மார்புக் கூட்டில் மகிழம் பூக்களின்
மல்யுத்தம் மஞ்சள் மாலையில்
மறைந்திருந்து நீ பார்த்த முதல் ...
பகலிலும் விழாக் கோலம் பூணும் சொப்பனங்கள்
சாரல் நினைவுகளில் என் நித்திரையை
இரவுகளில் நீ ஆட்கொண்டதால் ...
என்னில் விளையாடும் சதுரங்கத்தில்
உன்னால் வெட்டுப்பட்டு விழும்போதெல்லாம்
சொர்க்கத்திலேயே விழ நேர்கிறது ...
இளஞ்சோலை நினைவுகளை இளமையாக்கிக் கொண்டே
நிதம் யுத்தம் செய்து என் செல்களை மட்டுமே
உயிரிழக்கச் செய்யும் உன் வெற்றிகள் ...
உன் விழி என்மீது படரும் நிமிடங்களில்
என் இதயத்தின் மௌன வாசலில்
தீபச் சுடர்களின் அரங்கேற்றம் .....
சீ ....போடீ!!! கோர்வையாக்க இயலவில்லை
எழுதும் என் கவிதையை
இதிலும் நீ வாசம் செய்வதால் ....
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- ஜி.கே.
- பிரிவு: கவிதைகள்