1. தொலைந்த குரல்...
*************************
யாரோ தொலைத்த குரல் ஒன்று
எனது கானகத்தில்...
அலைந்து...அலைந்து விரிகிறது
இன்னமும் அறியப்படும் சாத்தியமற்று.
*******************************************
2. சொற்களாலான உலகம்.
****************************
சொற்களால் விரியத் துவங்கியது
என் உலகம்.
பின் -
சுருங்கி விடுகிறது...
அதீதமான சொற்களின்
அலைக்கழித்தல்களால்.
ஊசலாடும் நாட்கள்...
நிலை பெறத் துவங்கும்...
மௌனத்தின் விளிம்புகளில்...
நகரும் திசை குறித்த தீர்மானங்களற்று.
************************************************