நூல் திறனாய்வுப் போட்டி
*(மொத்தம் 103 பரிசுகள்)*
*மொத்தப் பரிசுத் தொகை ரூ. 27250*
பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூல் பற்றிய உங்களின் கருத்துரைகளை A4 அளவில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, அஞ்சல் வழியாகவோ (by post) மின்னஞ்சல் (email) வழியாகவோ அனுப்ப வேண்டும்.
போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை.
*முதல் பரிசு ரூ. 1000*
*இரண்டாம் பரிசு ரூ. 750*
*மூன்றாம் பரிசு ரூ.500*
*நான்காம் பரிசு:*
*100 பேருக்கு (100 * 250) ரூ. 25000*
*சிறந்தக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளிக்கொண்டு வரும் திட்டமும் உள்ளது.*
*பரிசுக்குரிய தொகைக்கு ஈடாக நூல்களாகத்தான் அனுப்பப்படும்.*
*உங்களின் பெயர், தெளிவான அஞ்சல் முகவரி (postal address), மின்னஞ்சல் (email) இருந்தால் மின்னஞ்சல் முகவரி, அலைப்பேசி (mobile) எண் விவரங்களோடு அனுப்ப வேண்டும்.*
*நூல் திறனாய்வினை அனுப்பக் கடைசி நாள்: 31.08.2020*
*போட்டி முடிவுகள் செப்டம்பர் 17 அன்று அறிவிக்கப்படும்.*
நூல் திறனாய்வினை அனுப்ப வேண்டிய முகவரி:
*நாளை விடியும்*
எறும்பீசுவரர் நகர்
மலைக்கோயில்
திருச்சி - 620013.
மின்னஞ்சல்: *
நூல் உங்களிடம் இல்லையென்றால், 78710 53772 என்ற எண்ணுக்கு பகிரி வழியாக (WhatsApp) செய்தி அனுப்புங்கள். நூலின் பிடிஎஃப் அனுப்பி வைக்கப்படும்.
(போட்டி தொடர்பாக அலைப்பேசியில் அழைக்க வேண்டாம்)
உங்களின் பகிரிக் (வாட்ஸ்அப்) குழுக்களிலும் முகநூலிலும் இந்தச் செய்தியைப் பகிர்ந்து பரவலாக்குங்கள்.
ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இந்தச் செய்தியை உங்கள் மாணவர்களிடம் கொண்டு செல்லுங்கள்.
- அரசெழிலன்