திருநெல்வேலியைச் சேர்ந்த 12 வயது நிரம்பிய விசாலினியைத் தெரியுமா?. எனக்கு நடிகர் விசாலைதான் தெரியும், யார் இந்த விசாலினி என்பவர்களுக்கு! விசாலினி உலகின் மிக அறிவுத்திறன் மிகுந்த பெண். I.Q எனப்படும் அறிவுத்திறனில் கின்னஸ் சாதனை படைத்தவர். இவரின் திறன் அறிவியல் அறிஞர் ஐய்ன்ஸ்டீனை விட மிகவும் அதிகம்.

vishaliniஒருவரின் புத்திக்கூர்மை அல்லது அறிவுத்திறனை I.Q என்று அளவிட்டுச் சொல்ல முடியும். ஆனால் இதற்கு மேலயும் ஒருவரின் அறிவுத்திறனை அளக்கும் அளவுகோல்கள் உண்டு. அது “Emotional Intelligence” என சொல்லப்படும் “EIQ/EQ” ”உணர் அறிவுத்திறன்” என்பதாகும். I.Q ஐ விட 3 மடங்கு பெரியது. அது என்ன என்பதைக் காண்போம்.

”உணர் திறனறிவு” என்பது நாம் எவ்வாறு நம்முடைய உணர்வுகளையும், மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு இறுதிவரை அவர்களுடனான உறவுகளைப் பேணுவதாகும். டானியல் கோல்மேன் என்ற அமெரிக்க உளவியல் நிபுணர் இதனை 5 கூறுகளாக பிரித்துள்ளார். அதையாவன,

1. தன்னையறிதல் (self-awareness)
2. சுயகட்டுப்பாடு (self-regulation)
3. ஊக்கமுடமை (motivation)
4. சமூக அறிவு (social skills)
5. பச்சாதாபம். (Empathy)

தன்னையறிதல் (self-awareness)

தன்னையறிதல் என்பது ஒர் கலை. பிறரை அறிந்தவன் புத்திசாலி, தன்னை அறிந்தவன் ஞானி என்பது சீனத்து ஞானி ஒருவரின் வாக்கு. சரி, நான் என்னை அறிந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு புத்தரைப் போல போதிமரத்தடியை தேடிச் செல்ல வேண்டியதில்லை. போதிமரத்தை தேடிச்செல்ல நாம் ஒன்றும் புத்தனும் அல்ல. பிறகு எப்படி ..

தன்னையறிதல் என்பது நாம் நம்முடைய உணர்வுகள், விருப்பங்கள், வெறுப்புகள், வாழும் முறை, ஆளுமைத் திறன், பலம், பலவீனம் போன்றவற்றை தெரிந்தும், புரிந்தும் வைத்திருப்பது ஆகும். சில வழிமுறைகள் மூலம் இதனை புரிந்து கொள்ளலாம்.

 நாம் நம்மிடமும், பிறரிடமும் நேர்மையாக இருக்க வேண்டும். நேர்மையாக இருத்தல் என்பது தன்னை அறிந்து கொள்ள நாம் எடுக்கும் முதல் செயல்.

 பிறர் நம்மைப் பற்றி ஏன் இப்படி நினைக்கிறார்கள் என்பதை அவர்கள் இடத்தில் இருந்து தெரிந்து கொள்ளுதல். ஒருவேளை அவர்கள் சொல்வது சரியென்றால் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும், தவறு என்றால் புரிய வைக்க வேண்டும்.

 கடந்த கால நிகழ்வுகளின் மூலம் நாம் செய்த தவறுகளை அறிந்து கொண்டு, வருங்காலத்தில் அதே தவறை செய்யாமல் தடுக்க வேண்டும்.

 எந்த நிகழ்வில் எப்படி நடந்து கொண்டோம், ஏன் அது போல நடந்த்து, போன்ற வற்றை குறிப்பு எடுத்துக் கொள்வதன் மூலம், நம்மை பற்றி தெரிந்து கொள்ளாலாம்.

சுயகட்டுப்பாடு

சுயகட்டுப்பாடு என்பது, நாம் எவ்வாறு நம் உணர்வுகளை சரியான முறையில் வழிநடத்துவது மட்டும் அல்லாமல் சரியான மற்றும் எற்றுக் கொள்ளத்தக்க முறையில் வெளிப்படுத்துவதும் ஆகும். உதாரணதிற்கு, நீங்கள் மேலாளராக இருக்கும் வங்கியில், உங்களிடம் மிகவும் திறைமையான ஊழியர் ஒருவர் நெடுநாளக வேலை செய்கிறார். ஒரு நாள் ஒர் கலந்துரையாடலில் அவர் தெரியாமல் செய்த சிறு பிழைக்காக , பொது இடம் என்றும் பார்க்காமல் அவரை திட்டி விடுகிறீர்கள். அவரும், இதை மிகப்பெரிய அவமானமாக கருதி வேலையை விட்டுவிடுகிறார். அவரைப்போல இன்னொருவர் கிடைக்க உங்களுக்கு பல வருடங்கள் தேவைப் படலாம். உங்களுக்கும் இழப்பு, அவருக்கும் இழப்பு. இதையே நீங்கள், அவரை தனிமையில் அழைத்து, இந்தத் தவறை சுட்டிக்காட்டி இருந்தால், அவரும் வேலையில் நீடித்திருப்பார். உங்களுக்கும் இழப்பு கிடையாது. எனவே உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்துவது மிகவும் அவசியம். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி, அதனை, சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். இதோ சில சுயக்கட்டுப்பாட்டு வழிமுறைகள்.

 வேண்டும் என்றே சிலவற்றைச் செய்தல். உங்களை மருத்துவர் தினமும் நடக்கச் சொல்லியிருக்கிறார். அனால், உங்களுக்கு சோம்பேறிதனத்தின் காரணமாக விருப்பமே இல்லை, அனாலும் நடந்தே ஆக வேண்டும். இப்படிப் பட்ட நிலையில், கடைகளுக்க்குச் செல்லும் போது வேண்டும் என்றே வண்டிச்சாவியை வீட்டிலேயே வைத்துவிட்டு வரவேண்டும். இவ்வாறு திட்டமிட்டுச் செய்வதன் மூலம் உங்களை கட்டுப்படுத்தலாம்.

 நீங்கள் எந்த நேரங்களில் அல்லது இடங்களில் உங்களை அறியாமல் நடந்து கொள்கிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டு அதனை தவிர்த்தல் அல்லது அதனை விட்டு விலகிப்போதல் அல்லது வேறு ஒர் வேலையில் கவனத்தை செலுத்துதல்.

 எப்போதெல்லம் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது என்பதை குறிப்பெடுத்துக் கொண்டு, மறுமுறை அதே போல நடந்தால் முன்செய்த தவறை எப்படி திருத்திக் கொள்வது என்பதை திட்டமிடுதல்.

 தன்னை கட்டுப்படுத்த முடியாத நேரங்களில், ஆழ்மூச்சுப் பயிற்ச்சி, பத்திலிருந்து கீழாக எண்ணுதல், தியானம், ஒர் நிமிட மவுனம், பிடித்த பாடலை அசைபோடுதல் போன்றவற்றைச் செய்வத்ன் மூலம், நம்மைக் கட்டுப்படுத்த முடியும்.

ஊக்கமுடைமை

ஊக்கமிருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான் என்பது நம்மிடம் இருக்கும் பழமொழி. அடுத்தவர் நம்மை ஊக்குவிக்காவிட்டாலும் , நம்மை நாமே ஊக்கப்ப்டுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நம்மிடம் எதிர்ம்றை எண்ணங்கள் வலுப்பெற்றுவிடும். தூக்கமின்மை, உடல் மற்றும் மனச்சோர்வு, உணவை அறவே வெறுப்பது, மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல், சிந்தணைக் குறைபாடு என்பன எதிர்மறை எண்ணங்களால் வரும் கடும் விளைவுகள். எவ்வாறு இந்த்த திறனை வளர்த்துக் கொள்வது?

 இயல்பு நிலையை விட்டு வெளியே வரவேண்டும். புதியனவற்றை செய்ய விளைவுகளைப் பற்றி கவலை கொள்ளாமல் இருக்க வேண்டும்.

 தவறு செய்யாமல் எவராலும் இருக்க முடியாது,மேலும், செய்த தவறை நினைத்து மனம் ஒடிந்து போய்விட வேண்டாம். மாறாக அந்த தவறு எதனால் நடந்தது,அதை எவ்வாறு சரி செய்வது, வருங்காலத்தில் எவ்வாறு தவிர்ப்பது என்பதைக் குறித்து திட்டமிடுதல்.

 பிரச்சனைகள் இல்லதா மனிதர்கள் இல்லை, எனவே, இதனைக் கண்டு மனம் துவளாமல், எதையும் ஒரு எதிர்கொள்ளும் மன உறுதியையும், நேர்மறை என்ணங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 துவங்கிய செயலை முடிக்க வேண்டும், எந்தச் சூழலிலும் நிறுத்தக் கூடாது.

 நம்முடைய அறிவையும், திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் .உதாரணம்: புத்தங்கள் படிப்பது.

 உங்கள் குறிக்கோள்களை சித்திரங்களாகவும், படமாகவும், வரைந்தும், எழுதியும் வைத்துக் கொள்ளுதல், உங்களை சிந்தணையை தூண்டும். உங்கள் அறையின் சுவற்றில் வைத்திருப்பது, உங்கள் குறிக்கோளை நோக்கி உங்களை உந்தித் தள்ளும். (இதனைப் பற்றி பின்னர் விரிவாக காணலாம்)

 உங்கள் கனவுகளை பல பகுதிகளாக பிரித்து , ஒவ்வொன்றிக்கும் ஒர் காலக்கெடுவை முடிவு செய்து, அதற்குத் தேவையானவற்றைச் செய்யவும்.

 உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கனவுகளை உங்காளால் நிறைவேற்ற முடியும், யாராலும் தடுக்க முடியாது.

சமூக அறிவு :

மனிதன் என்பவன் ஒர் சமூக விலங்கு. அவனால் தனியாக எதும் செய்ய முடியாது. சமூகத்தைச் சார்ந்த்துதான் இருக்க் வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல், நம் வாழ்நாளில் பாதியை நாம் வெளியிடங்களிலும், நண்பர்களோடும், அலுவலகத்திலும் கழிக்கின்றோம். புது இடங்களுக்கும், நாடுகளுக்கும் செல்லும் போது எவ்வாறு நண்பர்களை சேர்த்துக் கொள்வது, எப்படி பழகுவது என தெரிந்து வைதிருப்பது அவசியம். ஆகவே, நமக்கு சமூக அறிவு மிகவும் தேவையான ஒன்று.

சமூக அறிவு என்பது, நாம் எவ்வாறு பிறரின் உணர்வுகளை நிர்வாகம் செய்கிறோம் என்பதாகும். நம்முடைய சமூக அறிவை வளத்துக்கொள்ள சில வழிமுறைகள்.

 பிறர் சொல்வதை கவனமுடன் கேட்கவும். கேட்பதைப் போல நடிக்காமல் உண்மையான விருப்பத்துடன் கேட்கவும்.
 நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதே போல, பிறரையும் நடத்துங்கள்.
 எந்தச் சூழலிலும் நேர்மறையான எண்ணங்களோடு இருத்தல்.
 நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுதல். ஒருவரை காயப்படுத்துவது நகை உணர்வாகாது.
 புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுதல்.

பச்சாதாபம்

children 600
பச்சாதாபம் என்பது, நாம் எவ்வாறு மற்றவர்களின் உணர்வுகளையும், நம்முடைய செயல்கள் எவ்வாறு அடுத்தவரை பாதிக்கும் என்பதை அறிவதாகும். உதாரணதிற்கு. இரண்டு பேர் அடங்கிய உங்களது குழுவில் பணிபுரியும் உங்கள் தோழியின் கணவருக்கு திடீரேன நெஞ்சு வலி, அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவரால் இரண்டு நாட்களுக்கு வரமுடியாது. அனால், நீங்களோ நாளைக்குள் உங்கள் திட்டத்தை முடிக்க வேண்டும். மற்ற ஊழியர்களும் அவரவர் வேலையில் இருக்கிறார்கள், உங்களுக்கு உதவ முடியாது. இப்போது , நீஙக்ள் உங்கள் தோழியின் வேலையையும் சேர்த்து செய்து கொடுக்கப்பட்ட காலகெடுவுக்கு திட்டத்தை முடித்து விடுகீர்கள். இதுவே பச்சாதாபம் (empathy). அதாவது, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வது. இத்திறனை வளர்க்க இதோ வழிமுறைகள்.

 பிறரிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்கள் சொல்வதை முழுதாகவும், முழு விருப்பத்துடனும் கேளுங்கள்.
 ஒருவர் பேசுவதற்கு முன் , குறுக்கே பேச வேண்டாம். எதேனும் கேள்விகள் இருப்பின், அவர் பேசியபின் கேட்கவும்.
 நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்ளுதல்.
 பிறரின் நிலையையும் அவர்கள் இடத்திலிருந்து புரிந்து கொள்ளுதல்.
 வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல்.
 கேட்டால் மட்டும் அறிவுரை வழங்கவும்.

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில், அலுவலகத்தையும், இல்லத்தையும், நண்பர்களையும் நிர்வகிக்க EQ- எனப்படும், ”உணர் திறனறிவு” மிகவும் தேவையான ஒன்று. மேலும், இது பிறந்தவுடனே இருக்கும் தனித் திறைமைகள் அல்ல. சித்திரமும் கைபழக்கம் என்பதைப் போல, பயிற்ச்சி செய்தால் போதும். நாமும் வளர்த்துக் கொள்ளலாம். என்ன தயாரா?

தகவல் /படங்கள் : இணையம்.

- ஜே.எம்.வெற்றிச்செல்வன்

Pin It