ஊருக்கு வெளியே
யாருமற்ற
புளியந்தோப்பில்
உன் மனதைத் திறந்து
மடியில் என் தலைசாய்த்து
என் காதில் ரகசியமாய்
காதலைச் சொன்னபோது
கொடுவா மீசையும்
வெட்டருவா கையில் இருந்தும்
அதிர்ச்சியில்
விழிபிதுங்கிய
வேட்டைக் கருப்பு
ஊரார் உருவாக்கப் போகும்
கலவரத்தை நினைத்து
இன்று வரை சிலையாகவே
நிற்பதை
அறிவாயா தோழி!?
- சதீஷ் குமரன்