர்கள் நாள் தோறும் தாக்கப்பட்டு சொத்துக்களுக்கு ம் உயிருக்கும் சேதம் உண்டாக்கப்படுவத ு, ஈழத்தமிழரின் பேரழிவு ஆகிய எல்லா பிரச்சினைகளும் இந்த திராவிட இயக்கத்தினரின் கொடுப்பினை. சுற்றியுள்ள மாநிலங்களும் நாடுகளும் தமிழர்களை எட்டி எட்டி உதைப்பதற்கும் ஏளனப்படுத்துவதற ்கும் இந்த திராவிட இயக்கத்தினரின் அறுபது ஆண்டு கால அரசியலே காரணம். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பார்ப்பனர்கள் செய்த தீமைகளை விட அதிக தீமைகளை இந்த திராவிடம் அறுபது ஆண்டுகளில் தமிழ் பேசும் மக்களுக்கு செய்திருக்கிறது .
இலங்கை அரசின் அரசிதழ் (Gazette) வழங்கும் தகவலின் படி 2008-ம் ஆண்டில் வன்னி பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகை நான்கு லட்சத்து இருபத்தொன்பதாயி ரத்து ஐம்பத்தொன்பது. 2009-ல் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட வன்னி மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து முன்னூற்றி என்பது மட்டுமே. ஒட்டு மொத்தமாக ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரம ் தமிழர்கள் வெறும் நான்கு மாதம் பதினெட்டு நாட்களில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரம ் மக்களில் ஒரு லட்சம் பேர் சாதாரண பொது மக்கள். இத்தனை அநியாயம் நடந்திருக்கிறது . ஆனால் தமிழகத்தில் எழுச்சி இல்லை. பல ஆயிரம் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால ில் கொத்துக்கொத்தாக மாண்டு கிடந்த போதிலும் தமிழ் நாட்டு மக்கள் தங்கள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தான் ஓட்டு போட்டார்கள். அந்த நேரத்தில் திராவிடம் தில்லியில் தன் குடும்பத்துக்கு மந்திரி பதவி கேட்டு பேரம் பேசிக்கொண்டு இருந்தது. இப்போது இத்தனை லட்சம் பேர் செத்தது கூட வெளியுலகுக்கு தெரியப்படுத்தாம ல் மறைக்கப்படுகிறத ு. இந்த எண்ணிக்கை வெளியுலகுக்கு தெரியப்படுத்தப் பட்டால் தான் அந்த மக்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது அரசியல் உரிமையை பெற்று கொடுக்க வழி ஏற்படும். ஆனால் இங்கே அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. டெசோ மாநாடு மாதிரியான பித்தலாட்டம் தான் நடந்து வருகிறது.
தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையுள் ள மாநிலம். இந்த மாநிலத்தில் பாயக்கூடிய பெரும்பாலான ஆறுகளின் தோற்றுவாய் சுற்றியுள்ள மாநிலங்களில் அமைந்து இருப்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகத்துக்கு வரவேண்டிய பல பகுதிகள் திராவிட கட்சிகளின் பாராமுகம் காரணமாக கைவிட்டு போனதால் தான் இந்த நிலை. இதை சாக்காக வைத்து அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டை தங்கள் பிடிக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செய்ய முயற்சிக்கின்றன . சுற்றியுள்ள மாநிலங்களின் அடாவடித்தனத்தால ் தமிழகம் நீர் முற்றுகைக்குள் சிக்கி தவிக்கிறது. அண்டை மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் அவ்வப்போது தாக்கவும் படுகிறார்கள். இது இப்படி இருக்கையில் தமிழகத்தில் இருக்கும் குறைந்தபட்ச நீராதாரங்கள் எந்த லட்சணத்தில் பராமரிக்கப்படுக ின்றன என்பது இன்னொரு கேள்வி. கர்நாடகம் நீர் மிகை மாநிலம் என்றாலும் அங்கிருக்கும் ஆறுகள், ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் ஆகியன அம்மாநில பொதுப்பணித்துறை யால் மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்படுக ின்றன. ஆனால் இங்கே எல்லாம் ஊழல் மயம். தாமிரபரணி ஆறு தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே ஓடக்கூடிய ஆறு. இன்று அதன் கதியை பார்ப்பவர்கள் ரத்தக்கண்ணீர் வடிப்பார்கள். இருக்கக்கூடிய நீர்நிலைகளில் சாயப்பட்டறை உள்ளிட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் குற்றவுணர்வே இல்லாமல் கலக்கப்பட்டு விளைநிலங்கள் மலடாக்கப்படுகின ்றன. திராவிட அரசியல்வாதிகளின ் புண்ணியத்தாலும் அரசு இயந்திரத்தின் அலட்சியத்தாலும் நீர்நிலைகள் தூர்க்கப்பட்டு ரியல் எஸ்டேட்கள் முளைக்கின்றன. கேரளாவிலும் ஓரளவுக்கு கர்நாடகத்திலும் ஆற்று மணலை அள்ளுவதற்கு தடை உண்டு. ஆனால் தமிழ்நாட்டின் ஆறுகளில் இருந்து கடுமையான முறையில் சுரண்டப்படும் மணல் வெளிமாநிலங்களுக ்கும் வெளிநாடுகளுக்கு ம் அனுப்பப்படுகிறத ு. இங்கே இருக்கும் கல், மண் எல்லாவற்றுக்கும ் இதே கதி தான். இன்னும் இருபது ஆண்டுகளுக்கு பிறகான தமிழகத்தின் நிலையையும் தமிழர்களின் கதியையும் நினைத்தால் குலை நடுக்கம் தான் ஏற்படும்.
செம்மொழி தமிழ் மாநாடு என்னும் கூத்தின் போது நடந்த அராஜகத்தையும் மோசடியையும் கண்டு வெம்பிய ஜப்பானிய தமிழறிஞர் பேராசிரியர் கரஷிமா அவர்கள் “Tamil Nadu is suffering from intellectual vacuum” என சொன்னார். அகில இந்தியாவிலேயே, உலக அளவில் மதிக்கப்படும் படித்தவர்களையும ் அறிவுஜீவிகளையும ் அதிகம் கொண்ட மாநிலங்கள் மேற்கு வங்காளமும் கேரளாவும். வறுமையும் பிற்போக்குத்தனம ும் மலிந்த இந்தி பேசும் மக்களும் அறிவுஜீவிகளை அதிகம் கொண்டிருப்பதில் பின் தங்கியவர்கள் அல்லர். தத்தம் மாநிலங்களின் மீதும் மக்களின் மீதும் பற்றும் பாசமும் வைத்துள்ள இந்த புத்திஜீவிகள் வெளியிடும் கருத்து உலகளவில் எடுபடுவதில் வியப்பில்லை. இந்த முல்லைப்பெரியாற ு அணை விவகாரத்தையே எடுத்துக்கொள்வோ ம். இந்த விவகாரம் வெடித்த போது இந்திய மற்றும் சர்வதேசிய ஊடகங்களில் கேரளத்துக்கு ஆதரவான செய்திகளும் விமர்சனங்களுமே வெளிவந்தன. சென்னையில் இருந்து வெளியாகும் “த ஹிண்டு” மற்றும் “டைம்ஸ் ஆஃப் இண்டியா” ஆகிய நாளேடுகளில் கூட இதே நிலைமை தான். தமிழகத்தின் பக்கம் நியாயமும் தர்மமும் இருந்தாலும் அதன் தலைநகரத்தில் செயல்படும் ஆங்கில ஊடகங்களே அவற்றை கண்டு கொள்ளாததற்கு என்ன காரணம்?. அது மிக எளிமையானது. சென்னையில் செயல்படும் ஆங்கில ஊடகங்களில் கூட மலையாளிகள் தான் (பார்ப்பனர்களுக ்கு அப்புறம்) செல்வாக்கு செலுத்துகிறார்க ள். ஐம்பது ஆண்டுகால திராவிட இயக்கத்தின் சாதனைகளில் இதுவும் ஒன்று. அது மட்டுமல்ல. சென்னையில் “ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்” என்னும் இதழியல் கல்லூரி சசிகுமார் என்னும் கேரளத்தவரால் தொடங்கப்பட்டு “த ஹிண்டு” வகையாறாக்களால் பராமரிக்கபடுகிற து. சர்வதேச தரம் வாய்ந்த இந்த கல்லூரியில் மலையாளிகளும் பார்ப்பனர்களுமே படிக்கிறார்கள். (தமிழர்கள் ஏன் இந்த கல்லூரியில் படிக்கவில்லை என கேட்காதீர்கள், அது இன்னொரு திராவிட இயக்க சாதனை). இந்த கல்லூரியில் படித்து வெளிவருபவர்கள் உள்ளூர் ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை பணிக்கு சேர்கிறார்கள். திராவிட இயக்கத்தினரின் இடஒதுக்கீட்டு அரசியல் தேசிய மற்றும் சர்வதேசிய அரங்குகள் மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்கா கவும் தமிழர்களுக்காகவ ும் குரல் கொடுக்கவும் வாதாடவும் தகுந்த புத்திஜீவிகளை உருவாக்கவேயில்ல ை. முல்லைப்பெரியாற ு அணை விவகாரம் பற்றி ஜப்பானிய மொழி அல்லது சீன மொழி பத்திரிக்கைகளில ் கூட கட்டுரை எழுதி ஆதரவு தேட கேரளத்தில் ஆட்கள் உண்டு. இங்கே தமிழ்நாட்டில் யார் இருக்கிறார்கள்? .
தமிழர்கள் எப்போதுமே “Labour Class People” ஆகவே இருகிறார்கள் (கூலிக்கார பசங்க!). அந்தக்காலத்தில் இங்கிருந்து இலங்கை, மலேசியா, மொரீசியஸ், தென்னாப்பிரிக்க ா ஆகிய நாடுகளில் கூலி வேலை செய்ய அடிமைகளாக போனார்கள். இப்போது தகவல் தொழில்நுட்ப துறை கூலிகளாக உள்ளார்கள். நிறைய பேர் படித்துள்ளார்கள ். எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறார ்கள். பலர் கார் வைத்திருக்கிறார ்கள். சிலர் நேர்த்தியான வீடுகளை கட்டியுள்ளார்கள ். அவ்வளவு தான். மும்பை தாராவி சேரியில் பெரும்பாலானவர்க ள் தமிழர்கள். மலேசியாவில் கோலாலம்பூர் விமானநிலையத்தில ் பெரும்பாலான கக்கூசுகளை நடத்தி பராமரிப்பவர்கள் தமிழர்கள். இலங்கையில் தோட்ட வேலை செய்வது படிப்பறிவு இல்லாத மொடாக்குடி தமிழர்கள். தில்லியில் வீட்டு வேலை செய்வது தமிழ்ப்பெண்கள். எல்லாம் “Unskilled Labour”. கேரளத்தில் ரயில்களிலும் மற்ற பொது இடங்களிலும் பிச்சை எடுப்பவர்கள், எஸ்டேட்களில் கூலி வேலை செய்பவர்கள், வீடு வீடாக போய் கக்கூசு கழுகுபவர்கள், அங்கு பொது இடங்களில் மலஜலம் கழிப்பவர்கள் யாவரும் தமிழர்களே.
அதிகாரத்திலோ அதிகாரத்துக்கு நெருக்கமாகவோ தமிழர்கள் எப்போதும் இருந்ததில்லை. இப்போதும் அப்படியே. “திராவிடம்” , “திராவிடர்”, “சமூக நீதி”, “இட ஒதுக்கீடு”, “பார்ப்பனர் சூழ்ச்சி”, “ஆரியர் ஆதிக்கம்”” ஆகிய வார்த்தை ஜாலங்களை வைத்து கடந்த அறுபது ஆண்டு காலமாக தமிழ் பேசும் மக்களை காட்டியும் கூட்டியும் கொடுத்து அவர்களின் வாழ்வு, வளம் ஆகியவற்றை ஒரு கும்பல் சூறையாடி வருகிறது. இன்னும் எத்தனை காலத்துக்கு தமிழ் மக்களின் தலையில் இந்த கும்பல் மிளகாய் அரைக்குமோ தெரியவில்லை.
நன்றி! திரு.வியாசன் அவர்களே,உங்களைப ்பற்றி நீங்கள் தெளிவு படித்திய பிறகு நான் மீண்டும் மீண்டும் உங்களுடன் கருத்துப்பிழையு டன்? கதைப்பது சரியல்ல.உத்தரவு வாங்கிக்கொள்கிற ேன்.குலோத்துங்க ன் அய்யா அவர்களுக்கு.... தங்கள் எழுத்தும்,கருத் தும் அட்சர லட்சம். நன்றி! அய்யா!
இணையத்தளங்களில் பிரபலமடைவத ற்காகவும், திராவிடவாதிகள ினதும், திராவிடக்கட்ச ிகளினதும் ஆதரவைப் பெறுவதற்காகவ ும் பெரியாரைத் தூக்கிப்பிடித்த ு பெரியாரிஸ்டுக்க ளாக, முஸ்லீம் ஆதரவாளர்களா க, ஏன் தாழ்த்தப்பட்ட வர்களாகக் கூட நடித்த ஈழத்தமிழர்க ளுமுண்டு. சிலர் தமது வலைப்பதிவுகள ில் அசைக்க முடியாத, கடவுள் மறுப்பு பெரியாரிஸ்டுக்க ள், விடிந்ததும் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள ஈழத்தமிழர்க ளின் கோயில்களில் வெறும் மேலுடன் சைவப்பழங்கள ாக தேரிழுக்க முன்னுக்கு நிற்பவர்கள். அப்படியெல்லாம் வேடம் போட எனக்குத் தெரியாது. அதனால் தான், என்னைப் பொறுத்தவரையில ் சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை மட்டுமல்ல, பிரியக் கூடாதவை, என்பதைக் கூறுவதற்கு நான் ஒருபோதும் தயங்கியதில்ல ை.
திராவிட சொல்லாராய்ச்சிக ்கு செலவிட்டக்காலத் தை வீட்டில் இரண்டு மரம் வளர்க்கப் பயன்படுத்தியிரு ந்தால் ஏதும் ந்ன்றாக இருந்திருக்கும்.
தமிழன் என்ற சொல் சிலருக்கு நல்ல வணிகத்துக்குப் பயன்படுகிறது.கா சி ஆனந்தன், அவரது குழுக்கள் இந்த வார்த்தையை பிடித்துக்கொண்ட ு காலம் தல்லுகிறார்கள். நெடுமாறன், செயராமன் போண்றோர் பரிதாபத்திற்குர ியவர்கல். ஒருவழியாக குழப்பத்தை உண்டாக்கி இந்திய பார்ப்பன உளவுத்துறைக்கு கேளா உதவிகளைச் செய்து வருகிறார்கல்.
பார்ப்பனரும் தமிழரே என்ற நிலை வர மிகநீண்டகாலமாக இந்தியபார்ப்பனர ் முயல்கிறார்கள். ஜெயவர்த்தனா 60க்கு மேற்பட்ட பார்ப்பன புரோகிதர்கலைக் கொண்டுபோய் இலங்கையில் அமர்த்தினார். அதன் வெற்றி இன்றும் புலிகளிலும், புலிஎதிர்ப்பிலு ம் ஊடாடமிடிகிறது. திராவிட எதிப்பு போதையில் ஈழ புலம்பெயர் தமிழரின் பொருளாதாரம் கசிவதில் நனையும் அறியாதோர்கள் தமிழினத்திற்கு துரோகம் செய்கின்றனர்.
ஐயா அரபுக்கொழுந்தே,
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில் தமிழ்பேசும் முஸ்லீம்கள் தமிழர்களல்ல ஆனால் பார்ப்பனர்கள ் தமிழர்களே. தமிழைப் பேசினாலும் தாங்கள் தமிழர்களல்ல என்கிறார்கள் முஸ்லீம்கள் ஆனால் உலகத்தில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழைப் பேசி, தங்களைத் தமிழர்களாக பெருமையுடன் அடையாளப்படுத் துகிறார்கள் பார்ப்பனர்கள் . இலங்கையில் தமிழ்பேசும் முஸ்லீம்கள் மட்டும், சிங்களவர்கள ுக்கு உதவி செய்து ஈழவிடுதலைப் போராட்டத்தின் முதுகில் குத்தி, தமிழர்களுக்க ுக் கூட இருந்தே குழிபறிக்காமல ிருந்தால் இன்று இலங்கையில் தமிழர்களுக்கெ ன்றொரு நாடு பிறந்திருக்கும ், தமிழீழத்தில் வாழும், தமிழர்கள்- முஸ்லீம்கள், அனைவரதும் ஒற்றுமையின் முன்னால் மலையாளிகளினத ும், திராவிடத்தால் சீண்டப்பட்டு, பழிவாங்கத் தருணம் பார்த்துக் கொண்டிருந்த இந்தியப் பார்ப்பனர்கள ினதும் சதியெல்லாம் வெற்றி பெற்றிருக்காது. அரேபியாவில் விசுவாசம் கொண்டு, அரேபியக் கலாச்சார நடையுடை பாவனைகளைக் கைக்கொண்டு, அரபுப்பெயர்கள ுடன், அரபுமயமாக்க ப்பட்டு, பலத்தீனியக் குழந்தைக்குப் பல்விழுந்தால் கூட வீதிகளைத் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டும், ஈழத்தில் தமிழ்க்குழந்த ைகள் கொல்லப்படும் போது, புலிகள் அழிக்கப்படுவத ாக உள்ளூர மகிழ்ந்து கொண்டுமிருந்த தமிழ்நாட்டு முஸ்லீம்களை விட, ஈழவிடுதலைப் போரில் தனதின்னுயிரை நீத்த மாவைக்குமரன் போன்ற மாவீரர்களைத் தந்த பார்ப்பனர்கள் தமிழர்கள் தான் என்பதை எந்த உண்மையான ஈழத்தமிழனும் மறுக்க மாட்டான்.
RSS feed for comments to this post