அலை கடலுக்கு அப்பால்
தமிழ் உறவுகளின்
அழுகுரல் கேட்கிறது.

இங்கு,
ஒலிபெருக்கிகளில்
தலைவர்களின்
உரத்த குரல் கேட்கிறது.

அழுகுரலை
அதிகம் கேட்பது
நானா? நீயா?

வெட்டிமன்றத்தில்
தலைவர்களின்
வீரம் வெளிப்படுகிறது!

நடுவர்களாகத்
தமிழ்நாட்டு
இளைஞர்கள்

நல்ல தீர்ப்பு
நாளை வரும்!

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.