என்னால் முடியாது!
மலம் சுமக்கும்
மனிதன்
இருக்கும் வரை
மலரின் மென்மை பற்றி
கவிதை எழுத.

*****

பக்கத்து இருக்கை
பயணியிடம்
புன்னகை கூட
செய்யாமல்
நீள்கிறது பயணம்
தூரத்துச் சிறுமி
கையசைத்த படியே
கற்றுத் தந்தாள்
அன்பை.

- ராசை.கண்மணிராசா

More articles by ராசை.கண்மணிராசா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.