புரட்சிகரப் போராளியான ரான் டைனவர் அண்மையில் எழுதி வெளிவந்துள்ள நூல் Tamil Nation in Srilanka இலங்கைத் தீவில் உள்ள தமிழ் மக்கள் சுய நிர்ணயத்துக்காக நடத்திய போராட்டத்தைப் பற்றிய தகவல் தெரிவிக்கிற ஒரு வரலாற்று நூலாகும்.

சுதந்திரத் தமிழ்த் தேசத்திற்காகப் போராடும் நோக்கத்தில் தமிழர்கள் ஆயுதம் ஏந்திய காரணங்களை ரைடனவர் இந்நூலில் விளக்குகிறார்.

ron_ridenour_450அமைதியான தமிழர் எதிர்ப்புகளுக்கு எதிராகத் தொடர்ந்து அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் கையாளப்பட்ட அடுக்குமுறைகளையும் இலங்கையின் இனவாத அரசியலையும் ரான் எடுத்துரைக்கிறார்.

அரசினால் தூண்டிவிடப்படும் வன்முறை களாலும் இலங்கை ஆயுதப்படைகளினாலும் தமிழர் களைத் திரள்திரளாகப் படுகொலை செய்யும் போக்கை அவர் இடித்துரைக்கிறார். தமிழர் விடுதலைப் போராளிகளும் வன்முறை களைக் கையாண்டுள்ளனர் என்பதை அவர் ஒப்புக்கொள் கிறார்.

ரைடனவர் கியூபா மற்றும் இதர லத்தீன் அமெரிக்கப் புரட்சிகளுடன் நீண்ட காலமாக தொடர்பில் உள்ள ஒரு செயற்பாட்டாளர். அத்துடன் Links International Journal of Socialist Renewal என்ற ஊடகத்திற்குத் தொடர்ந்து எழுதிவருபவரும் கூட.

ஐரோப்பியக் காலனித்துவத்துக்கு முந்தைய இலங்கைத் தீவின் வரலாற்றை ரைடனவர் சுருக்க மாக விவரிக்கிறார்:

“வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குத் திரள் திரளாகப் புலம் பெயர்ந்த மக்கள் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு கணங்களாகவும் பழங்குடியினராகவும் குடியேறி நிரந்தரமாக வசிக்கத் தொடங்கிவிட்டனர்.” இந்தப் புலப்பெயர்வுகளின் விளைவாக இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தமிழர்களின் வாசம் வலிமை யுடன் திகழ்ந்தது. அதேவேளையில் தெற்கு மற்றும் மையப்பகுதியில் சிங்களவர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்தது.

“இந்தத் தீவில் உள்ள இரண்டு பிரதான தேசிய இனங்கள் இவ்வாறு தங்கள் சொந்தப் பிரதேசத் தையும் பண்பாட்டையும் வளர்த்துக் கொண்டன என்றாலும், இந்தியத் துணைக் கண்டத்தின் பெரு நிலப் பரப்பிலிருந்தும் சுதந்திரமான பண்பாட்டுப் பழக்கவழக்கங்களிலும் தொடர்பு கொண்டு இருந்தனர்.”

 

போர்ச்சுகீசிய, டச்சு, ஆங்கிலேயப் பேரரசுகள் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக இலங்கைத் தீவைக் கைப்பற்ற முயன்றன. 1815-க்குள்ளாக ஆங்கிலேயர்கள் முழுமையான தீவையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டனர். அவர்கள் அத்தீவை சிலோன் என்று பெயரிட்டழைத்தனர்.

“1972-இல் அது ஸ்ரீலங்கா என்று பெயர் மாற்றப்பட்டது” ஆங்கிலேயர் காலனித்துவ வாதிகள் ஒருவகைப் பண்ணைப் பொருளாதாரத்தை நிறுவினர். அவர்கள் சிங்கள வேளாளர்களின் பொதுவான நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். தென்னிந்தி யாவில் இருந்து அடிமைத் தொழிலாளர்களை வரவழைத்து மத்திய மலையகப் பகுதிகளில் தோட்டங்களில் “துவக்கத்தில் காபி; பின்னர் தேயிலை” உற்பத்தியில் வேலைக்கமர்த்தினர்.

பிற்காலத்தில் இன முரண்பாடுகளுக்கு வழி வகுக்கிற ஒரு காரணியே இந்த வரலாறாகும். ‘தங்களது நிலம் பறிக்கப்படுகிறது என்ற சிங்களர்களின் கோபம் தமிழ்த் தோட்டத் தொழிலாளிகளிடம் பகைமை கொள்வதற்கு வழிவகுக்கிறது. இதற்கிடையில் ஆங்கிலேய அரசாங்கம் சிங்களவர்கள், தமிழர்கள் ஆகிய இரண்டு இனங்களிலும் உள்ள மேட்டுக்குடி மக்களுக்கு ஆங்கில மொழிக் கல்வியையும் குடி யுரிமைப் பணிகளையும் அளித்தது. எனினும் அரசியல் பிரமுகர்களிடையே தோன்றிய போட்டிகள் இன முரண்பாடு உருவாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கின.

1948-இல் இலங்கைக்கு விடுதலை கிடைத்த போது புதிய சுதந்திர அரசாங்கத்தின் முதல் சட்டம் தமிழ்த் தோட்டத் தொழிலாளிகளின் குடியுரி மையைப் பறிக்க முனைந்தது. தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் முதலாளிகள் 19ஆம் நூற் றாண்டில் இந்தியாவில் இருந்து சிலோனுக்கு வந்து குடியேறியவர்கள் என்பதால், அவர்கள் இந்தியர் களே, இலங்கையர்கள் அல்லர் என்று மேற்சொன்ன முதல் சட்டத்திற்குக் காரணம் கற்பிக்கப்பட்டது. இந்தச் செயல் இனவாத அடிப்படையில் ஆனதும் தொழிலாளர்களுக்கு எதிரானதுமாக அமைந்தது. தோட்டத் தொழிலாளர்கள்தான் உழைக்கும் வர்க்கத்தில் மிகவும் மோசமாகச் சுரண்டப்பட்ட பிரிவினர்.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கிடையேயான பிரபல அரசியல்வாதி களில் சிலர் இந்த ஜனநாயகவிரோத நடவடிக்கையை ஆதரித்தனர். அவர்கள் தொழிலாளர்களின் - ஏன், தமிழர்களின் உரிமைகளின் மீது கூட அக்கறை கொள்ளவில்லை.

எனினும், சிங்கள ஆளும் வர்க்கத்தின் அடுத்த இனவாதச் செயல்பாடு ஆயிரக்கணக்கான ஆண்டு களாக இலங்கைத்தீவில் வசித்து வந்த தமிழர்களின் வழித்தோன்றல்களான வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களையும் பாதித்தது. சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்ற ஒரு சட்ட முன் வரைவு 1956-இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLEP) அரசால் அறிமுகப் படுத்தப்பட்டது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி (UNP) முதலில் அதை எதிர்த் தாலும், பின்னர் அதைக் கைவிட்டு, அரசியல் ஆடம்பரத்தைத் தன்வசம் எடுத்துக்கொண்டது.

இந்தச் சட்டம் அரசுப் பணிகளைப் பெறு வதிலும் அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொள் வதிலும் தமிழர்களுக்கு நெருக்கடி கொடுத்தது.

அடுத்த சில ஆண்டுகளில் இரண்டு பிரதான பூர்ஷ்வா கட்சிகள் (SLEP, UNP) சிங்கள இன வாத வாக்கைப் பெறுவதற்காகப் போட்டி போட்டன. இரண்டு கட்சிகளும் தமிழர்களுக்கு ஆதரவளிப் பதாக வெவ்வேறு நேரங்களில் வாக்குறுதியளித்தன. ஆனால், ஒரு கட்சி அதை எதிர்த்தபோது, இன்னொரு கட்சி அந்த ஆலோசனையையே கைவிட்டது.

தமிழர்கள் மொழிச்சட்டத்துக்கும், பாகுபாடு பார்க்கிற மற்ற நடவடிக்கைக்கும் எதிராக அமைதி யான போராட்டங்களை நடத்தினர். உடனே சிங்கள இராணுவத்தினரும் காவல்துறையினரும் கடுமையான அடக்குமுறைகளைத் தமிழர்கள் மீது ஏவிவிட்டனர். மேலும், இனவாதக் குழுக்கள் தமிழர்களைத் தொடர்ந்து படுகொலை செய்தன.

ட்ராட்ஸ்கியிஸ்ட் லங்கா சம சமாஜக் கட்சி (LSSP, இலங்கை சமத்துவ சமுதாயக் கட்சி), மாஸ்கோ ஆதரவுள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டும் சிங்களத்தில் மட்டும் சட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்தன. எனினும், அவர்கள் SLEP - யுடனான கூட்டணி அரசுகளுடன் சேரும் பொருட்டு, தங்கள் கொள்கைகளைக் கை விட்டனர். 1964-இல், லங்கா சம சமாஜக்கட்சி குறுகியகாலக் கூட்டணி அரசை அமைத்தது. பிறகு 1970-இல் இலங்கை சமத்துவ சமுதாயக் கட்சியும் இணைந்து அதேபோன்று அரசை அமைத்தன.

இனவாதக் கொள்கைகள், அமைதியான எதிர்ப்பின் மீதான அடக்குமுறை, பிரதான இடது சாரிக் கட்சிகளிலிருந்து பலர் வெளியேற்றப்பட்டமை ஆகியவற்றின் விளைவாக அதிக எண்ணிக்கை யிலான தமிழர்கள் தனித் தமிழ்த் தேசம் என்னும் கருதுகோளை ஆதரிக்கத் தொடங்கினர்.

1976, மே மாதத்தில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் (தமிழ்க் கட்சிகளின் கூட்டணி) தனித்தமிழ்நாடு வேண்டும் என்று கோரும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். 1977-இல் நடை பெற்ற இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி களில் தமிழர்களுக்கான சுதந்திர ஆதரவு பலத்தைக் காட்டி, அப்பகுதிகளில் உள்ள எல்லாத் தொகுதி களிலும் வெற்றி பெற்றனர். தேர்தல் முடிந்தவுடன் சிங்கள ஆதிக்கவாதிகள் இன்னொரு பயங்கரப் படு கொலையை நடத்தினர். அதில் 300-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்னர். 1,00,000 தமிழ்க் குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்தன.

தமிழ் ஈழ விடுதலைப் புலி

இதற்கிடையில், தமிழ்த் தேசம் வேண்டும் என்று கோரிப் போராடுவதற்காக, சில தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்தனர். 1970களில் தங்கள் நிதி நிலையை சமாளிப்பதற்காக வங்கிக் கொள்ளைகள், ஆயுதத் தேவைக்காகக் காவல்நிலையங்களின் மீது தாக்குதல்கள் போன்ற சிறிய அளவிலான வன் முறைச் செயல்களுடன் ஆயுதமேந்திய நடவடிக்கை தொடங்கியது. 1983 ஜூலையில் அரசு பொறுப்பில் நடத்தப்பட்ட படுகொலை வரை இந்தத் தமிழர் களின் ஆயுதப் போர் முழு அளவில் வளரவில்லை. அப்படுகொலையில் 3000 தமிழர்கள் கொல்லப் பட்டனர். இது, ஆயுதம் தாங்கிய போருக்குத் தமிழர் களிடையே பெரும் ஆதரவை ஏற்படுத்தியது.

அந்தக் காலகட்டத்தில் ஆயுதம் ஏந்திய பல தமிழ்க் குழுக்கள் தோன்றியிருந்தன. என்றாலும், அவர்கள் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடியது மட்டுமல்ல, அவர்களுக்குள்ளே உள்பகை கொள் வதிலும் ஈடுபட்டனர். வேலுபிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழ் ஈ.ழ விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னிலைக்கு வந்தது.

1987-இல் இலங்கையில் தீர்வு காணும் நோக்கில் இந்தியா இராணுவப் படைகளை அனுப்பியது. தமிழர்கள் ஓரளவுக்கு சுய ஆட்சியைத்தான் பெற முடிந்ததே தவிர, முழுமையான விடுதலையை அவர் களால் அடைய இயலவில்லை. இந்திய இராணுவம் ஆயுதங்களைக் கீழே போடுங்கள் என்று தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு உத்தரவிட்டது. அதன் விளைவாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையே போர் மூண்டது. 1990-இல் இந்தியப் படை இலங்கையி லிருந்து வெளியேறியது.

1994ஆம் ஆண்டிலும் 2002-ஆம் ஆண்டிலும் போர்நிறுத்த உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டும் 2009 வரை போர் நீடித்தது. இந்தப் போர்நிறுத்த உடன்பாடுகளின் போது அமைதிப் பேச்சு வார்த் தைகள் வாயிலாக எதிர்பார்க்கப்பட்ட அமைதியை எட்ட முடியவில்லை. மீண்டும் போர் மூண்டது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களின் முக்கியமான பகுதிகளைப் பல ஆண்டுகள் வரை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். யாழ்ப் பாணத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகத்தினைப் பற்றி ரைடனவர் பின்வருமாறு விவரிக்கிறார்: “அவர்கள் நீதிமன்ற அமைப்பு, காவல்படை, ஏழை மக்களுக்குச் சமூக உதவி, சுகாதாரம், கல்வி ஆகிய வசதிகளை ஏற்படுத்தினர். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் ஒரு வங்கி, வானொலி நிலையம் (புலிகளின் குரல்), ஒரு தொலைக்காட்சி நிலையம் ஆகியவற்றை நடத்தினர். கொரில்லா தலைவர்கள் மரபு வழி அடிப்படையிலான சிறு கூட்டுறவு வேளாண் குழுக்களை அமைக்க உதவி புரிந்தனர். விடுதலைப் புலிகள் சாதியமைப்பை அகற்றினர்; பெண்களுக்கு எதிரான குற்றங்களை அதிகாரபூர்வமாகத் தடைசெய்தனர்.”

1997-ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுமாறு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இலங்கை அரசு நெருக்கடி கொடுத்தது. ஆனால், அவர்களின் ஆட்சி வடக்கு மற்றும் கிழக்குப் பிர தேசங்களில் தொடர்ந்து நீடித்தது. 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற உடன்பாட்டின்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இந்நிலை ஏற்றுக்கொள்ளப் பட்டது.

எனினும், இலங்கை அரசு, உலகிலுள்ள பல அரசுகளின் உதவியோடு தனது ஆயுத பலத்தை மேம்படுத்திக்கொள்ளவே 2002ஆம் ஆண்டின் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டது. 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் இலங்கை அரசு தமிழர்கள் பூர்வீகமாக வசித்த பல பகுதி களைக் கைப்பற்றிக்கொண்டது.

“போர் நடைபெற்ற இறுதி மாதங்களில், போர்ச் சூழலற்ற பாதுகாப்புப் பகுதிகள் என்று அரசால் சுட்டப்பட்ட இடங்களில்கூட இலங்கை இராணுவம் பொதுமக்கள் மீது வன்மமாக வெடி குண்டுகளை வீசியது.” ரைடனவர், சர்வதேச பொது மன்னிப்புக் குழுவின் அறிக்கையிலிருந்து பின்வரு மாறு மேற்கோள் காட்டுகிறார்: “பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து இலங்கை இராணுவம் கொடூரமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. மருத்துவமனைகளின் மீது கூட அவர்கள் குண்டுவீசினர். அங்கிருந்த நோயாளிகளும், பணியாளர்களும்கூடக் கொல்லப் பட்டனர்; படுகாயமுற்றனர்.” 

மே, 2009-இல் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோல்வியுற்றதோடு போர் முடிவுக்கு வந்தது.

வெளிநாடுகளின் பங்கு

இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்த நாடுகளுள் அமெரிக்க ஐக்கிய நாடு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இஸ்ரேல், சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகியவையும் அடங்கும். ஈரான், இலங்கைக்குப் பொருளாதார அளவில் முதலீடு களாக நிதியுதவி செய்தது. இந்த அரசுகளுள் சில வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு அளவு களில் ஒன்றுக்கொன்று முரண் நிலை கொண்டவை. அப்படியிருக்க, இவை ஏன் இலங்கை அரசுக்கு இப்படி உதவி செய்தன?

இந்த நாடுகள் இலங்கையிடம் செல்வாக்கு பெறுவதற்காக ஒன்றையொன்று போட்டி போடு கின்றன. சான்றாக, சீனாவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையேயுள்ள வர்த்தகப் பாதையில் இலங்கையின் தென்கடலோரத்தில் அம்பந்தோட் டையில் சீனக் கப்பல்களை எரிபொருளுக்காகவும் நிறுத்துதுறையாகவும் பயன்படுத்திக் கொள்ள இலங்கையிடம் அனுமதி பெறுவதற்குக் கைம்மாறாக, சீனாவிடமிருந்து இலங்கைக்கு இராணுவ உதவி அளிக்கப்பட்டது. ஈரானிலிருந்து கணிசமான அளவு எண்ணெய் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால், இலங் கையில் ஒரு துறைமுகத்தை சீனா இயக்கிக் கொள்வதற்கு ஈரான் சீனாவுக்குப் பொருளாதார உதவியைச் செய்கிறது.

ron_ridenour_300ரைடனவர் பின்வருமாறு கூறுகிறார்: “இலங்கை ஒரு சக்தியை இன்னொரு சக்திக்கு எதிராக இயக்கியது: பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராக இந்தியா, சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஈரானுக்கும் லிபியாவுக்கும் எதிராக இஸ்ரேல், கூட்டுசேரா நாடுகளுக்கு எதிராக மேற்கு நாடுகள்.”

பல்வேறு நாடுகளால் இலங்கைக்கு அளிக்கப் பட்ட உதவிகளைப் பற்றிய விவரங்களை அளிக் கிறார் ரான். அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “05, மார்ச், 2007- அன்று அமெரிக்கா பரஸ்பர உதவி பரிமாற்றம் மற்றும் தளம் அளித்தல் தொடர் பாக இலங்கையுடன் பத்தாண்டு காலத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இராணுவ உதவிகள், கப்பல்களுக்கு எரிபொருள் எடுத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பரிமாற்றங்கள் இருநாடுகளுக்கிடையே நடைபெற இந்த ஒப்பந்தம் வழிசெய்கிறது. அமெரிக்கா ஏற்கெனவே கண் காணிப்புக்குப் பயன்படுகிற வகையில் திருகோண மலையில் ஒரு வானொலித் தளத்தை (Voice of America) நிறுவியுள்ளது. 1990களிலிருந்து அமெரிக்கா இராணுவப் பயிற்சி கொடுத்ததுடன், நிதியாகவும் ஆயுதங்கள் விற்பனை வாயிலாகவும் ஆண்டு ஒன்றுக்கு 1.5 மிலியன் டாலர் தொகையந்த கொடுத்து வந்துள்ளது. பென்டகன் கிளர்ச்சியை எதிர்ப்பதற் கான பயிற்சி, கடல்மார்க்கத்தில் உளவறியும் கருவி, அமெரிக்கப் போர்க்கப்பலின் சுற்றுக் காவல், வானூர்திகள் போன்றவற்றை இலங்கைக்குக் கொடுத்தது. 1996-ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க சிறப்புப் படைகளைப் பயன்படுத்தும் வகை யினத்தின் தொடர்ச்சியே இது!”

இஸ்ரேலும் கூட நீண்டகாலமாக இலங்கை யுடன் இராணுவத் தொடர்பு வைத்துள்ளது. 1970-க்கும் 2000-க்கும், இடைப்பட்ட காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறையான அரசியல் தொடர்பு எதுவும் இருந்திருக்கவில்லை. “எனினும் இலங்கையில் அடுத்து வந்த அரசுகள் இஸ்ரேலிட மிருந்து இராணுவ ஆலோசகர்கள், சிறப்புக் காவல் படையினர், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கில் உளவுத் துறையினர் ஆகியோரை ரகசியமாக இலங்கைக்குத் தருவித்தன. வெகு அண்மையில் இஸ்ரேல் விரைந்து தாக்கும் வானூர்திகள் கடல் மார்க்கத்தில் விரைந்து சென்று தாக்கும் தளவாடங்கள், மின்னணு உளவுக் கருவிகள், ஆலோசகர்கள், தொழில்நுட்ப வல்லுநர் களை இலங்கைக்கு அனுப்பியது. இஸ்ரேலிலிருந்து வந்தவர்கள் தமிழர்களைக் குறி வைத்துத் தாக்கிய இலங்கை இராணுவத்தில் உதவியாற்றினர். குறிப்பாக, வான்வழித் தாக்குதலை நடத்தினர்.”

சீன இராணுவத்தின் தொடர்பு என்பது அண்மைக் காலத்தில் ஏற்பட்டதுதான். “2007, ஏப்ரல் மாதத்தில் இலங்கை அரசு சீனநாட்டிலிருந்து வெடிகுண்டுகள், பீரங்கிகள் போன்ற போர்த் தள வாடங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டது. சீனா ஆறு ‘எஃப் 7 ஜெட் ஃபைட்டர்ஸ்’ என்னும் போர் விமானங்களை இலங்கைக்குக் கொடுத்தது. மேலும் கப்பல்படைக்குத் தேவையான ஆயுதங் களைத் தாங்கிச் செல்லும் கப்பல்கள், வானூர்திகள் இறங்கும் கப்பல்கள், பீரங்கிகள், வான்வழி ஏவு கணைகள், வானில் கண்காணிக்கும் உளவுக் கருவிகள் போன்றவற்றை இலங்கைக்கு வழங்கியுள்ளது அல்லது விற்பனை செய்துள்ளது.”

யார் பயங்கரவாதிகள்?

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கர வாதிகள் என்று குற்றம் சாட்டுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களைச் செய்திருக்கின்றனர் என்று ஒப்புக்கொள்ளும் ரைடனவர் அதைவிட மிகமிக மோசமானது இலங்கைத் தேசத்தின் அரசுப் பயங்கரவாதம் என்று சுட்டிக்காட்டுகிறார். 1987-ஆம் ஆண்டு ஐ.நா. பொதுக்குழுவின் தீர்மானம் ஒன்றை மேற் கோள் காட்டுகிறார்: “ஒடுக்குமுறையை அகற்றி, விடுதலைபெற வேண்டும் என்ற நோக்கில் போராளிகள் செய்யும் அரசியல் வன்முறையை விஞ்சியது நவீன அரசு பயங்கரவாதமும், அது பயன்படுத்தும் ஆயுத வன்முறையும்!”

இந்தக் கூற்று இலங்கையரசுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் என்று குறிப்பிடுகிறார் ரைடனவர். அரசுப் பயங்கரவாதச் செயல்களை சித்திரவதை, கொலை, ஆட்கடத்தல் (சிங்களவர்கள், தமிழர்கள் இரு இனத்தவருமே பாதிக்கப்பட்டதுண்டு) முதல் போரின் போது தமிழ்ப் பொதுமக்கள் மீது வெடி குண்டு வீசப்பட்டது வரை ஏராளமாக வகைப் படுத்த முடியும்: “இலட்சக்கணக்கானோர் கொல்லப் பட்டனர், போர் நடந்த கடந்த இரண்டு வாரங் களில் மட்டும் சுமார் 40,000 பேர் பலியாயினர்.”

தமிழீழ விடுதலைப்புலிகளும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதை ஒப்புக் கொள்கிறார் ரைடனவர். அவர் இதைச் சுட்டிக்காட்டி, “வன் முறையைப் பயன்படுத்தினால், அது சுழன்று சுழன்று முடிவின்றி வன்முறையாகவே பயணிக்கும்.” என் கிறார். சிங்கள ஆதிக்கவாதிகள்தான் வன்முறையைத் தொடங்கி வைத்தனர். பிறகு, வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் இறுதியில் வேறு வழியின்றி தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதங்களைக் கையில் எடுத்து, தாக்கதலில் ஈடுபட நேரிட்டது.”

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் வன்முறை யுத்தியைப் பயன்படுத்தியது என்பது தேசிய விடுதலை இயக்கங்களிடையே புதுமையான ஒன்று அல்ல. “எல்லா ஆயுதந்தாங்கிய அமைப்புகளும் வன்முறையில் ஈடுபடுகின்றன என்று சொல்ல முடியாது. சில அமைப்புகள் வன்கொடுமைகள், நீண்டகால போர் நடவடிக்கை என்ற பெயரில் பயங்கர வாதங்களைச் செயல்படுத்துகின்றன.” என்கிறார் ரான். இருந்த போதிலும் அவர், “குறிப்பிட்ட ஒரு இனத்தவர் மீது அரசு ஏவும் பயங்கரவாதம்” என்ற வகையில் அரசாங்கங்களுக்கு எதிராக, இந்தப் போராளி இயக்கங்களையே ரான் ஆதரிக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து, இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதித் தமிழர்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் வசித்து வருகின்றனர். பல தமிழ்க் குடும்பங்கள் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் அங்கு வந்து குடியேறிய சிங்களவர்களிடம் பறிகொடுத்தனர்.

போர் முடிவுற்ற பிறகு, இலங்கை இராணு வத்தின் அளவு குறைந்து விடவில்லை; மாறாக, 1,00,000 இராணுவத்தினர் புதிதாகச் சேர்க்கப்பட்டு உள்ளனர். ரைடனவர் பின்வருமாறு கூறுகிறார்: “இலங்கை இராணுவத்திற்கு மேலும் படைவீரர்கள் தேவைப்படுவர், ஏனெனில், தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு இன அழிப்பு நிகழ்த்துவது என்பது இப்போது அன்றாட நிகழ்வாகி விட்டது. தமிழர் களின் பூர்வீக பூமி சிங்களக் குடியேற்றத்தாரால் தடம்தெரியாமல் சிதைக்கப்படுகின்றன. ஜான் பில்கர் (John Pilger) கூற்றுப்படி, இதே யுத்தியைத் தான் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது.”

இலத்தீன் அமெரிக்க நாடுகளின் நிலைப்பாடு

இடதுசாரிக் கொள்கையுடைய கியூபா, வெனிசுவேலா, பொலிவியா உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகள் தமிழர்களின் போராட்டத்தின் மீது கொண்டுள்ள கொள்கை நிலைப்பாட்டையும் ரைடனவர் இந்நூலில் விவாதிக்கிறார். ஐ.நா. மனித உரிமைக் குழுவில் நடைபெற்ற இலங்கையைப் பற்றிய விவாதத்தில் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தவறான கொள்கை நிலைப்பாட்டைப் பற்றி இந்தி யாவில், தமிழ்நாட்டில் உள்ள இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழக உறுப்பினர் ரான் ரைடனவருக்கு எழுதிய கடிதமே இலங்கைத் தமிழர்களின் போ ராட்டத்தினைப் பற்றி எழுதும்படி உந்தித் தள்ளியது. இலத்தீன் அமெரிக்கப் பிரதிநிதிகள் தமிழீழ விடு தலைப் புலிகளை “பயங்கரவாதிகள்” என்று மிகச் சாதாரணமாக ஒதுக்கித் தள்ளி விட்டனர்; தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கும்படி கட்டாயத்தை ஏற்படுத்திய (தமிழ்மக்கள்மீதான) அடக்குமுறையைப் புறந்தள்ளிவிட்டு, இலங்கை அரசை ஆதரித்தனர்.

இலத்தீன் அமெரிக்க நாடுகள் ஏன் இந்நிலையை எடுத்தன? அதற்கான ஒரு காரணம் அறியாமை யாக இருக்கலாம் என்கிறார் ரைடனவர். “இலங் கையின் மோசமான வரலாற்றை அவை அறியா திருந்திருக்கலாம்.”

இன்னொரு காரணம் “பிரிவினைவாதம்” என்னும் சந்தேகமாக இருக்கலாம். வளர்ந்து வரும் நாடுகளைக் கீழறுப்பு செய்வதற்காக ஏகாதிபத்தி யங்கள் சில சமயங்களில் பிரிவினைவாத அமைப்பு களைத் தூண்டிவிட்டுள்ளன: “பொலிவியாவும் வெனிசுவேலாவும்கூட பிரிவினைவாதிகளின் வற் புறுத்தலால் அடக்கப்படுகின்றன; ஆனால் இவை யெல்லாம் எந்தத் தேசிய இனத்திடமிருந்தும் வர வில்லை. வரலாற்றுப் பூர்வமாக இனக்குழு சார்ந்த பூர்வீக நிலம் எதுவும் இல்லாத வெள்ளையினப் பணக்கார வர்க்கத்திடமிருந்தும் குடியேற்றத்தாரிட மிருந்தும்தான் கிளம்புகின்றன.” இப்படிப்பட்ட ஏகாதிபத்தியத்துடன் இணைந்த பிரிவினைவாத இயக்கங்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது இலங்கைத் தமிழர்களின் போராட்டம். இது உண்மை யான தேசிய ஒடுக்குமுறையிலிருந்தே எழுகிறது.

அமெரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்பதைக் காட்டிலும், இலங்கை அரசின் போர் நடவடிக்கைக்குத்தான் மிக அதிக ஆதரவளித்தது. எனினும், அபூர்வமாக இலங்கையரசின் மனித உரிமை சார்ந்த ஆவணங்களைப் பற்றி மிகச் சிறிய அளவில் விமர்சனம் செய்தது. இப்படிப்பட்ட விமர்சனங்களை ‘ஏகாதிபத்தியத்தின் தலையீடு’ என்று குறிப்பிட்டு இலங்கை அரசின் பிரதிநிதிகள் சில வேளைகளில் இடதுசாரிச் சொற்றொடரைப் பயன்படுத்தினர்.

ஐ.நா. மனித உரிமை ஆணைய விவாதத்தின் போது, சில இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தூதர்கள் இந்த வாதங்களை நம்பும்படி ஆகி விட்டது. பொலிவியாவின் தூதர் இலங்கையரசை விமரி சிக்கும் தரப்பில் “நவ காலனித்துவப் போக்கு” களைப் பற்றிப் பேசினார்.

ரைடனவர் இலத்தீன் அமெரிக்காவின் நிலைப் பாட்டுக்கான சாத்தியமான நிலவியல் அரசியல் காரணங்களையும் ஆய்கிறார். சீனாவும் ஈரானும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் முக்கியமான வர்த்தக உறவாளர்கள். அவை அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கூட்டாளிகளாகக் காணப்படுகின்றன. சீனாவும் ஈரானும் இலங்கையரசாங்கத்தை ஆதரிப் பதால், அதே வழியில் செல்ல வேண்டிய சூழ்நிலை இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்படலாம்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளின் இந்த நிலைப் பாட்டுக்கான காரணம் எதுவாக இருந்தாலும், அதன் விளைவுகள் துர்அதிர்ஷ்டமானவையே. பன்னாட்டு மன்றங்களில் ஆதரவாக இருக்கும் தமிழர்களின் நட்புறவை இழக்கிறது. மேலும் தங்கள் சகோதரத் தமிழர்கள் இலங்கையில் படும் துயரங்களுக்காக இரக்கம் கொள்ளும் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு மக்கள் உட்பட, இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் துயரங்களைப் பற்றிய உண்மை நிலையை அறிந்திருப்போர் அனைவரின் மத்தியிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இருக்கும் நல் மதிப்பையும் சீர்குலைக்கிறது - இலங்கையரசுடனான இந்த ஆதரவு நிலைப்பாடு.

(Tamil Nation in Sri Lanka என்ற தலைப்பில் ரான் ரைடனவர் (Ron Ridenour) எழுதிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூலை, கடந்த 2011, நவம்பர் மாதத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சென்னையில் ரான் ரைடனவர் முன்னிலையில் வெளியிட்டது. இந்த நூலுக்கு ‘Links Journal  for Socialist Renewal’ என்னும் இணையதள இதழில் ‘New Book on the History of the Tamil People’s Struggle for Self-determination’ என்னும் தலைப்பில் க்ரிஸ் ஸ்லீ (Chris Sle) எழுதிய மதிப்புரையின் தமிழாக்கமே இக்கட்டுரை.)

தமிழில் : சா.ஜெயராஜ்

Pin It