மூன்று புகைப்படங்கள் அனுப்பியிருந்தாள்
என் வீட்டுக்கு முன் எடுத்ததென்று
ஒன்றில் நிழல்கள் மேய்ந்து கொண்டிருந்த
மந்தைகளுக்கு நடுவே
நீண்ட கோடுகளாய் ஒளியின் கைகள்
அதன் நடுவே உயரமாக வளர்ந்து நிற்கும்
இரண்டு ரோஜாக்கள் சிறியதும் பெரியதுமாய்
இரண்டாவது புகைப்படத்தில்
சரிவுகளில்
தேயிலைகளின் அணி வகுப்பு
மூன்றாவது ஒன்றில்
இலைகளின் மீது சாய்ந்த படி
தோளோடு தோள் உரசி
நிற்கும் இரண்டு செர்ரி பழங்கள்
அவள் சொன்னாள்
மூன்று படங்களிலும் நானிருக்கின்றேன்
செர்ரி பழங்களாய் அவள்
சரிந்து கிடக்கும் மலையாய் அவள்
நிமிர்ந்து நிற்கும் ரோஜாக்களாய் அவள் என்றேன்
பதில் அனுப்பினாள்
எல்லாவற்றிலும் ஒளிரும்
வானம் நானென்றாள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
ஒளிரும் வானம்
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்