உண்மைக்குப் புறம்பாக வதந்திகளையும் கிசுகிசு போன்றவற்றை மட்டுமே மூலதனமாக கொண்டு பாஜகவின் ஊதுகுழலாக மாறிய தினமலரில் திமுக கூட்டணிக்கட்சிகளுக்கும் கலகம் மூட்டும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. 
 
தினமலரின் அண்டப்புழுகு ஆகாசப்புளுகுவிற்கு தேவர் ஜெயந்திக்கு மோடி மதுரை வருகிறார் என்று பொய்யான செய்திகளை உதாரணமாக சொல்லலாம். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பது நமக்கு தெரியும்.
 
16-01-2023 நாளிதழில் வதந்தியாக “மதுரை தொகுதியை மீண்டும் கூட்டணிக்கு தாரை வார்க்க வேண்டாம்” என்ற தலைப்பில் கட்டுக்கதைகளை விஷம் கலந்து கட்டவிழ்த்து விட்டு இருக்கிறது. அந்த செய்தியில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) செயற்குழு உறுப்பினரும் மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தோழர் திரு சு. வெங்கடேசன் அவர்களை பற்றியும், இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலம் சென்ற தோழர் திரு P. மோகன் அவர்களை பற்றியும் அவதூறான செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
 
சு.வெங்கடேசன்
 
“மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அடிப்படை வசதி, புதிய திட்டங்களை கேட்டு பெரும் பணியில் கவனம் செலுத்துவதை விட தனது டுவிட்டர் பக்கத்தில் தான் அதிகம் செலவிடுகிறார். தன்னை தேசிய அரசியல்வாதியாக அடையாளப்படுத்துவதில் முழு மூச்சாக உள்ளார்” – தினமலம்.
 
தோழர் சு. வெங்கடேசன் ஆற்றிய பணிகளை பற்றி எழுதினால் தினமலர் நாளிதளின் முழு பக்கங்களிலும் ஒரு வருடத்திற்கு வெளியிட முடியும். சிலவற்றை மட்டும் இங்கே கொடுக்கிறோம்.
 
su venkatesan 3691. கடந்த ஒன்பது ஆண்டு காலமாக ஒன்றியத்தில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தை ஆண்ட அதன் கூட்டணியான அதிமுகவின் 10 ஆண்டு காலங்களில் கொண்டு வந்த திட்டங்களில் நடைபெற்ற ஊழல்களை வெளிப்படுத்தியவர் தான் தோழர் சு.வெங்கடேசன் 
 
2. ஸ்மார்ட் சிட்டி எனும் பெயரில் மதுரையில் பல்வேறு கட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றதை, திட்டக்குழு கூட்டம் கூட கூட்டப்படாமல் இருந்ததை கண்டித்து அந்த கூட்டத்தை கூட்டி அந்த பணிகளை வேகமாக முடுக்கி விட்டவர் தான் தோழர் சு.வெங்கடேசன்.
 
3. மதுரைக்கு ரயில் போக்குவரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு முறை குரல் கொடுத்து பெற்றுக்கொடுத்தவர் தான் தோழர் சு.வெங்கடேசன்
 
4. பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட மதுரை தேனி அகல ரயில் பாதை திட்டத்தை போராடி அதை பெற்றுக்கொடுத்தவர் சு வெங்கடேசன்.
 
5. AIIMS மருத்துவமனைக்கு நிலம் கூட ஒதுக்கி தராமல் இருந்த கையாலாகாத அதிமுக அரசை கண்டித்து அதற்கான குழு அமைத்து இடம் ஒதுக்கி தர முனைந்தவர் தோழர் சு.வெங்கடேசன்.
 
6. AIIMS மருத்துவமனைக்கான நிதிகளை ஒதுக்கிட தொடர்ந்து பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் குரல் கொடுத்து வருபவர் தோழர் சு.வெங்கடேசன்.
 
7. தொடர்ந்து ஒன்றிய அரசால் தமிழ் மொழியும் தமிழ் நாடும், குறிப்பாக மதுரையும் புறக்கணிக்கப்பட்டு வருவதை எதிர்த்து போராடி வருபவர் தான் தோழர் சு.வெங்கடேசன்.
 
8. மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையாமாக அறிவித்திட, 24 மணி நேரமும் இயங்கும் விதத்தில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட குரல் உயர்த்தி பெற்று கொடுத்தவர் தான் தோழர் சு. வெங்கடேசன்.
 
9. திமுக தலைமையில் தமிழாட்டில் ஆட்சி அமைந்ததும் மதுரைக்காக அத்தியாவசிய அடிப்படை வசதிகளை மேம்படுத்த கீழ்க்கண்ட 23 கோரிக்கைகளை முதல்வரிடம் கொடுத்து அதில் பெருவாரியான திட்டங்களுக்கு மாநிலத்தின் நிதி ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தவர் தான் தோழர் சு. வெங்கடேசன்.
 
1. மதுரை மாவட்டத்தில் மேலூர் உள்ளிட்ட 4 இடங்களில் புதிதாக தொழிற்பேட்டை தேவை.
2. ஏற்கெனவே 2001ம் ஆண்டு உள்ளூர் திட்டக்குழுமத்தால், வெறும் 4 சதவீத நிலம் மட்டுமே தொழிற்சாலைகளுக்கான நிலமாக அறிவிக்கப்பட்டது. இந்தக் குறுகிய ஒதுக்கீடே மதுரையின் தொழில் வளர்ச்சிக்கான தடையாகக் கருதப்படுகிறது. எனவே, 10 சதவீத நிலத்தை தொழிற்சாலை நிலமாக அறிவித்து, அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
3. மதுரை - தூத்துக்குடி தொழில் பெருவழித்தடம் திட்டம் வெறும் அறிவிப்போடு நிற்கிறது. அதில் எலெக்ட்ரானிக் தொழிற்பூங்காக்களை அமைப்பதுடன், அதற்கென தனி ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்.
4. மதுரையில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவை மதிப்பு கூட்ட (அப்கிரேட்) வேண்டும்.
5. ஒரு காலத்தில் டெக்ஸ்டைல் உற்பத்தியில் முன்னோடி மாவட்டமாக இருந்த மதுரை, இப்போது பின்தங்கியுள்ளது. எனவே, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ளதைப் போல இங்கும் கைத்தறி, ஜவுளி, சுங்கடிச் சேலை உற்பத்தியாளர்களுக்கான வாரச் சந்தை மதுரையிலும் தொடங்கப்பட வேண்டும்.
6. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் டைசல் பூங்கா -TICEL PARK (சென்னை, கோவையில் இருப்பது போல) தொடங்க வேண்டும்.
7. மதுரை மத்திய சிறையை புறநகர்ப் பகுதிக்கு மாற்ற வேண்டும்.
8. இப்போது மத்திய சிறை உள்ள இடத்தில், சிந்து முதல் வைகை வரை என்ற தலைப்பில் தமிழர் நாகரிகத்துக்கான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
9. மதுரை விரகனூர் சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு, மேலமடை, அரசு ராஜாஜி மருத்துவமனை சாலை, மாட்டுத்தாவணி, தெற்கு வாசல், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் தேவை.
10. மேயர் முத்து பாலம், பழங்காநத்தம் வ.உ.சி. பாலம் ஆகியவற்றை புதுப்பித்து விரிவாக்க வேண்டும்.
11. மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தேவை.
12. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு வைகை ஆற்றைப் பாதுகாக்க வேண்டும்.
13. மதுரையின் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரிவுபடுத்துவதுடன், கழிவுநீர் வைகையில் கலப்பதைத் தடுக்க வேண்டும்.
14. மதுரை நகர் சாலைகள் மிக மோசமாக உள்ளன. எனவே, சாலை மற்றும் நடைபாதைகளை முறையாகவும், தரமாகவும் உருவாக்க 150 கோடியில் திட்டம் தேவை.
15. அலங்காநல்லூரில் அதிநவீன ஜல்லிக்கட்டு கலையரங்கு கட்ட வேண்டும்.
16. மதுரையில் உள்ள உலகத்தமிழ்ச் சங்கத்தில் எந்த உருப்படியான பயன்பாடும் நடைபெறவில்லை. உலகத் தமிழ்ச் சங்கம் என்ற பெயருக்குப் பொருத்தமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
17. மதுரையில் புதிய அரசு கல்லூரி தேவை. அவுட்போஸ்ட் காமராசர் பல்கலைக்கழக கல்லூரியையும் அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும். கொட்டாம்பட்டி பகுதியில் அரசு ஐடிஐ தொடங்க வேண்டும்.
18. மதுரை விமான நிலைய விரிவாக்கம், உள்வட்டச் சாலை, வெளிவட்டச் சாலை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு தேவை.
19. அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலையை தமிழக அரசு இயக்க முன்வர வேண்டும். இயக்க செலவுக்கு 10 கோடி நிதி தேவை.
20. பெரியாறு உபரி நீரை சாத்தையாறு அணைக்கு கொண்டு செல்ல திட்டம் தேவை.
21. மேலூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு வேண்டும்.
22. இந்திய வானியல் துறை அறிக்கையின்படி, தமிழகத்திலேயே மழை குறைகிற ஒரே மாவட்டம் மதுரை தான் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, மதுரையின் பசுமை போர்வையை அதிகரிக்கவும், ஏற்கெனவே உள்ள காடுகளைப் பாதுகாக்கவும், நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்யவும், சூழலியலை மேம்படுத்தவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
23. மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்டவும், தேசிய மருந்து சார் கல்வி மற்றும் அறிவியல் கழகத்தை மதுரையில் தொடங்கவும், மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கவும் ஒன்றிய அரசுக்கு மாநில அரசு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும். 
 
P.மோகன்
 
"இரண்டு முறை மோகன் MP ஆக இருந்தார். ஆனால் அவர் மதுரைக்கு கொண்டு வந்த திட்டங்களை அக்கட்சியினர் கூற முடியுமா?" - தினமலம்.
 
செலெக்டிவ் அம்னீஷியா நோய் வந்தது போலே, தோழர் மோகன் அவர்களின் பணிகளை தொடர்ந்து தினமலர் எழுதியதை மறந்து இப்படி அவதூறு பரப்புவது நிரூபிக்கிறது.
 
தோழர் P. மோகன் ஆற்றிய பணிகளை பற்றி எழுதினால் தினமலர் நாளிதளின் முழு பக்கங்களிலும் இரண்டு வருடத்திற்கு வெளியிட முடியும். சிலவற்றை மட்டும் இங்கே கொடுக்கிறோம்.
 
1. இன்றைய மதுரை விமான நிலையம் பன்னாட்டு முனையமாக மாற்றிட கோரிக்கை வைத்து நிதி ஒதுக்க வைத்தவர் தான் தோழர் P.மோகன்
 
2. மோசடியாக மோடி அவர்கள் இரண்டாம் முறையாக AIIMS மருத்துவமனை அடிக்கல் நாட்டினாரே, முதல் முறை அடிக்கல் நாட்ட வைத்தவர் தோழர் P. மோகன்
 
3. மதுரைக்கு கடவுச்சீட்டு (PASSPORT) அலுவலகம் கொண்டு வந்தவர் த்தான் தோழர் P. மோகன்
 
4. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் தான் தோழர் P. மோகன்
 
இப்படி தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர் தான் தோழர் மோகன்.
 
உங்களது வர்ணாசிரம காவலர், பாஜகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சாமி என்ன ஐந்தாண்டுகளில் மதுரைக்கு செய்தார் என்ற பட்டியலை தினமலம் தனது செய்தியில் வெளியிடுமா?
 
- ஆர்.எம்.பாபு, மதுரை
Pin It