லக்னோவில் செயல்பட்டுவரும் பீா்பால் சானியின் தொல்தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (Birbal Sahni Institute of Palaeobotany) இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்திலிருந்து “பாறையின் தாவரவியல்” ("Botany of rock") என்ற கருத்தினடிப்படையில் தன் ஆராய்ச்சியை நிகழ்த்தி வருகிறது. இது ஒரு இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின்கீழ் செயல்பட்டுவரும் ஒரு தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். மண் பாறையாகி அந்த மண்ணோடு புதைபட்ட தாவரங்கள் தொல்பொருளாகி தான் வாழ்ந்த காலத்தின் தட்பவெப்ப நிலையை தன்னகத்தே அடக்கி வைத்திருக்கும். தற்கால ஆராய்ச்சியாளா்கள் இவற்றை கவனமாக எடுத்து அந்த காலத்தைய தட்பவெப்ப நிலையை கணிப்பது மட்டுமல்லாது அவற்றின் வடிவத்தையும் அது காணக் கிடைக்கப் பெற்ற காலகட்டத்தையும் கணித்து தாவரங்கள் கால காலமாக எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்ற ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த வருடம் வரைக்கும் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பெரும்பாலும் புவிஆராய்ச்சியாளர்களும் தாவரவியலாளா்களுமே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனா்.

காலச்சூழலுக்கு ஏற்ப கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயர் மாற்றம் பெற்றது. இப்போது இது பீா்பால் சானியின் தொல்லறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (Birbal Sahni Institute of Palaeosciences) என்று மாற்றம் பெற்றிருக்கிறது. இதன்மூலம் கடந்தகால வரலாறுகளை அறிவியல் முறையில் மீள்கட்டமைக்கும் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் இங்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்தத் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்பும் நம் யாவரையும் கீழ்க்காணும் விளம்பரத்தின் தகுதிநிலைக்கேற்ப விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறேன். அநேக பதவிகள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கே!

http://www.bsip.res.in/pdf/advt/Draft%20advertisement%2018%20Scientific%20Posts%20_2_.pdf

- பா.மொர்தெகாய்

குறிப்பு: நான் வெப்ப மற்றும் ஒளியால் தூண்டப்பட்ட ஒளிஉமிழ்வின் (Thermo- and optically stimulated luminescence; TL/OSL) மூலம் காலக்கணக்கீடு சோதனைச்சாலையின் பொறுப்பாளராக பணிபுரிகிறேன்.

Pin It