MH370

கடந்த 2014 ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருத்து Flight MH370, 239 பயணிகளுடன் பீஜிங் செல்லும் போது நடுவானில் திடீரென மாயமானது. அந்த விமானம் குறித்து இதுவரை எவ்வித தெளிவான தீர்வும் கிடைக்கவில்லை.

இதுவரை இந்த விமானத்தைத் தேடுவதற்காக 133 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தேடல் நடந்துள்ளது.

பிப்ரவரி 28, 2016 ல் Mozambique கடற்கரை பகுதியில் ஒரு விமானத்தின் உடைந்த வால் பகுதி கண்டறியப்பட்டது. அந்த வால் பகுதி MH370 ரக விமானத்தின் வால் பகுதியை ஒத்திருந்தது.

அதே போல் ஜூலை 29, 2015ல் ஆப்பிரிக்காவிற்கு அருகில் Saint-Andre, Reunion தீவு பகுதியில் அதே MH370 ரக விமானத்தின் உடைந்த இறக்கை பகுதி கண்டறியப்பட்டுள்ளது.

இவை இரண்டும் தான் இந்த இரண்டு ஆண்டுகளில் நமக்குக் கிடைத்த தடயம். அதுவும் யூகத்தின் அடிப்படையில் தான் உள்ளதே தவிர அதில் இருந்த 239 பயணிகளின் கதி என்னவென்று தெரியவில்லை.

மேலும் Boeing 777-200ER ரக ஜெட்கள் தரமானவை, எனவே இயந்திர கோளாறு ஏற்பட்டிருக்க வாய்பில்லை எனக் கூறுகிறது ஆய்வறிக்கை.

தற்போது இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவில் இருந்து 1,000 மைல் மேற்கே அதாவது சென்ற வாரம் வால் பகுதி கிடைத்த இடத்தைச் சுற்றி Sonar ஆய்வு நடைபெறுகிறது.

அதேபோல் இறக்கைப் பகுதி கிடைத்த Reunion தீவுப்பகுதியில் இதுவரை 33,000 சதுர மைல்கள் தேடுதல் வேட்டை நடத்தியும் பயனில்லை. எனவே இன்னும் 13,000 சதுர மைல்கள் விரிவுபடுத்த உள்ளனர்.

இவை அனைத்துமே வெறும் யூகத்தின் அடிப்படையிலேயே உள்ளது. 08/03/2014 ல் MH370 விமானத்திற்கு என்ன நடந்தது, அதிலிருந்த 239 பயணிகளின் கதி என்ன என்ற கேள்விக்கான விடை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

- ஷேக் அப்துல் காதர்

Pin It