(மாட்டுக்கறி அரசியலை ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் தற்சமயம் மிக முக்கிய பிரச்சனையாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசு இறைச்சிக்காக மாடு வெட்டப்படுவதைத் தடை செய்யும் விதிகளை இயற்றி, அதற்கெதிரான போராட்டங்கள் நாடெங்கும் நடைபெற்று வருகின்றன. இந்தக் கட்டுரையானது தாத்ரி படுகொலை, ஜம்முவில் லாரி ஓட்டுநர்கள் கொலை ஆகியவை நடைபெற்ற காலக்கட்டத்தில் சிறையிலிருந்தபோது எழுதப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.சின் ஒட்டுமொத்த வேலைத்திட்டத்தை பற்றி இக்கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டிருக்காவிட்டாலும், இன்றைய சூழலில் இக்கட்டுரையை வெளியிடுவது பொருத்தப்பாடாக இருக்கும் என்று கருதி வெளியிடப்படுகிறது)
---------------------------------------------------------------------------------------------------------------------
மாட்டுக் கறியை மூலதனமாக வைத்து கசாப்புக் கடை அரசியலை நடத்தி வருகின்றன ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள். தாத்ரி படுகொலை, ஜம்முவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர்கள் கொலை என முசுலீம்களுக்கெதிரான மதவெறித் தாக்குதல்களுக்கு “கோமாதாவை” பகடைக் காயாகப் பயன்படுத்துகின்றனர். “பசு வதை” இந்துக்களின் உணர்வைப் புண்படுத்துவதாகவும், “பாரதப்” பாரம்பரியத்துக்கு எதிரானதெனவும் முழங்கி, முஸ்லீம்களுக்கெதிராகவும், தலித்துகளுக்கெதிராகவும் பகைமை உணர்வைப் பரப்பி வருகின்றனர். நாடு முழுக்க பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டுமென பெருங்கூச்சல் போட்டு வருகின்றனர். உண்மையில் ஆர்.எஸ்.எஸ். தூக்கிப் பிடிக்கும் பிராமணிய சக்திகளால் எல்லாக் காலத்திலும் மாட்டுக்கறி மறுக்கப்பட்டதா? இவர்களின் “புனித” நூலான வேதம் மாட்டுக்கறியை தடை செய்கிறதா? இதற்குத் தெட்டத் தெளிவான பதில் “இல்லை” என்பதுதான். ஆம், வரலாறு காட்டும் உண்மை இதுதான்.
வேத வேள்வியும் மாட்டுக்கறியும்:
கால்நடை மேய்ப்பு இனக்குழுக்களாக இந்தியாவுக்குள் வந்த ஆரிய குலங்கள் (வேதத்தின் படைப்பாளர்கள்) மாடு உள்ளிட்ட புலால் உணவை விரும்பி உண்பவர்களாகவே இருந்தனர். வேதங்களில் பல பிராமண “ரிஷி”கள் மாட்டுக்கறியின் பெருமை பேசிய ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. வேத பார்ப்பனியம் வேள்விகளை (யாகங்களை) தனது அடிப்படையாகக் கொண்டது. பழங்குடி மக்களின் சடங்கான தீயில் விலங்குகளை இட்டு பகிர்ந்துண்ணுவது, பின்னர் வேள்வி என்ற பெயரில் பார்ப்பன பூசாரிகள் தமது பங்காக விலங்குகளையும், இதர உணவுப் பொருட்களையும் பெற்றுக் கொள்ளும் சடங்காக மாறியது. பழங்குடி மக்களின் உபரியைச் சுரண்டும் ஒரு வழிமுறையாகின வேள்விகள். இந்த வேள்விகளில் தேவர்களுக்கு பலியிடுவதாகச் சொல்லிக் கொண்டு, பார்ப்பனர்கள் மாடு, ஆடு, குதிரை போன்ற விலங்குகளைத் தீயிலிட்டு சுட்டுத் தின்றனர். வேதங்களில் மாட்டு இறைச்சியின் சுவையை சிலாகித்துப் பாடும் பல பாடல்கள் உள்ளன. இந்த வரலாற்று உண்மையை மறைத்துவிட்டுத்தான், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பனீய கும்பல்கள் கோமாதாவை வைத்து போலி அரசியலை நடத்துகின்றன. வேதங்களில் வெளிப்பட்டுள்ள இந்த உண்மையை வெளியிட்ட பல வட இந்திய வரலாற்று ஆய்வாளர்களையும் கூட இவர்கள் மிரட்டுகின்றனர்.
வேதம்-வேள்விகளை எதிர்த்த சமண-பவுத்த மதங்கள்:
அக்காலக்கட்டத்தில் வேத பார்ப்பனியத்தின் வேள்விகளையும், பிராமண, சத்ரிய, வைசிய இருபிறப்பாளர்கள் சூத்திரர்களை ஒடுக்கிய வர்ணாசிரம கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்தவை சமண-பவுத்த மதங்களே. வேள்விகளில் விவசாய உற்பத்திக்கு முக்கிய கருவிகளாயிருந்த விலங்குகள் அழிக்கப்படுவதை எதிர்த்ததன் மூலம், சமணமும் பவுத்தமும் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவின. இவ்விரு மதங்களும், சில வேறுபாடுகளுடன் புலால் உணவை மறுத்து கொல்லாமை பேசின. கொல்லாமை, கள்ளுண்ணாமை, துறவு போன்றவை சமண-பவுத்த மத போதகர்களால் கடைபிடிக்கப்பட்டு, மக்களிடையே நற்குணங்களாக பெயர் பெற்றன.
வேத பார்ப்பனியத்தை எதிர்த்துக் கிளம்பிய பவுத்தமும், சமணமும் ஒரு சில நூற்றாண்டு காலத்திற்கு இந்தியாவின் பெரும்பகுதியில் ஆதிக்க மதங்களாக விளங்கின. மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றன. அதே சமயம், ஆள்வோரின் (அரசர்கள்) ஆதரவு பெற்ற மதங்களாகவும் விளங்கின. வேத மதமும், பார்ப்பனீயமும் இவற்றிற்கு கீழான நிலைக்குத் தள்ளப்பட்டன. அசோகனால் புகழ்பெற்ற மௌரிய பேரரசும், ஹர்ஷரின் பேரரசும் பவுத்த மதச் சார்பு அரசுகளாக இருந்தன. தெற்கிலோ சங்கம் மருவிய காலம் முதல் பக்தி இயக்க காலக்கட்டம் வரை சமணமே ஆதிக்க மதமாக விளங்கியது. மொத்தத்தில் வேத பார்ப்பனீயம் இக்காலத்தில் இரண்டாம் நிலையிலேயே இருந்து வந்தது.
சாதிய நிலவுடைமை சமூகத்துடன் அரியணை ஏறிய புதிய பார்ப்பனியம்:
வேத மதத்தின் தொடர்ச்சியெனக் கூறிக் கொண்ட புதிய பார்ப்பனியம் சாதி அடிப்படையிலான நிலவுடைமைச் சமூகத்தின் வளர்ச்சியுடன்தான் ஆதிக்கத்திற்கு வந்தது. ஆனால், இச்சமயத்தில் அது பழைய வேள்வி அடிப்படையிலான வேத மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு புதிய வடிவை எடுத்திருந்தது. பார்ப்பனர்களை முதலாகவும், தீண்டத்தகாதவர்கள் என்று கூறி ஒடுக்கப்பட்ட மக்களை அடியாகவும், பெரும் எண்ணிக்கையிலான சூத்திர சாதிகளை இடைநிலையாகவும் கொண்ட சாதியமைப்பை நியாயப்படுத்தும் புதிய வருணாசிரம தத்துவத்தையும், தீட்டு-தூய்மை கோட்பாட்டையும் இந்த புதிய பார்ப்பனீயம் தனது உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. வடக்கில் பார்ப்பனர்களுடன் இதர இரு பிறப்பாளர்களான சத்திரிய, வைசிய சாதிகள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தன. தெற்கிலோ விரல்விட்டு எண்ணக்கூடிய பார்ப்பனரல்லாத சாதிகளே இருபிறப்பாளர்களாகக் கருதப்பட்டனர். தமிழகம் போன்ற பகுதிகளில் பார்ப்பனர், தாழ்த்தப்பட்ட சாதிகளைத் தவிர்த்த அனைவருமே சூத்திரர்களாகவே கருதப்பட்டனர். கிராம அளவில் தொழில் அடிப்படையில் சாதிகளை ஒழுங்குபடுத்திய பார்ப்பனிய சாதியம் இந்தியாவில் நிலவுடைமை அமைப்பின் அடிப்படையாக இருந்தது.
இந்த பார்ப்பனீய சாதி முறையை ஏற்றுக்கொண்ட மற்றும் வேத-உபநிசத்துக்களை ஏற்றுக் கொண்டதாகக் கூறிய சைவ-வைணவ மதங்கள் வன்முறை மூலமாக, சமண-பவுத்த மதங்களை வீழ்த்தின. தமிழகத்தில் கழுவேற்றல்களும், அனல்-புனல் வாதங்களும் சமண-பவுத்தத்தின் சுவடுகள் கூட தெரியாத அளவுக்கு அவற்றைத் துடைத்தெறிந்தன. பக்தி இயக்கம் இந்த மாற்றங்களை நிறைவேற்றும் கருவியாக செயல்பட்டது. இக்காலக்கட்டத்தில்தான் பார்ப்பனீயம் மாட்டை தெய்வமாக்கியது. இது நிலவுடைமையின் விவசாய முறையுடன் பொருந்தியது. முன்னர் அவர்களின் வேள்வி நெருப்பில் சுட்டுத் தின்னப்பட்ட மாடுகளுக்கு இப்போது அவர்கள் தெய்வ அந்தஸ்தை வழங்கினர். மறுபுறம், சமண-பவுத்த துறவிகளின் புலால் மறுப்பை தந்திரமாகத் திருடி, பார்ப்பனர்கள் தம்மையும் புனிதர்களாக்கிக் கொண்டனர். மக்களால் உயர் பண்பாக கருதப்பட்ட சமண-பவுத்தத்தின் புலால் உண்ணாமை கொள்கையைப் பயன்படுத்தி, பிறப்பில் உயர்ந்தவர்கள் பார்ப்பனர் என்ற கற்பிதத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டனர். தமது புனித விலங்கான மாட்டை உண்பவர்களை சமூகத்தின் கீழான நிலையினராகக் காட்டினர். இதர விலங்குகளின் இறைச்சியை உண்பவர்கள் இடைநிலை சாதிகளில் இருந்தனர். இவர்களும் கூட பார்ப்பனிய நிலவுடைமை கருத்தாக்கத்தின்படி மாட்டுக் கறி உண்பதை தீட்டாகவே கருதினர். பார்ப்பனிய சாதியமைப்புக்கு ஏற்ப உணவின் அடிப்படையில் புலால் உண்ணாதவர், புலால் உண்பவர் மற்றும் மாட்டுக்கறி தின்பவர் என்ற ஒரு கருத்தியல்ரீதியான படிநிலை உருவாக்கப்பட்டது. சமண மதத்தில் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்கக் கூடாதென்ற ஒரு உயர் ஒழுக்கமாகக் கருதப்பட்ட கொல்லாமை, புதிய பார்ப்பனியத்தால் மனிதர்களைப் பிறப்படிப்படையில் பிரிக்கும் மனித நேயமற்ற சாதிய முறையின் தீட்டுக்களில் ஒன்றாக சிறுமைப்படுத்தப்பட்டது.
மாட்டைக் (பசுவை) கொல்வது ஒரு மிகப் பெரிய குற்றமாக பார்ப்பனீய சட்டத்தால் கருதப்பட்டது. பெரும்பான்மை மக்களான சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோரையும் சமூகத்தில் பாதியான பெண்களையும் கொல்வதை ஒரு சாதாரண விசயமாகக் கருதிய ஒரு சம்பிரதாயம், மாட்டைக் கொல்வதை கொடுங்குற்றமாகக் கருதியது. இது அதன் கோட்பாட்டு மோசடியை வெளிப்படுத்துகிறது. அனைத்து உயிர்களையும் துன்புறுத்தக் கூடாது என்ற சமணக் கோட்பாட்டை வெளிப்படுத்துகிறது. அனைத்து உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்ற சமணக் கோட்பாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், பார்ப்பனீய அஹிம்சையின் (பசுவதைத் தடை) மோசடிப் பண்பு தெளிவாக புலப்படும். உண்மையில் பார்ப்பனீயத்தின் புலாலுண்ணாமையும், பசுவதைத் தடையும் சாதிய ஒழுங்கைப் பராமரிக்கும் தீட்டு என்பதற்கு மேல் வேறு ஒன்றுமில்லை. அதில் மனிதநேயமோ? அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தும் அறமோ துளியும் இல்லை. நிலவுடைமைச் சமூகமும் பார்ப்பனிய சாதிய முறையும் நீண்ட காலமாக நீ்டித்து வருவதன் விளைவாக, சூத்திரர்கள் மற்றும் இருபிறப்பாளர்கள் மத்தியில் மாட்டுக்கறி உண்பது இழிவானது என்ற கருத்து ஆழமாக நீடித்து வருகிறது. மறுபுறம், சாதி முறையில் கீழே தள்ளப்பட்ட மக்களில் பெரும்பான்மையினரும், பல பழங்குடிகளும் மாட்டுக்கறியை தமது உணவாக கொள்வது தொடர்ந்து வருகிறது. முஸ்லீம்களும், கிறித்துவர்களும் தமது உணவாக உட்கொள்கின்றனர். இன்றைய சூழலில், நகர்ப்புறங்களின் பெரும்பான்மை அடித்தட்டு மக்களின் உணவாக மாட்டுக்கறி உள்ளது.
வேதியர்கள் (வேதத்தைப் பின்பற்றும் பார்ப்பனர்கள்) மாட்டுக்கறி தின்றதற்கான சில இலக்கிய ஆதாரங்கள்:
நாம் பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்டதை நிரூபிக்க வேதங்ளைப் புரட்ட வேண்டிய அவசியமில்லை. பண்டை தமிழ் இலக்கியங்களே அதற்கு சாட்சியாயுள்ளன. அதில் சில காட்சிகளை மட்டும் காண்போம்.
சமண சிறு காப்பியமான நீலகேசி வேதப் பார்ப்பனர்களைப் பார்த்து இப்படிக் கேட்கிறது,
“வசுக்கள் உருத்திரர் பிதிரரொடு
இவர் முதலாப் பலர்க்கும்
பசுக்களோட எருமைகள் குதிரைகள்
புலியொடு நாய் முதலா
இசு கழிந்தன பல கொலைகளும்
இரங்கலிர் கொன்று அவரை
அசிப்பவர் போன்ற நீர் ஆயினும்
அருவினையா நுமக்கே”
இதன் பொருள் “வசுக்கள், உருத்திரர், பிதிரர் ஆகியோருக்காக என்று சொல்லிக் கொண்டு, வேள்வியில் சிறுதும் இரக்கமின்றி பசு, எருமை, குதிரை, புலி மற்றும் நாய் போன்ற விலங்குகளைக் கொலை செய்கிறீர்கள். அந்த தேவர்களுக்கு ஊட்டுவது போல நடித்து, நீங்களே புசிப்பீர்கள். எனவே இந்த தீவினை உங்களையே சாரும்.” இது வடநாட்டில் மட்டுமல்ல, அன்றைய தமிழகத்திலும் வேதப் பார்ப்பனர்கள் வேள்வி என்ற பெயரில் மாடு உள்ளிட்ட பல விலங்குகளைக் கொன்று தின்றதையே காட்டுகிறது.
அதே நீலகேசி அந்த வேள்விமுறையையே கீழ்வருமாறு கேள்விக்குள்ளாக்குகிறது
“நண்பரை நுதலியும் பகைவரை
நுதலியும் அமிர்தோடு நஞ்சு
உண்பார்க்கு அல்லது அவர்களுக்கு
ஆம் என உரைக்குநர் யார்
பண்பிலி தேவரை நுதலிய
கொலையினில் பல் வினைதான்
உண்பல வகையினின் அடைந்தலை
விளையுங்கள் உன் நுமக்கு என்றாள்”
தன் நண்பன் நீடு வாழ வேண்டும் என்று ஒருவன் அமிர்தம் உண்டான். இன்னொருவனோ தனது எதிரி அழிந்து போகட்டும் என நஞ்சு அருந்தினான். இந்த இரண்டின் பலனும் உண்டவர்களுக்குத் தானே போகும். அந்த நண்பர்களுக்கு போகும் என்று யார் சொல்வார்கள். அவ்வாறே தேவர்களுக்காக செய்யப்பட்ட கொலைகள் என்று சொன்னாலும், அதன் தீவினைப்பயன் கொன்ற உங்களுக்கே சேரும் என வேதவாதியைப் பார்த்து நீலகேசி சொல்கிறாள்.
இதில் வேள்விகள் ஏமாற்று வேலை என்பதையும், அவை வேத பார்ப்பனர்களின் மாமிச இச்சைக்கான பெரிய அடுப்புகளாகவே விளங்கின என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது நீலகேசி.
இன்னொரு இடத்தில் நீலகேசி வேதத்தைத் தாக்கித் தகர்க்கையில்,
“………….
கொலை மண்ணும் மருவுதலின்
ஐயம் இல் தீக்கதி செலுத்துவது”
என்று வேதத்தை சாடுகிறாள்.
இங்கு வேள்விக் கொலைகளையே தனது சாரமாகக் கொண்டிருந்த வேதப் பார்ப்பனீயத்தை நீலகேசி சரியாகவே தோலுரித்துக் காட்டியுள்ளது.
பவுத்த காப்பியமான மணிமேகலையோ ஆபுத்திரனின் கதை மூலம், வேதப் பார்ப்பனர்களின் மாட்டுக்கறி வெறியை அம்பலப்படுத்துகிறது. அக்கதை இதோ…
வாரணாசியில் அபஞ்சிகன் என்ற “மறை (வேதம்) ஓம்பாளன்” இருந்தான். அவனுடைய மனையாளியின் பெயர் “பார்ப்பினி சாலி” அவள் ஒழுக்கம் தவறி நடந்து விட்ட காரணத்தால், அந்தப் பாவம் போக்கு “குமரி ஆடிய வருவாள்” வரும் வழியில் குழந்தை பிறந்து விடுகிறது. எனினும் “ஈன்ற குழந்தைக்கு இரங்காளாகி” மறைவானதொரு இடத்தில் அதை விட்டுவிட்டு சென்று விடுகிறாள்.
பசியால் குழந்தை அலற, அது கேட்டு “ஓர் ஆ (பசு) வந்து அணைந்து” ஆதரவு தந்தது. நாக்கால் நக்கி கொடுத்து, பாலும் கொடுத்தது. இப்படி அந்தக் குழந்தை ஆபுத்திரன் ஆனது. அப்போது அவ்வழியே வந்த இளம்பூதி என்கிற “மறை ஓம்பாலனும்” அவனது மனையாளும் குழந்தையைக் கண்டு அதை எடுத்து கொள்கிறார்கள். ஆ மகன் அல்லன் என் மகன் என்றே” கொஞ்சுகிறான் அவன்.
இளம்பூதியின் இல்லத்தில் குழந்தை வளர்கிறான். உபநயனத்திற்கு முன்னரே அவன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறான். சிறுவன் ஒருநாள் அந்த ஊரிலுள்ள இன்னொரு அந்தணர் வீட்டிற்கு செல்கிறான். அங்கே அவன் கண்ட காட்சியை மணிமேகலை விளக்குகிறது,
“ஆங்கு புலைசூழ் வேள்வியில்
குரூரத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி
வெரூஉப் பகை அஞ்சிவெய் துயிர்த்து புலம்பிக்
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடைப் பட்ட மானே போன்று அங்கு
அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு
நெஞ்சு நடுக்குற்று நெடுங்கண் நீர் உடுத்து”
இதற்கு பொ. வே. சோமசுந்தரனார் கொடுத்துள்ள விளக்கவுரையை அப்படியே தருவோம் –
“அவ்விடத்தே அப்பார்ப்பனர்கள் தாம் மறுநாள் ஊன் தின்பதற்கு ஏதுவாக வேள்வி செய்வதாக ஒரு சூழ்ச்சி செய்து, நிகழ்த்தும் வேள்விக் களத்திலே கொன்று தின்பதற்காக நிறமிக்க மலர் மாலை கொம்பின்கண் சுற்றப்பட்டுத் தன்னைக் கொல்பவரும், தான் பெரிதும் அஞ்சுதற்குக் காரணமாகியவரும் கொடியவருமாகிய அப்பார்ப்பனர்க்குப் பெரிதும் அஞ்சி, உய்தி காணாமல் வெய்தாக மூச்செறிந்து வருந்தி, கொலைத் தொழிலை மிகுதியாக செய்கின்ற வேடர் வில்லிற்கு அஞ்சி ஓடிப்போய் அவர் விரித்த வலையில் அகப்பட்டுக் கொண்ட மான் போல அஞ்சி, அவரால் கட்டப்பட்ட வேள்வித்தூண் மருங்கே நின்று அம்மா! அம்மா! என இடையறாது கதறி அழைக்கின்ற ஓர் ஆவினது துன்ப நிலையைக் கண்டு. தனது நெஞ்சம் நடுங்கி, நெடிய தன் கண்ணால் துன்பக் கண்ணீர் சொரிந்து”
அந்தக் காலத்தில் தமிழகத்தின் வேதியர்களும் வேள்வியில் பசுவைக் கொன்றார்கள். பசு மாமிசத்தை உண்பதற்காகவே பசுவைக் கொன்றார்கள் என்பது தெளிவாகிறது. பவுத்த சமயமே இது கண்டு கொந்தளித்தது. தனது எதிர்ப்பை அந்த சிறுவனின் செய்கை மூலம் இலக்கியமாக்குகிறார் சாத்தனார். அன்று இரவு அந்தப் பசுவை அவிழ்த்துக் கொண்டு, ஆபுத்திரன் ஊரை விட்டுக் கிளம்பி விடுகிறான். அந்தணர்கள் விசயம் அறிந்து, அவனையும் பசுவையும் வளைத்துக் கொள்கிறார்கள். “புலைச் சிறுமகனே போக்கப்படுதி என அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப” என்பது நடக்கிறது. அதாவது மரணத்திலிருந்து பசுவைக் காப்பாற்றியவனை “புலைச் சிறுமகனே” என்று திட்டியிருக்கிறார்கள்! கோல் கொண்டு அடித்திருக்கிறார்கள்!
அடிபட்டாலும் பசுவைக் காப்பாற்றிய மன நிறைவோடு, “நோவன செய்யமின்” என சிறுவன் அந்தணர்களுக்குப் புத்தி சொல்கிறான். அவர்களுக்குக் கோபம் வருகிறது. தங்களின் வேள்வியை இகழ்ந்ததன் மூலம் தங்களின் புனித வேதத்தையே இகழ்ந்துவிட்டதாகக் குமுறுகிறார்கள். “அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை” என்கிறார்கள். இதிலிருந்து மாடுகள் உள்ளிட்ட விலங்குகளைக் கொல்லும் வேள்வி முறையையே தங்களது வேத உட்பொருளாக வேதியர்கள் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.
சுருக்கமாகச் சொல்வதெனில், வேதியர்கள் வேள்வி என்ற பெயரில் மாடு உள்ளிட்ட விலங்குகளைக் கொன்று தின்றுள்ளனர். இந்த வேள்விகளே வேதத்தின் உட்பொருள் என்று கருதியுள்ளனர். இதைப் பண்டைத் தமிழ் இலக்கியங்களின் சில காட்சிகள் நமக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளன.
உண்மை நிலை இப்படி இருக்கையில், வேதக் காப்பாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவக் கும்பல் மாட்டுக் கறியை வைத்து நடத்தும் வெறுப்பு அரசியலின் நோக்கம் என்ன? பார்ப்பனீய சாதியம் இருபிறப்பாளர் மற்றும் சூத்திர சாதிகளிடையே ஊட்டி வைத்துள்ள மாட்டின் புனித மதிப்பீடுகளைப் பயன்படுத்திக் கொண்டு, சிறுபான்மை முஸ்லீம்களுக்கெதிரான மதவெறியைத் தூண்டுவதுதான் இவர்களின் நோக்கம். இதன் மூலம் தமது இந்துத்துவ பாசிச கருத்தியலை பெரும் எண்ணிக்கையிலான மக்களிடம் வேரூன்ற வைக்க முயற்சிக்கின்றனர். உலக பொருளியல் நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் தலை மேல் சுமத்த விரும்பும் ஆளும் வர்க்கங்கள், ஒரு அப்பட்டமான பாசிச (சர்வாதிகார) ஆட்சியை நிறுவ விரும்பி, அதற்கான மக்கள் அடித்தளத்தைக் கட்டியமைக்கவே இந்து பாசிச கருத்தியல்கள் பரப்பப்படுகின்றன என்பதை நாம் இங்கு கணக்கில் கொள்ள வேண்டும். மறுபுறம், இதே விசயத்தை வைத்து தாழ்த்தப்பட்ட மக்களையும், பழங்குடிகளையும் கீழானவர்களாகச் சித்தரிக்கும் பார்ப்பனீய கருத்தியலை மேலும் பலப்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் நீட்சியாக புலால் உண்ணும் சூத்திர சாதி மக்களையும் மட்டம் தட்டும் பார்ப்பனீய மேலாதிக்க வெறியுடன், தாம் ஆளும் மாநிலங்களில் புனித நாட்களில் அனைத்து இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கின்றனர். இந்துத்துவ பாசிசமும், பார்ப்பனீயமும் பிரிக்க முடியாதவை என்பதுடன், மாட்டுக்கறியில் தொடங்கி இறைச்சிக்கு நீளும் அவர்களின் தீட்டு அரசியல் பெரும்பான்மை மக்களை கருத்தியல் ரீதியாக கீழ்ப்படுத்தும் ஒரு பாசிச முயற்சியே. இதில் “புனிதம்”, “பாரதப் பண்பாடு”, “கோமாதா” போன்ற முழக்கங்களெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கான மோசடிகளேயன்றி வேறல்ல.
- விவேக்
குறிப்பு: இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள தமிழ் இலக்கிய சான்றுகள், அருணனின் “தமிழரின் தத்துவ மரபு” (முதல்பகுதி) என்ற நூலிலிருந்து ஏறக்குறைய அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன.
BY GNANA BOOMI - October 24, 2012
குறிப்பு: இதன் ஆங்கில மூலத்தைக் காண இங்கே செல்லவும். இப்பகுதி இன்னும் சில பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வழங்கப் படுகின்றன. வெறும் மொழிபெயர்ப்பாக மட்டும் இல்லாமல் ஞானபூமி தளத்தின் அடிநாதத்தை ஒட்டியும் வேத தர்மத்தின் கோட்பாடுகளை ஒட்டியுமே இவை சித்தரிக்கப் படுகின்றன. எக்காரணம் கொண்டும் பிற மதங்களைத் தூற்றுவதோ, அவற்றைப் பின்பற்றுபவர்கள ை தாழ்த்துவதோ இங்கு செய்யப்படவில்லை . மறுமொழியின் வாயிலாகவும் அவை வரவேற்கப்படமாட் டா. வேதங்களின் மேன்மையையும் அவற்றை நாம் உணர்வது எத்துணை இன்றியமையாயது என்பதை மட்டுமே பறைசாற்றும் ஒரு மிகச்சிறிய முயற்சியே இஃது.
“வேதங்கள் கோமாமிசம் உண்பதை வலியுறுத்துகிறத ு என்னும் கட்டுக்கதையை ஆதாரத்துடன் நிர்மூலமாக்குவோ ம். மேலும், அஸ்வமேத யாகம், கோமேத யாகம் என்பனவற்றின் உண்மையில் என்ன என்பதையும் பார்ப்போம், வாருங்கள்!”
வேதச் சொற்களின் மூலத்தை, அவை சொல்லப்பட்டிருக ்கும் சூழ்நிலை, அதன் சொல்வளம், இலக்கணம், மொழி ஆய்வு, மற்றும் வேத மந்திரங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள இன்றியமையாத இன்னபிற வழிகளைக் கொண்டும் செய்யப்பட்ட மிக ஆழமான, எதிலும் சார்பற்ற ஒரு ஆய்வின் விளைவே இக்கட்டுரை. மேலும், மேக்ஸ் முல்லர், க்ரிஃப்பித், வில்சன், வில்லியம்ஸ் மற்றும் பல இந்தியவியலாளர்க ள் வேதங்களையும் அதன் மொழிகளையும் பற்றிப் படைத்தவைகளைக் கண்ணை மூடிக்கொண்டு மறுபதிவு செய்ததில்லை இத்தொகுப்புகள். அவை மேலைநாட்டுக் கல்வியுலகின் பிரபலமான கருத்துக்களாக இருப்பினும் அவை நம்பத்தகுந்த, ஆதாரபூர்வமானவை அல்ல என்ற நிலைப்பாடு எமக்குண்டு. அது ஏன் என்ற ஆதாரங்களையும் இத்தொகுப்புகளில ் காணலாம்.
ஞானத்தின் முதற்புத்தகங்கள ான வேதங்கள் பற்றிய கட்டுக்கதைகளைத் தகர்த்து உண்மையை ஆராய்ந்தறியும் கட்டுரைத் தொகுப்பின் முதற்பகுதிக்கு தங்களின் நல்வரவு.
பூமியில் ஞானத்தின் முதல் வழிவகையான, ஹிந்து தர்மத்தின் வேர்களாகிய வேதங்கள் மனித இனம் ஆனந்தமயமான வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகளைச் சொல்வதற்காக ஏற்பட்டது.
நூற்றாண்டுகளாக ஹிந்துக்களின் புனித கிரந்தங்களாகிய வேதங்களில் புனிதமற்ற, தீங்கான கருத்துக்களிருப ்பதாக அவதூறு பரப்பப்பட்டது. இக்கருத்துக்களை அப்படியே நம்பத்தொடங்கி விட்டால் ஹிந்து தர்மம், கலாச்சாரம் மற்றும் அதன் பாரம்பரியம் இவை காட்டுமிராண்டித ்தனம், விலங்கினம் மற்றும் நரமாமிசமுண்ணும் நெறிகள் அன்றி வேறொன்றுமில்லை என எண்ணத் தோன்றும்.
உலகெங்கிலுமுள்ள ஹிந்துக்களை சங்கடப்படுத்தி, அவர்கள் தங்களைத் தாங்களே கீழாக எண்ணச் செய்யும் பொருட்டு இத்தகைய பொய்ப் பிரச்சாரங்கள் பல்வேறு தரப்பினரால் பரப்பப்பட்டன. இப்பிரச்சாரங்கள ் வேதங்களிலிருந்த ே ஆதாரங்களைக் காட்டுவதாய்ப் பீற்றிக் கொண்டன.
இவை ஏழைகள் மற்றும் படிப்பறிவில்லாத இந்தியர்களை அவர்களுடைய தர்மத்தின் ஆதாரமாகிய வேதங்கள் பெண்மையைக் கீழ்த்தரமாக சித்தரிப்பதாயும ், பலதாரமணத்தை ஊக்குவிப்பதாயும ், ஜாதி வெறி பிடித்தவர்களாயு ம், அனைத்திற்கும் மேலாக பசு மாமிசமுண்ணுபவர் களாயும் காட்ட வெகு வசதியாயிருந்தது . இது அவர்களிடத்தில் வேதங்களின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்ய வெகு செளகரியமாயிருந்தது.
இவை போதாதென்று மிருகங்களைக் கொன்று யாகம் என்ற ஒன்றை செய்பவர்களாயும் சித்தரித்தார்கள ். கேலிக் கூத்தாக, பாரதத்திலிருந்த ு உதித்து, பண்டைய இந்தியாவைப் பற்றி வெகு ஆழமாய்ப் படித்ததாய்ச் சொல்லிக் கொள்ளும் சில அறிவாளிகளும் இந்த மேலைநாட்டு அறிஞர்களின் (?!) கூற்றை ஆதாரமாய்க் காட்டி ஆம், ஆம், வேதங்களில் இவை இருக்க்த்தான் செய்கின்றன என்று மார்தட்டினார்கள்.
வேதங்கள் கோ-மாமிசம் உண்ணுவதையும், பசுவதை செய்வதையும் அனுமதிக்கிறது என்பது ஒரு ஹிந்துவின் ஆத்மாவிற்கே பேரிடியாகும். பசு ரக்ஷணம் என்பது ஹிந்து தர்மத்தின் ஆணிவேராம். இப்படியிருக்கைய ில் ஆதார ஸ்ருதியான வேதங்களே இவற்றை ஊக்குவிக்கின்றன என்று சொல்லி விட்டு அதிலிருந்து ஆதாரங்களையும் காட்டுவதாய் சொன்னால்? இந்தியன் வெகு எளிதாக குற்றஞ்செய்தவன் போல எண்ணுவான். இவர்களின் பொய்பிரச்சாரத்த ிற்கு இரையுமாவான். இப்படி பல கோடி ஹிந்துக்கள் இப் பொய் பிரச்சாரத்தை அதன் அடிவேரை ஆட்டும் வண்ணம் எதிர்-வாதம் செய்ய இயலாமல், தெரியாமல் மெளனமாக இருக்கிறார்கள், இன்னமும்!!!
இப்பிரச்சாரக் கூட்டம் வெறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு இந்திய மொழியாய்வாளர்கள ைக் கொண்டது மட்டுமல்ல, ஹிந்துக்களில் ஒரு சாராரே வேதங்களில் சொல்லியிருப்பவை யாகக் கண்டதையும் கூறி அவற்றை ஏற்குமாயும் அப்படி ஏற்காதவர் பாதகர்களாவார்கள ் என்றும் பசப்பி சமூகத்தில் மெலிவடைந்த பிரிவினரை மிரட்டி வந்தனர். இந்த புனைச்சுருட்டின ் மையமாக மஹிந்தர், உவாத் மற்றும் சாயான் போன்றவர்களின் கருத்துக்களைச் சொல்லலாம், மேலும் தாந்திரிகர்கள் வேதங்களின் பெயரால் தம் புத்தகங்களில் பரப்பியவையும் சேரும்.
நாளடைவில் இப்பொய்கள் நன்கு பரவி மேலைநாட்டு அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர ்கள் மஹிதர், சாயான் போன்றவர்களின் கருத்துக்களை தங்களது அரை வேக்காட்டு சமஸ்க்ருத அறிவைக் கொண்டு மொழிபெயர்த்ததோட ு அவற்றை வேதங்களின் மொழிபெயர்ப்பு என்றும் பெயர் கொடுக்கலாயினர்.
ஆனால் இவர்கள் வேதங்களை சரியாகப் புரிந்து கொள்வதற்கும் அறிவதற்கும் முதற்படியாகிய சிக்ஷை (ஒலியியல் அல்லது உச்சரிப்புக் கலை பற்றிய சாஸ்திரம் – phonetics ) , வியாகரணம் (இலக்கணம் – grammar), நிருக்தம் (மொழியியல் அல்லது பாஷாவிலக்கணம் – philology), நிகந்து (சொல்வளம் – vocabulary), ச்சண்டா (யாப்பிலக்கணம் – prosody), வானியல் அல்லது வானசாஸ்திரம் (astronomy), கல்ப இவைகளைப் பற்றிய அறிவுடையவர்களாக இல்லை.
அக்னிவீர் இயக்கத்தின் ஒரு முக்கிய நோக்கம் வேதங்களின் மீதுள்ள இவ்வகை தூற்றுதலை தெளிவாகவும், ஆதாரத்துடனும் தகர்த்தெறிந்து அவற்றின் பெருமை, ஞானோபதேசங்கள், அதன் தூய்மை – ஹிந்துக்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு மனிதருக்கும், ஜாதி, இன, நிற வேறுபாடுகளின்றி அவை காட்டும் நன்னெறிகளை மீண்டும் நிலைநாட்டுவதே!
பகுதி 1 – மிருகங்களிடத்தி ல் காட்டும் அஹிம்சை
—————–
யஸ்மிந்த் ஸர்வாணி பூதான்யாத்மைவாப ூத் விஜானத:
தத்ர கோ மோஹா கஹ் சோகாஹ் ஏகத்வமனுபச்யத:
யஜுர் வேதம் – 40.7
“எல்லாவற்றிலும் ஆன்மாவைக் காண்பவர் அதன் புறத் தோற்றத்தில் மயக்கமோ துயரமோ அடைவதில்லை, ஏனெனில் அவர் தன்னிலும் அவைகளிடத்திலும் வேறற்ற தன்மையைக் காண்கிறார்”
—————–
அனுமந்தா விஷசீதா நிஹந்தா க்ரயவிக்ரயீ
சம்ஸ்கர்த்தா சோபஹர்த்தா ச கதாகஷ்சேதி காடகா:
மனுஸ்ம்ருதி – 5.51
“மிருக வதையை அனுமதிப்பவரும், மிருகங்களைக் கொல்வதற்காக கொண்டு வருபவரும், வதை செய்பவரும், மாமிசம் விற்பவரும், அதை வாங்குபவரும், அதிலிருந்து உணவுப் பதார்த்தம் செய்பவரும், அதைப் பரிமாறுபவரும், அதை உண்பவரும் கொலைப் பாதகஞ்செய்தவரே”
—————–
ப்ரீஹிமட்டம் யவமட்டமாதோ மாஷமாதோ திலம்
ஈஷா வாம் பாகோ நிஹிதோ ரத்னதேயாய தந்தெள மா ஹின்சிஷ்டம்
பிதரம் மாதரம் ச
அதர்வ வேதம் – 6.140.2
“ஏ பற்களே! நீங்கள் அரிசியை, வாற்கோதுமையை, பருப்பு வகைகளை, எள்ளை உண்கிறீர்கள். இவைகளே உமக்காக ஏற்பட்டவை. தாய் தந்தையராக முடியும் எதையும் கொல்லாதீர்கள்”
—————–
யா ஆமம் மான்ஸமதந்தி பௌருஷேயம் ச யே க்ரவீ:
கர்பான் காதந்தி கேஷவாச்டாநிதோ நாஷயாமசி
அதர்வ வேதம் – 8.6.23
“நாம் சமைத்த இறைச்சி, பச்சை இறைச்சி, ஆண்-பெண் பாலர்களின் அழிவினால் ஏற்பட்ட இறைச்சி, கரு, முட்டை இவைகளை உண்பவர்களை அழிக்க வேண்டும்”
—————–
அனகோ ஹத்யா வை பீம க்ரித்யே
மா நோ காமஷ்வம் புருஷம் வதீ:
அதர்வ வேதம் – 10.1.29
“வெகுளியானவற்றைக் கொல்வது கண்டிப்பாக பெரும் பாவமே. நம் பசுக்களையும், குதிரைகளையும், மக்களையும் கொல்லாதீர்”!
இப்படித் தெளிவாக வேதங்களில் மிருக வதை தடை செய்யப்பட்டிருக ்கையில் எவ்வாறு இச்செயல்கள் வேதங்களில் ஊக்குவிக்கப்பட் டிருப்பதாய்ச் சொல்கிறார்கள்?
—————–
அக்ஃன்யா யஜமானஸ்ய பஷூன்பஹி:
யஜுர் வேதம் – 1.1
“ஓ மனிதனே – மிருகங்கள் அக்ஃன்யா – அழிக்கப்படக் கூடாதவை. அவைகளைக் காப்பாயாக”
—————–
பஷுன்ஸ்த்ராயேதாம்
யஜுர் வேதம் – 6.11
“மிருகங்களைக் காப்பீர்”
—————–
த்விபாதவா சதுஷ்பாத்பாஹி
யஜுர் வேதம் – 14.8
“இரண்டு கால், நான்கு கால் ஜீவன்களைக் காப்பீர்”
—————–
க்ரவி த – க்ரவ்ய (மிருக வதை செய்பவரிடமிருந் து பெறப்பட்ட மாமிசம்) + அத (அதை உண்பவர்) – மாம்ஸமுண்பவர்
பிசாசா – பிசித (மாம்ஸம்) + அஸ (உண்பவர்) – மாமிசமுண்பவர்
அசுத்ர்ப – அசு (ப்ராண வாயு) + த்ர்ப (தன்னைத் திருப்தி படுத்திக் கொள்பவர்) – தன் உணவிற்காக பிற உயிர்களைக் கவர்பவர்
கர்ப த & அண்ட த – கரு மற்றும் முட்டைகளை உண்பவர்
மன்ஸ் த – மாமிசம் உண்பவர்கள்
மாமிசம் உண்பவர்களை எப்போதும் கீழானவர்களாகவே பார்க்கிறது வேத இலக்கியங்கள். அவர்களை ராக்ஷசர்கள், பிஷாசர்கள் என்றெல்லாம் அழைக்கிறது. இவர்களை மேம்பட்ட சமுதாய வாழ்க்கையிலிருந ்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்க ளாகவே கருதியிருக்கிறது.
—————–
ஊர்ஜம் நோ தேஹி த்விபாதே சதுஷ்பதே
யஜுர் வேதம் – 11.83
“இரு காலுள்ளவையும் நான்கு கால்களுள்ள ஜீவன்களும் பலமும் ஆஹ்ருதியும் பெறட்டும்”
இம்மந்திரம் பெரும்பாலான ஹிந்துக்களால் உணவருந்துவதற்கு முன் சொல்லப்படும். ஒவ்வொரு ஆத்மாவும் எக்கணமும் நலமுற்று வாழப் பிரார்த்திக்கும ் தத்துவம் மிருக வதையை எவ்வாறு அங்கீகரிக்கும்?
லோக சமஸ்தா சுகினோ பவந்து – இந்த மந்திரத்தின் அர்த்தம் தெரியுமல்லவா? சமஸ்த என்றால் அனைத்தும் என்றர்த்தம்.
[பாகம் 2] – வேதங்கள் அஹிம்சையையே போற்றுகின்றன!
யஞங்கள் பலரின் விருப்பமான மற்றும் அவர்கள் பிரபலப்படுத்திய நம்பிக்கைப்படி மிருக வதையைக் குறிப்பதில்லை. யக்ஞம் என்ற சொல் வேதங்களில் ஒரு புனிதமான செயல் அல்லது மிகவுயர்ந்த தூய்மைப் படுத்தும் செயல் என்றே குறிக்கப் படுகிறது.
—————–
அத்வர இதி யக்ஞநாம – த்வரதிஹிம்சாகர் மா தத்ப்ரதிஷேத:
நிருக்தம் 2.7
யாஸ்க ஆச்சார்யரின் கூற்றுப்படி, நிருக்தத்தில் (பாஷாவிலக்கணம்) யக்ஞம் என்ற பதத்தின் ஒரு பொருள் அத்வர என்பதாகும். த்வர என்பது ஹிம்சை அல்லது வன்முறை என்றாகும். எனவே அ-த்வர என்பது அ-ஹிம்சை என்பது தெளிவாகிறது. வேதங்களில் பல இடங்களில் அத்வர பிரயோகம் காணக்கிடைக்கிறது.
—————–
மஹாபாரதக் காலத்திற்குப் பின்னர் வேதங்களைத் திரித்துக் கூறுதல் மற்றும் மற்ற புனித நூல்களில் இடைச்செறுகல்கள் பல நடைபெற்றன. சங்கராச்சாரியார ் வேதங்களின் மாண்பை ஒருவாறு மறுபடி நிலைநாட்டினார். சமீப காலத்தில் வாழ்ந்த ஸ்வாமி தயானந்த சரஸ்வதி வேதங்களை அவற்றின் வழிமுறைகளுக்கேட ்ப, நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் பொருள்படுத்தினா ர். அவருடைய வேதங்களைப் பற்றிய கருத்து, பொழிப்புரை அடங்கிய இலக்கியங்கள் சத்யார்த் ப்ரகாஷ் என்பவரால் “உண்மையின் ஒளி (Light of Truth), வேதங்கள் ஓர் அறிமுகம் (An Introduction to the Vedas) மற்றும் இன்னும் பலவாறாக மொழிபெயர்க்கப்ப ட்டுப் பல்கிப் பரவி வேத தர்மத்தின் சார்பில் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கியதோடு வேதங்களைப் பற்றிய கட்டுக்கதைகளைத் தவிடுபொடியாக்கியது.
வேதங்கள் யக்ஞங்கள் பற்றி என்ன கூறுகின்றன பார்ப்போம்..
—————–
அக்னே யம் யக்ஞமத்வரம் விஷ்வத: பரி பூரஸி
ச இத் தேவேஷு கச்சதி
ரிக் வேதம் 1.1.4
ஓ ஒளிர்விடும் கடவுளே! நீங்கள் எல்லா திக்குகளிலிருந் தும் போதிக்கும் அஹிம்சை யக்ஞம் அனைவருக்கும் பயனுள்ளதாகிறது, தெய்வீக நிலைகளைத் தொடுகிறது, மேலும் மேம்பட்ட ஆத்மாக்களால் அங்கீகரிக்கப்படுகிறது.
—————–
ரிக் வேதம் யக்ஞம் என்பதை அத்வர (அஹிம்சை) என்றே எங்கும் குறிப்பிடுகிறது . மற்றைய மூன்று வேதங்களிலும் அங்ஙனமே. இவ்வாறிருக்கையி ல் வேதங்கள் மிருக வதையை ஊக்குவிக்கிறதென ்று எவ்வாறு முடிவு செய்யலாம்?
கால்நடை மற்றும் பசு வதை வேதங்களில் இருக்கிறது என்ற மிகப் பெரிய குற்றச்சாட்டு அவை தொட்டு வரும் பெயர்களினாலேயே திரிபடைந்து வழங்கப்படுகிறது . உதாரணத்திற்கு அஸ்வமேத யக்ஞம், கோமேத யக்ஞம், நரமேத யக்ஞம் முதலியன. மிக அதீத கற்பனையிலும் இச்சொற்களில் வழங்கப்பெறும் “மேத” என்பது “பலி” என்பதாக வழங்கப்படமாட்டாது.
யஜுர் வேதம் குதிரையைப் பற்றி என்ன சொல்கிறதென்ற அற்புதமானதொன்றை ப் பார்ப்போம்.
——————————————————–
இமம் ம ஹிம்சிரேகாஷஃபம் பஷும் கனிக்ரதம் வாஜிநாம் வாஜிநேஷு
யஜுர் வேதம் – 13.48
“மற்ற பெரும்பாலான அனைத்து மிருகங்களையும் விட அதி விரைவாக ஓடும் ஓர் குளம்பினால் ஆன கனைக்கும் இம்மிருகத்தை வதைக்காதீர்!”
——————————————————–
அஸ்வமேத யக்ஞம் என்றால் குதிரையைப் பலி கொடுக்கும் யக்ஞம் என்று பொருளல்ல! யஜுர் வேதம் மிகத் தெளிவாகக் குதிரையைப் பலி கொடுக்காதீர் (ம) என்று சொல்லி விட்டது.
ஸப்தபாதத்தில் அஷ்வ என்றால் தேசம் அல்லது சாம்ராஜ்யம் என்று பொருள்படும்.
மேத என்றால் வதை அல்ல. அது புத்திக்கு ஏற்றாற்ப்போல செய்யப்படும் ஒரு காரியம் என்றும் ஒருங்கிணைப்பு அல்லது ஆக்கம் என்றும் பொருள் பட ஏதுவாகிறது. இதன் மூல அர்த்தம்: மேத — மேத்ரு சங்-க-மே
ராஷ்டிரம் வா அஷ்வமேதா:
அன்னம் ஹி கெள
அக்னிர்வா அஷ்வா:
ஆஜ்யம் மேதா:
(ஷத்பதம் 13.1.6.3)
ஸ்வாமி தயானந்த சரஸ்வதி தன் உண்மையின் ஒளியில் (Light of Truth) கூறுகிறார்:
“ஒரு சாம்ராஜ்யத்தின் / தேசத்தின் பெருமை, நலன் மற்றும் வளத்தை முன்னிறுத்தி செய்யப்படும் யக்ஞத்தின் பெயர் அஷ்வமேத யக்ஞம் எனப்படும்.”
“உணவைப் புனிதமாக வைக்கவும் அல்லது புலன்களை கட்டுப்பாட்டில் வைக்கவும் அல்லது உணவைப் புனிதமாக ஆக்கவும் அல்லது சூரியனின் கதிர்களை நற்பயன்பாட்டிற் கு பயன்படுத்தவும், பூமியை அசுத்தத்திலிருந ்து காக்கவும் செய்யப்படும் யக்ஞம் கோமேத யக்ஞம் எனப்படும்”
ஞானபூமி — இதில் நம் தமிழ் மொழியில் கோமகன் என்றால் கொற்றவன் / மன்னவன் என்றும் கண்டிருக்கிறோம் , கோமகன் என்றால் பசுவின் மகன் என்றா பொருள்படும்? ஒரு வேளை மேதாவிலாசம், மேதை என்ற சொல்லும் மேத என்ற சமஸ்க்ருத சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம ். தமிழ் மொழியும் சமஸ்க்ருதமும் ஒன்றையொன்று வார்த்தைப் பிரயோகங்களை கொடுத்து வாங்கியது என்பது மொழியாய்வாளர்கள ின் கருத்தே –
“கெள என்றால் பூமி, பூமியையும் அதன் சுற்றுச்சூழலையு ம் காக்கவென்று செய்யப்படும் யக்ஞம் கோமேத யக்ஞம்”
“வேதங்களின் அடிப்படையில் உருவான வழிமுறைகளின் படி இறந்தவரின் உடலை எரியூட்டுவதன் பெயர் நரமேத யக்ஞம்”
[பாகம் 3] – வேதங்களில் பசு மாமிசம் (கோமாம்ஸம்) கூறப்படவில்லை
குறிப்பு: இதன் ஆங்கில மூலத்தைக் காண இங்கே செல்லவும். இப்பகுதி இன்னும் சில பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வழங்கப் படுகின்றன. வெறும் மொழிபெயர்ப்பாக மட்டும் இல்லாமல் ஞானபூமி தளத்தின் அடிநாதத்தை ஒட்டியும் வேத தர்மத்தின் கோட்பாடுகளை ஒட்டியுமே இவை சித்தரிக்கப் படுகின்றன. எக்காரணம் கொண்டும் பிற மதங்களைத் தூற்றுவதோ, அவற்றைப் பின்பற்றுபவர்கள ை தாழ்த்துவதோ இங்கு செய்யப்படவில்லை . மறுமொழியின் வாயிலாகவும் அவை வரவேற்கப்படமாட் டா. வேதங்களின் மேன்மையையும் அவற்றை நாம் உணர்வது எத்துணை இன்றியமையாயது என்பதை மட்டுமே பறைசாற்றும் ஒரு மிகச்சிறிய முயற்சியே இஃது.
வேதங்களானது மிருக வதைக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, வெகு தீவிரமாக பசுவதையை எதிர்க்கவும் தடை செய்யவும் செய்கிறது. யஜுர் வேதம் பசுவதையை முற்றிலும் தடை செய்கிறது, பசுக்கள் மனிதருக்கு முற்றிலும் சத்துள்ள உணவைத் தருகிறதென்றும் கூறுகிறது.
——————————————————–
க்ருதம் துஹானாமதிதிம் ஜனாயாக்நே மா ஹிம்சிஹி:
யஜுர் வேதம் – 13.49
“பாதுக்காக்கப் படவேண்டிய பசுக்களையும் காளைகளையும் கொல்லாதீர்!”
——————————————————–
ஆரே கோஹா ந்ருஹா வதோ வோ அஸ்து
ரிக் வேதம் – 7.56.17
“ரிக்வேதத்தில் பசுவதை என்பது மாபாதகம் என்றும் மனிதரைக் கொல்வதற்குச் சமம் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய கொடுஞ்செயலைச் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் கூறுகிறது”
——————————————————–
சூயவஸாத் பகவதீ ஹி பூயா அதோ வயம் பக்வந்த: ஸ்யாம
அத்தி த்ர்நாமாக்ன்யே விஷ்வதாநீம் பிப ஷுத்தமுதகமாசரந்தீ
ரிக் வேதம் 1.164.40 / அதர்வ வேதம் 7.73.11 / அதர்வ வேதம் 9.10.20
அக்ன்ய பசுக்கள் – இவைகளை எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாது – அவை தாங்களே தங்களை சுத்த ஜலம், பச்சைப் புற்களை உண்டு ஆரோக்கியமாக்கிக ் கொள்ளும், இதன் மூலம் நாம் நற்பண்புகள், ஞானம் மற்றும் செல்வம் படைத்தவர்களாவோம்.
——————————————————–
கெள என்ற பதத்திற்கு அர்த்தமாக அக்ன்ய, அஹி, அதிதி என்ற பதங்களையும் நிகண்டு தருகிறார். யஸ்கரும் இதையே –
அக்ன்ய – கொல்லக் கூடாத ஒன்று
அஹி – வதை செய்யக் கூடாத ஒன்று
அதிதி – துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாத ஒன்று
பசுவின் இம்மூன்று பெயர்களும் மிருகவதை கூடாதென்பதை வலியுறுத்துகிறத ு. இவை வேதங்களில் மீண்டும் மீண்டும் பசுக்களைக் குறிப்பதாய் வருகிறது.
——————————————————–
அக்ன்யேயம் சா வர்ததம் மஹதே செளபாகாய
ரிக் வேதம் – 1.164.27
“பசு – அக்ன்ய – நமக்கு ஆரோக்கியமும் வளமும் கொணர்கிறது”
சுப்ரபாணாம் பவத்வக்ந்யாயா:
ரிக்வேதம் – 5.83.8
“அக்ன்ய பசுவிற்கு சுத்த ஜலம் கிடைக்க மிகச் சிறந்த வசதி செய்யப்பட்டிருக ்க வேண்டும்”
யஹ் பெளருஷேயேன க்ரவிஷா சமன்க்தே யோ அஷ்வேன பஷுநா யாதுதானா:
யோ அக்ன்யாயா பரதி க்ஷீரமாக்நே தேஷாம் ஷீர்ஷானி ஹரசாபி வ்ரிஷ்சா
ரிக் வேதம் – 10.87.16
“மனித, குதிரை அல்லது மிருகங்களின் சதைகளைப் புசிப்பவர், அக்ன்யப் பசுக்களைக் கொல்பவர் இவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.”
விமுச்யத்வமக்ஹ்ன்யா தேவயாநா அகன்மா
யஜுர் வேதம் 12.73
“அக்ன்ய பசுக்கள் மற்றும் காளைகள் உனக்கு வளங்களைக் கொணர்பவை”
மா காமனாகாமாதிதிம் வதிஷ்டா
ரிக் வேதம் 8.101.15
“பசுக்களை கொல்லாதீர். பசு ஒரு வெகுளி மற்றும் அதிதி – அதாவது துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாதது”
அந்தகாய கோஹாதம்
யஜுர் வேதம் – 30.18
“பசுவதை செய்பவர்களை அழி!”
யதி நோ காம் ஹன்சி யத்யஷ்வம் யதி பூருஷம்
தம் த்வா சீசேனா வித்யாமோ யதா நோ சோ அவீரஹ
அதர்வ வேதம் – 1.16.4
“யாரேனும் உங்களின் பசுக்கள், குதிரைகள் அல்லது மக்களை அழிப்பாராயின், அவர்களை ஈயக் குண்டினால் கொன்று விடுங்கள்”
வத்ஸம் ஜாதமிவாக்ன்யா
அதர்வ வேதம் – 3.30.1
பிறரைக் – கொல்லப் படக்கூடாத – ஆக்ன்யப் பசு தன் கன்றுகளை எவ்வாறு நேசிக்குமோ அவ்வாறு நேசியுங்கள்
தேனு சதனம் ரயீநாம்
அதர்வ வேதம் – 11.1.34
பசுவே அனைத்து வளங்களுக்கும் ஆதாரமாம்
ரிக்வேதத்தின் 28 ஆம் சூக்தம் அல்லது 6வது மண்டல ஸ்லோகம் அனைத்தும் பசுவின் பெருமையைப் பாடுகிறது.
ஆ காவோ அக்னமன்னுத பத்ரமக்ரந்த்சீதந்து
ஃபூயோ ஃபூயோ ரயிமிதஸ்ய வர்தயன்னபின்னே
ந தா நஷந்தி ந பதந்தி தஸ்கரோ நாசாமமித்ரோ வ்யதிரா ததர்ஷதி
காவோ பகோ காவ இந்த்ரோ மே அச்சான்
யூயம் காவோ மேதயதா
மா வ ஸ்தேநா ஈஷத மாகன்ஷ:
அனைவரும் பசுக்களை தொந்தரவுகளிலிரு ந்து காத்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
பசுக்களைப் பராமரிப்பவரைக் கடவுள் ஆசிர்வதிக்கிறார்.
பகைவரேயானாலும் பசுக்களின் மீது எந்த ஆயுதப் பிரயோகமும் செய்யலாகாது.
பசு வதை யாரும் செய்யக் கூடாது.
பசு வளமையும் வலிமையும் கொணர்கிறது.
பசுக்கள் ஆரோக்யமாகவும் மகிழ்வுடனுமிருந ்தால் ஆண்-பெண்களும் வியாதிகளற்று வளம் பெறுவர்.
பசுக்கள் சுத்தமான் தண்ணீரைப் பருகியும் பச்சைப் புல்லைப் புசித்துமிருக்க ட்டும். அவைகளைக் கொல்ல வேண்டா, அவை நமக்கு வளத்தையளிப்பவை.
—————————————————–
இப்படி பலப் பல இடங்களில் பசு ரக்ஷணம் பற்றியும் பசு வதை கூடாதென்பதையும் வலியுறுத்துகிறத ு வேதங்கள். பசுக்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும்ம் மிக்க மரியாதையுடனும் குறிக்கப் படுகிறது. படித்தவர்கள் அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். வேதங்கள் உயிர்வதையை, மேலாக பசுவதையையும் மாட்டிறைச்சியைய ும் எதிர்க்கிறதென்பதை.
ஆதார நூல்கள்:
1. Rigveda Bhashya – Commentary on Rigveda by Swami Dayanand Saraswati
2. Yajurveda Bhashya – Commentary on Yajurveda by Swami Dayanand Saraswati
3. No Beef in Vedas by BD Ukhul
4. Vedon ka Yatharth Swaroop (True nature of Vedas) by Pt Dharmadeva Vidyavachaspati
5. All 4 Veda Samhita by Pt Damodar Satvalekar
6. Pracheen Bharat me Gomamsa – Ek Sameeksha (Beef in Ancient India – an analysis) by Geeta Press, Gorakhpur
7. The Myth of Holy Cow – by DN Jha
8. Hymns of Atharvaveda – Griffith
9. Scared Books of the east – Max Muller
10. Rigveda translations by Williams/Jones
11. Sanskrit English Dictionary – Monier Williams
12. Commentary on Vedas by Dayanand Sansthan
13. Western Indologists – a study of motives by Pt Bhagvadutt
14. Satyarth Prakash by Swami Dayanand Saraswati
15. Introduction to Vedas by Swami Dayanand Saraswati
16. Cloud over understanding of Vedas by BD Ukhul
17. Shathpath Brahman
18. Nirukta – Yaska Acharya
19. Dhatupath – Panini
இக்கட்டுரையாசிரியர் மேலும் கூறுகிறார்.
இதை எழுதிய பின் எனக்குப் பின்னூட்டங்களாக பலப் பல கருத்துக்கள், வேத ஸ்லோகங்களையும் மனு ஸ்ம்ருதிகளையும் காட்டி அவை பசு மாமிசத்தை காட்டுவதாய்க் கூறின. மனு ஸ்ம்ருதியை பற்றிய ஒழுங்கான கருத்துக்களைப் படிக்க டாக்டர் சுரேந்திர குமாரின் புத்தகத்தைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்:
இவர்கள் கூறும் ஒரு வழக்கமான சாக்கு மான்ச என்பதை மாமிசம் என்று மொழிபெயர்ப்பதே. உண்மையில் மான்ச என்பது ஒரு பழச்சதை, கூழ் என்ற பொதுப் பெயருடன் விளங்குவது. மாமிசத்தை மான்ச என்று சமஸ்க்ருதத்தில் சொல்வது அது கூழாக, சதைப் பற்றாக இருப்பதாலேயே, சதைப்பற்றாக இருப்பவை எல்லாமே மான்ச என்ற பொருளாகாது. அதன் முழு வாக்கியத்தையும் முன்னும் பின்னும் சொல்லப் பட்டிருக்கும் ஸ்லோகங்களையும் வைத்துப் பார்த்தால் அதன் உண்மைப் பொருள் நன்கு புலப்படும்.
இவர்கள் மேலும் சுட்டிக் காட்டுவது ரிக் வேதம் 10/85/13 ஐ. இது சொல்கிறதாம் “ஒரு பெண்ணின் திருமணத்தின் போது பசுக்களும் எருதுகளும் வதை செய்யப்பட்டன” என்று.
உண்மை – இந்த மந்திரம் சொல்வதென்னவென்ற ால், பனிகாலத்தில் சூரியனின் கதிர்கள் ஹீனமடைந்து மறுபடி வசந்தத்தின் போது பலமடைகிறது என்பது. சூரியக் கதிரைக் குறிக்க பயன்படுத்தப் பட்ட சொல், பசுவையும் குறிக்கும் “கோ” என்பது. எனவே பசு என்று எளிதாக மொழிபெயர்த்து விடலாம். ஹீனமடைவதற்கான சொல் “ஹன்யதே” என்பது, அது வதைப்பது என்றும் பொருள்படும். இது இவ்வாறானால், எதற்காக அம்மந்திரம் மேலும் அடுத்த வரியிலேயே “வசந்தத்தில் இவை மீண்டும் தன் சுய ரூபத்தை அடைந்து விடும்” என்று சொல்ல வேண்டும்?
பனிகாலத்தில் வதை செய்யப்பட்ட பசு எவ்வாறு வசந்தத்தில் மீண்டும் உயிர்பெறும்? இதிலிருந்தே தெரியவில்லையா இவர்களது வண்டவாளம்?
மேலும்…
ரிக்வேதம் 6/17/1 – “இந்திரன் பசு, கன்று, குதிரை மற்றும் எருதுகளின் மாமிசத்தை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்” – என்பது.
உண்மை – இம்மந்திரம் “அதிபுத்திசாலிக ளாகிய அறிஞர்கள் இவ்வுலகை ஒளிமிக்கதாக்குக ிறார்கள், எப்படி யக்ஞத்தின் நெருப்பை மரங்கள் ஒளிபெறச்செய்கின ்றனவோ அப்படி” – இதில் இந்திரன், பசு, குதிரை அவைகளின் மாமிசங்கள் இவையெல்லாம் எப்படிப் புகுந்தன என்று வியப்பாயிருக்கிறது!
முடிவாக, வேதங்களில் ஒரு மந்திரமாவது பசுவதையையோ அல்லது பசு இறைச்சி உண்பதை ஊக்குவிப்பதாகவோ இல்லை, இல்லை, இல்லையென்பதே நிரூபணமாகிறது!
This article is translated by Gnanaboomi Team. Original post in English is available at agniveer.com/no-beef-in-vedas/
RSS feed for comments to this post