manual_scavenging_400யாரும் எழுதாத கவிதையொன்று
இன்னும் அலறிக் கொண்டிருக்கிறது
சமூகத்தின் பேராதிக்கத்திற்குள்

பிழைப்புக்கு வழிதேடி வந்த கூட்டம்
உழைப்பிற்குள் சாதியைப் புகுத்தி
இழிதொழிலை குலத்தொழிலாக்கியது

அரசுப் பணியெனும் பெயரில்
கடைக்கோடி சமூகத்தினருக்கு
ஒதுக்கப்பட்ட பணி
“கையால் மலம் அள்ளும் பணி”

அதிகாலை தொடங்கி அந்திசாயும் வரை
பீய்வாரும் தகரத்தையும் போனியையும்
தூக்கிக்கொண்டு வீதி வீதியாய்
கழிக்கப்பட்டிருக்கும் பீய்க்குமியல்களை
கையால் வாரி அள்ளும் பணி…

மலக்கவுச்சியை சுவாசித்து சுவாசித்து
மெதுமெதுவாய் மரணித்துப் போகக்கூடும்
விலைமதிப்பற்ற உயிரும், தன்மானமும்…

வலிந்து பரவும் அரசு பணியமர்த்தும் கொள்கை
மலம் நிறைந்த கழிவறைக் கோப்பைகளிலும்
இரத்தம் தோய்ந்த சானிடரி நாப்கினிலும்
கரைந்தோடுகிறது
கடைக்கோடி மக்களின் வாழ்வியல்
கூடவே மனிதநேயம்
உங்களது சாதிக்கொழுப்பிலும்…
உங்களது கூதிக்கொழுப்பிலும்…

- வழக்கறிஞர் நீதிமலர்

Comments

8 comments

8
கதிரவன்
வழக்கறிஞர் நீதிமலர் அவர்களக்கு வணக்கம் மிக அருமையான கவிதை இடஒதக்கீடு எதிராக ஓலம்மிடும் புடுங்கிகளுக்கு மிக சரியான செருப்படி
yesa
\உங்களது சாதிக்கொழுப்பிலும்…
உங்களது கூதிக்கொழுப்பிலும்…//

நெத்தியடி!!!!
dilipnarayanan
கவிதை பளாரென்று முகத்தில் அடித்து ஒரு உண்மையை உரத்து சொல்லுகிறது. மலம் அள்ளும் வேலையில் மட்டும் யாருமே இட ஒதுக்கீடு கேட்பதில்லை . ஏன் ஏன்
iRASHEEDNAATHTHIGAN
நியாயமானக் கோவம். துண்டரிக்கையாக வெளியிடுங்கள்.
Thanjai Venkatraj
சமூகத்தின் இரட்டை வேடத்தை வெளிக்காட்டும் மனதை உலுக்கும் வரிகள்!
bahavathsing
அசிங்கத்தை கவிதை நடையின் அழகியலோடு ஆங்காரமாய் எடுத்துரைத்துள்ளீர்கள். சாதி இந்துக்களின் மீது மலத்தை அள்ளி வீசுகிறது இந்த கவிதை. வாழ்த்துக்கள்.
raja
suvareluthu Subhiya illaye ithai tamilaga therukalil eluthuvatharku......

Nala varigal,Ambedkar Sinthanigal - Periyar moligal...

Keep it up.
malini
மலம் அள்ளும் எவரையும் இந்த சமூகம் தொழிலாளர்களாக பார்க்கப்படுவதில்லை. சாதிய ஒதுக்குதல்களுக்குள்ளான மனிதர்களாகவே பார்க்கப்படுகின்ற கொடுமை இந்த சமூகத்தில் நிலவி வருகின்றது. இந்த கவிதையை படிக்கின்ற ஒவ்வொரு சாதிய இந்துவுக்கும் சரியான செருப்படி கொடுத்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.