நெடுஞ்சாலையோரம்
பூச்செடி விற்பவனின் காதுகள்
அன்பான சொற்களின் ஈரத்தை அரிதாகவே உறிஞ்சிப் பழகியவை
கடக்கும்
வாகனங்களின் இரைச்சல்
பேரம் பேசும் மீயொலி
அலைபேசி அழைப்பு
விளம்பர வாகனத்தின் குரலென
நாள்முழுவதற்குமான
சத்தங்களுக்கே ஒப்புக்கொடுக்கப்பட்டதில்
நாட்களை மீட்டும் பணி
துயரங்களின் மெல்லிசைக்கானது
விற்பனையில்லா
இரவுகளில் சத்தங்களை ஒதுக்கி
முழங்கையை நெற்றிக்கு மடித்து படுத்திருப்பவனின்
கைக்கடிகார நொடிமுள் ஓசை
அத்தனை இதமாய்
விற்காத செடிகள் தரும்
கவலையின் மீது
தனிமையிடும் ஒத்தடமானதில் தான்
பரவுகிறது
அவனுக்கான உறக்கநிம்மதி.
- ந.சிவநேசன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- ந.சிவநேசன்
- பிரிவு: கவிதைகள்