திருவள்ளுவர் பிறந்த நாளை வடநாட்டுப் பள்ளிக் கூடங்களில் கொண்டாட பா.ச.க.வின் நடுவணரசு ஆணையிடப் போகிறது; நடுவண் கல்வி அமைச்சர் சுமிரிதி இராணி அதற்கான முடிவை 28.11.2014 அன்று தில்லி நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் அறிவித்தார். அதேபோல் வடநாட்டில் பாரதியார் விழாவைக் கொண்டாடவும் நடுவணரசு திட்டமிடுவதாகச் செய்திகள் வருகின்றன. இதற்கான முயற்சிகளில் உத்தரகாண்ட் பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விசய் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து தருண் விசய் தமிழ் மொழியின் பெருமைகளைப் பேசி வருகிறார். வடநாட்டு மாணவர்கள் தமிழை ஒரு பாட மாகப் படிக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து வருகிறார்.

இந்தச் செய்திகள் தமிழ்நாட்டில் பொதுவாகத் தமிழ் உணர்வாளர்களிடம் மகிழ்ச்சிப் பெருக்கை உண் டாக்கியிருக்கிறது. கலைஞர் கருணாநிதி தொடங்கி கடைக்கோடித் தமிழுணர்வாளர் வரை பலர் பா.ச.க. வுக்கு நன்றி தெரிவித்தார்கள். கவிஞர் வைரமுத்து, முனைவர் அவ்வை நடராசன் போன்றோர் தருண் விசயை சென்னைக்கு வரவழைத்து அவர்க்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினர்.

பா.ச.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கடந்த 09.11.2014 அன்று தமிழகமெங்கும் தமிழ்ப் பேரரசன் இராசேந்திரச் சோழனின் ஆயிரமாவது முடி சூட்டு விழாவைக் கொண்டாடிப் பேரணிகள் நடத்தி யது.

பகைவன் பாராட்டும் போது பல மடங்கு எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தமிழர் களிடம் பரவலாக இன்னும் உருவாகவில்லை. காரணம், எதிரி தமிழினத்தின் மீது போர் தொடுத்துள்ளான் என்ற மெய் நடப்பை அவர்கள் அறிந்து கொள் ளவில்லை. கலைஞர் கருணாநிதிக்கு அது தெரியும். ஆனால் அவரோ எதிரியின் முகாமில் சேர்ந்து ஆதாயம் பார்க்கும் அரசியல் தலைவர். செயலலிதாவுக்கும் நரேந்திர மோடிக்கும் முகாம் ஒன்றுதான், களங்கள் வேறு வேறாக இருக்கின் றன. அவ்வை நடராசன், வைர முத்து போன்ற அறிவாளிகள் அதிகார நிழலில் வளர்ந்த பயிர்கள்.

தனிப் பெரும்பான்மையுடன் கடந்த மே மாதம் இந்திய ஆட்சி யைக் கைப்பற்றிய பா.ச.க. முதல் பெரும் நடவடிக்கைகளாகச் செய் தவை இந்தித் திணிப்பும் சமற்கிருத வாரக் கொண்டாட்டமும்தான்.

நடுவணரசு அதிகாரிகள் தங்கள் சமூக வலைத் தளங்களில் அரசின் செயல்பாடுகள் - தங்கள் துறை பற்றிய அறிக்கைகள், விளக்கங்கள் அனைத்தையும் இனி மேல் இந்தியில்தான் வெளியிட வேண்டும் என்று ஆணையிட்டது மோடிஅரசு. தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பியவுடன், வட நாட்டுச் செய்திகளை இந்தியில் வெளியிடட்டும் தென்னாட்டுச் செய்திகளை ஆங்கிலத்தில் வெளியி டலாம் என்று திருத்தம் கூறித் தந்திரம் செய்தது மோடி அரசு.. இணைய தளங் களில் தென்னாடு, வடநாடு என்று பிரித்துச் செய்தி தர முடியுமா? முடியாது. அடுத்து நடுவண் அரசு அதிகாரிகள் இந்தியா முழுமைக்குமான அதிகாரி கள். அவர்கள் தென்னாட்டுப் பொறுப்பாளர்கள் வடநாட்டுப் பொறுப்பாளர்கள் என்று பிரிக்கப் படவில்லை.

அதன் பிறகு சமற்கிருத வாரம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றது. மோடி அரசு.. இந்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசு களும் சமற்கிருத வாரம் கடை பிடித்துப் பள்ளி நிகழ்ச்சிகள் - அரசு நிகழ்ச்சிகள் நடத்தி சமற்கிருத மேன்மைகளைப் பரப்பவேண்டும்; சமற்கிருதப் பயன்பாட்டை விரிவு படுத்த வேண்டும் என்றது. இதற் கும் தமிழக அரசும், தி.மு.க. உள் ளிட்ட தமிழகக் கட்சிகளும் எதிர்ப் புத் தெரிவித்த பின், மாநில அரசு களைக் கட்டா யப்படுத்தவில்லை என்று தற்காலிக மாகப் பின் வாங்கிக் கொண்டது பா.ச.க. அரசு. பின்வாங்குவதுபோல் ஒரு பாவனை; அவ்வளவே!

பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர் கள் “தமிழ்மொழி, தமிழினம், தமிழ்த் தேசியம் என்று பேசக் கூடாது; ஒரே பாரதம்; பாரதீயன் என்ற ஒரே இனம்தான் இருக்கிறது” என்று மேடைகளிலும் தொலைக் காட்சி விவாதங்களிலும் முழங்கி வருகிறார்கள்.

சிந்துச் சமவெளி நாகரிகம், தமிழர் நாகரிகமன்று; அது ஆரிய நாகரிகம் என்றும் ஆரியர்கள் இந்தியாவின் தொல்குடிகள் என் றும் வரலாற்று நூல்களில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ்.ஸூம் நரேந்திர மோடி அரசும் தமிழினத்திற்கெதி ரான சதிவேலைகளில் இறங்கியுள் ளன. தமிழர்களே இந்தியாவின் தொல்குடிகள்; தமிழர் நாகரிகமே சிந்துவெளி நாகரிகம் என்று மெய்ப் பிக்கப்பட்டு, உலக அறிஞர்களால் வரையறுக்கப்பட்ட வரலாற்று உண்மைகளைக் குழி தோண்டிப் புதைக்கும் வேலையில் ஆர்.எஸ். எஸ்ஸூம் பா.ச.க.வும் ஈடுபட்டுள் ளன.

இந்த வரலாற்றுப் புரட்டைச் செய்வதற்காக இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் தலைவராக ஆர்.எஸ்.எஸ். அமைப்புச் சார்பாளரான ஆந்திரப் பிரதேசப் பார்ப்பனர் ஒய். சுதர்சன ராவ் என்பவரை அமர்த்தியுள்ளது நரேந்திர மோடி அரசு. அனைவராலும் மதிக்கப் பெறும் வரலாற்றுப் பேராசிரியரான இராமச்சந்திர குகா, “எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலான வரலாற்றுப் பேராசிரியர் களுக்கும் சுதர்சன ராவ் யார் என்றே தெரியவில்லை.ஆந்திராவைச் சேர்ந்த சில பேராசிரியர்களிடம் அவர் பற்றிக் கேட்டபோது, அறியத்தக்க ஆய்வு நூல் எதுவும் எழுதியவரல்லர் அவர் என்றார்கள்” என்று குறிப்பிடுகிறார். (தி இந்து - தமிழ் - 05.08.2014)

“அவுட் லுக்” (21.07.2014) ஆங்கி லக் கிழமை இதழுக்கு அளித்த நேர்காணலில் சுதர்சன ராவ் கூறிய வற்றிலிருந்து அவரது ஆராய்ச்சி “மேன்மை”யைப் புரிந்து கொள்ள லாம்:

அவுட் லுக் : வரலாற்றுச் சான்றுகள் மற்றும் ஆய்வுகளைக் கருத்தில் கொள்ளாமல் வரலாறு எழுதக் கூடாதல்லவா?

சுதர்சன ராவ் : “பொருட்களை முதன்மைச் சான்றுகளாகக் கொண்டு முடிவுக்கு வருவது மேலை நாட்டு ஆய் வாளர்கள் வழக்கம். ஆனால் தொன்மை மிக்க தொடர்ச்சியான நாகரிகமும் பண்பாடும் கொண்ட இந்திய வரலாற் றில் எல்லாவற்றிற்கும் அகழாய்வுப் பொருட்களை வைத்து சான்று காட்ட முடியாது. அகழ்வாராய்வு செய்வது என்பது கிராம மக்களை வெளியேற்று வதாக முடியும். மக்களின் வழக்கத்தில் உள்ள செவிவழிக் கதைகளையும், செய்திகளையும் சான்றுகளாக வைத்து முடிவுகளுக்கு வருவது இந்தியச் சூழ லில் தவிர்க்க முடியாதது.”

அவுட் லுக் : ஒரு வரலாற்றா சிரியராகிய நீங்கள், வரலாற்றுக்கு மதவழிப்பட்ட பொருள் விளக்கம் தரலாமா?

சுதர்சன ராவ் : “நான் ஒரு இந்து, நான் ஒரு பிராமணன். இந்துவாக இருப்பது மதமன்று. நான் சார்ந்துள்ள வகுப்பிற்குரிய மதப்பழக்க வழக்கங்க ளைக் கொண்டுள்ளேன். மதங்கள் அண்மைக்கால வெளிப்பாடுகள்.” (பிராமண வகுப்பு பழமையானது என்கிறார் - பெ.ம.)

இங்கு மதங்கள் தோன்றுவ தற்கு முன்பே சனாதன தர்ம வாழ்க்கைமுறை இருந்தது. அவரவர் கடை மையை அவரவர் செய்து வந்ததால் சமூகத்தில் முரண்பாடு களும் மோதல்களும் அப்போது இல்லை. அப்போது ஒரே ஒரு சனா தன தர்மம் தான் இருந்தது. வர்ணா சிரம தர்மம் சமூக ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டியது. மத்திய காலத்தில் முசுலீம்கள் இந் துக்களின் கோயில்களை இடித்து விட்டு மசூதிகள் கட்டத் தொடங் கிய பின்தான் சமூகத்தில் மோதல் ஏற்பட்டது. பாபர் மசூதி அப்படிக் கட்டப்ப ட்டதே. அயோத்தி பற்றி இராமா யணத்தில் வர்ணிக்கப் படுவது போல்தான் மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதற்கானச் சான்றுகள் அங்கு இப்போதுள்ள மக்கள் வாழ்க்கை முறையில் உள்ளன. இராமர் அயோத்தியில் பிறக்க வில்லை என்றால் வேறு எங்கு பிறந்தார்?”

அவுட் லுக் : நீங்கள் இரு சமூகங்களுக்கிடையே (இந்து - முஸ்லிம்) உள்ள சிக்கல்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்கள்; தலித்துகள் மற்றும் தீண்டாமை பற்றி என்ன கூறுகிறீர்கள்?

சுதர்சன ராவ் : தீண்டாமை என்பது அண்மைக் காலத்தில் ஏற் பட்டது. மூன்றாயிரம் ஆண்டுகளுக் குள் உருவானது. மூன்றாயிரம் ஆண்டு களுக்கு முன் நாம் தீண்டாமையைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. விசு வாமித்திரர் தலித் வீட்டிற்குச் சென்று “பசிக்கிறது, நாய்க்கறி கொடுங்கள்” என்று கேட்டார். இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பல சாதிகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தீண்டாமை இல்லை.

ஆர்.எஸ்.எஸ். அறிஞர் சுதர்சன ராவுக்கு 3000 ஆண்டுகள் என்பது மிகவும் அண்மைக் காலம்! இங்கு கவனிக்க வேண்டியது, பிராமண வகுப்பு - இந்து மதத்திற்கு முந்தியது, இந்து மதத்தைவிட ஆழமானது என்று சுதர்சனராவ் கூறுவதாகும். அத்துடன் தான் பிராமண வகுப்புப் பண்பாட்டை கடைபிடிப்பதனா லேயே ஒர் இந்துவாக இருக்கிறேன் என்றும் அவர் கூறுகிறார். அவர் கருத்துப்படி ஆரிய சமூக அமைப் பில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதி இருந்தது. ஆனால் தமிழ்ச்சமூக அமைப்பில் 1200 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதி இல்லை; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமை இல்லை. தொழில் பிரிவுகளாக சமத்துவத் துடன் இருந்த தமிழ்ச் சமூகத்தை சாதிப் பிரிவுகளாக மாற்றியது ஆரிய வர்ணாசிரம தர்மமே! தீண் டாமையும் ஆரியம் தந்த தொற்று நோயே!

ஓர் ஆய்வாளர் எவ்வளவு பொய் சொல்லுகிறார்! சூத்திர னாகிய ஏகலைவன் சத்திரியர்களுக் குரிய போர்க்கலையைக் கற்றுக் கொண்டதற்காக அவனது கட்டை விரலைக் காணிக்கையாக வெட்டிக் கொடுக்கச் சொன்னார் துரோணாச் சாரியார் மகாபாரதத்தில்! சூத்திர னாகிய சம்பூகன் பிராமணர்களுக் குரிய தவத்தை மேற்கொண்டதால் இராமனால் கொலை செய்யப்பட் டான் இராமயணத்தில்! இராமா யண, மகாபாரத காலத்தில் ஒரே சனாதன தர்மம் இருந்தது, சமூகத் தில் மோதலும் முரண்பாடும் இல்லை; தீண்டாமையும் இல்லை என்று கூசாமல் பொய் சொல் கிறார் ஆர்.எஸ்.எஸ். ஆய்வாளர்!

இவர்தான் ஆர்.எஸ்.எஸ். விரும்பும் வகையில் ஆரியத்தை மையப்படுத்தி இந்திய வரலாற்றை எழுதத்தகுந்தவர் என்று நரேந்திர மோடி தெரிவு செய்து இந்திய வர லாற்று ஆய்வுக் கழகத்தின் தலைவ ராக்கியுள்ளார்.

மோடியின் உள்ளங்கவர்ந்த இன்னொரு வரலாற்று ஆய்வாளர் தீனாநாத் பத்ரா! இவர் ஆர்.எஸ். எஸ்ஸின் பச்சோ அண்டோலன் சமிதித் தலைவர். குசராத்தின் முதல்வராக மோடி கோலோச்சிய போது மேற்படி பத்ராவின் நூல் களைத்தான் பள்ளிப் பிள்ளை களுக்குப் பாடநூலாக வைத்திருந் தார். இப்பொழுதும் அந்நூல்கள் அங்கு பாட நூல்களாக இருக் கின்றன. பத்ரா எழுதிய ஒன்பது நூல்களுக்கு முதலமைச்சர் மோடி முன்னுரை எழுதியுள்ளார். தீனா நாத் பத்ராவின் ஆராய்ச்சி முடிவு களுக்கு வானமே எல்லை. இதோ ஒரு சான்று.

“மகாபாரதக் கதையில் வரும் திருதராட்டிரன் மனைவி காந்தாரிக்குத் துரியோதனன் முதலாக நூறு பிள்ளைகள். இவர்கள் எப் படிப் பிறந்தார்கள்? காந்தாரி தனது கருப்பையிலிருந்து வெளியேறி விழுந்த சதைப் பிண்டத்தில் சில மருந்துகளைக் கலந்து, அதனைக் குளிர்ச்சியான குடத்தில் பாது காப்பாக வைத்திருந்தார். பின்னர் அதை எடுத்து நூறு கூறுகளாகப் பிரித்து, நெய்யால் நிரப்பப்பட்ட 100 குடங்களில் வைத்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து இவை நூறு கவுரவர்களாகப் பிறந்தன. ஸ்டெம் செல் மூலம்தான் இப்படி நூறு பிள்ளைகள் உருவாக்க முடியும். இந்த ஸ்டெம் செல் ஆய்வு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதத்தில் இருந்தது” (நூல்: TEJOY MAY BHARAT)

மும்பையில் கடந்த 25.10.2014 அன்று ரிலையன்சு பெருங் குழுமத்தின் மருத்துவமனைத் திறப்பு விழா ஒன்றில் நரேந்திர மோடி பேசும்போது, கர்ணன் தன் தாய் குந்தியின் கருப்பையிலிருந்து பிறக்காததற்குக் காரணம் அக் காலத்திலேயே மரபணு அறிவியல் வளர்ந்தி ருந்ததுதான் என்றும், விநாயகர்க்கு யானைத் தலை இருப்பதற்குக் காரணம் பிளாஸ்டிக் சர்ஜரி அப்போதே இருந்ததுதான் என்றும் கூறினார்.

வரலாற்று ஆராய்ச்சித் துறை யில் சுதர்சன ராவ், தீனாநாத் பத்ரா போன்ற பாப்பனக் கும்பல் பா.ச.க. ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தும் போது, திருவள்ளுவருக்கும் தமிழ் மொழிக்கும் இந்தியாவில் எந்த இடம் இருக்கும் என்பதைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நரேந்திர மோடியோ, சுதர்சன ராவோ, தீனாநாத் பத்ராவோ மூட நம்பிக்கையாளர்கள் அல்லர்; மக்களை மூட நம்பிக்கையாளர் ஆக்கி ஆரிய ஆதிக்கத்தை நிலை நாட்ட முனைவோர்! இது ஆரியத் தின் போர்முறை!

திருவள்ளுவரின் “எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்ற திருக்குறளை இவர் கள் ஏற்கப் போகிறார்களா? திரு வள்ளுவரை ஓர் இந்து ரிஷி என்றார் கோல்வால்கர்! கோல்வால் கருக்கு முன்னரே, ஆரியச் சார் பாளர்கள் “ஸ்ரீ வல்லப” என்ற சமற் கிருத முனிவர்தான் “ஸ்ரீ குறளை” எழுதினார். அந்த ஸ்ரீ வல்லப என்பவர்தான் தமிழ் மரபுப்படி திருவள்ளுவர் ஆனார்; ஸ்ரீ குறள்தான் திருக்குறள் ஆனது என்றனர். அடுத்து இவர்கள் திரு வள்ளுவரின் மார்பில் பூணூலும் மாட்டி விடுவார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அகராதியில் இராசேந்திரச் சோழன் தமிழ்ப் பேரரசன் அல்லன், இஸ்லாமியப் படையெடுப்பு தென்னாட்டில் நிகழாமல் தடுத்த இந்து மன்னன். ஆரியர் மன்னர்களின் படையெடுப் பையும் தடுத்து அவர்கள் ஆண்ட பகுதிக்குள் கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியவன் இராசேந்திரன். அதைச் சொல்வார் களா?

அரவணைத்து இறுக்கிக் கொன்று விடும் திருதராட்டிர ஆலிங்கனம் ஆரியத்தின் போர் முறைகளில் ஒன்று!

திருவள்ளுவர் காலத்திலும் சரி, இராசேந்திரச் சோழன் காலத்திலும் சரி “இந்து மதம்” என்ற பெயரில் ஒரு மதம் இல்லை. மதம் என்ற பொருளில் “இந்து” என்ற சொல் அக்காலத்தில் சமற்கிருதத்திலும் இல்லை, தமிழிலும் இல்லை. பிற் காலத்தில், சிந்து ஆற்றைக் கடந்து வந்த மேற்கத்தியர், இந்த மண்ட லத்தில் பல்வேறு தெய்வங்களை வணங்கிக் கொண்டும் பல்வேறு சமயக் கொள்கைகளை வைத்துக் கொண்டும் வாழ்ந்து வந்த பல்வேறு மொழி பேசும் பல்வேறு இன மக்க ளைக் குறிக்கப் பயன்படுத்திய பொதுக்குறியீட்டுச் சொல்லே “இந்து” என்பது! சிந்து ஆற்றின் பெயரை ஒட்டி உருவான பெயரே இந்து! பின்னர் - இந்து என்ற சொல் ஐரோப்பியரால், குறிப்பாக ஆங்கி லேயரால், இஸ்லாம், கிறித்து வம், பார்சி அல்லாத மக்களின் பொது மதக் குறியீடாகப் பயன்படுத்தப் பட்டது. அந்த வரலாறு ஒருபக்கம் இருக்க இப்போது தமிழகம் உள் ளிட்டு பெரும்பான்மை மக்கள் தங் களை இந்துக்கள் என்று கருது கின்றனர். நாம் இந்துத்துவாவை எதிர்க்கிறோமே தவிர மேற்படி சாதாரண மக்களின் இந்து மத உணர்ச்சியை எதிர்க்கவில்லை அவர்களுடைய வழிப் பாட்டுரி மையை எதிர்க்கவில்லை.

தருண் விஜய் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இதழான பாஞ்ச சன்யத்தின் ஆசிரியராக இருந்தவர். கடுமையான ஆர்.எஸ்.எஸ்.காரர். சமற்கிருத வெறியர். இந்தியா முழுவ தும் உள்ளோர் சமற்கிருதம் கற்க வேண்டும் என்று கட்டாயப் படுத்து பவர். சமற்கிருதத்தைக் கல்வியிலி ருந்து நீக்குவது இந்தியாவை இல் லாமல் செய்வதற்குச் சமம் என்று கட்டுரை எழுதியவர்.

வடநாட்டினர் தமிழைக் கற்பது போல் பாவனை காட்டி, அதற்குக் கைமாறாக தமிழ் நாட் டார் சமற்கிருதத்தையும் இந்தியை யும் கற்கும்படிச் செய்ய வேண்டும் என்பதே தருண் விசயின் திட்டம் என்று கருத இடமி ருக்கிறது.. தருண் விசய் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் கடந்த ஆண்டு எழுதியுள்ள கட்டுரையைப் படித் தால் அவரது ஆரிய வெறியும் சமற் கிருத வெறியும் புரியும்.

“சமற்கிருத நீக்கம் இந்திய நீக்கத்தின் தொடக்கம்” (De-Indianisation begins with elimination of Sanskrit) என்பது அக்கட்டுரை. டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் 23.08.2013 அன்று அக்கட்டுரை வந்துள்ளது.

“இந்தியாவில் சமற்கிருதம் இல்லையெனில் நம் பெயர்கள் சீன மொழியில் இருந்திருக்கும். பிறப்பு முதல் இறப்பு வரை பிள்ளைக்குப் பெயர்சூட்ட, குடும்ப அடையாளம் காட்ட, திருமணம் செய்ய, புனிதப் பயணம் போக, இந்தியனாக அறி முகமாக, இந்தியனாக சொர்க்கத் தில் நுழைய நமக்கு சமற்கிருதம் தேவை” என்கிறார் அக்கட்டுரையில் தருண்!

சமற்கிருதம் படிக்காமல் தமிழையும் திருக்குறளையும் மட் டும் படித்தால் ஒருவர் சொர்க்கத் திற்குள் நுழைய முடியாது என்று தருண் விசய் கருதுகிறாரா? கடந்த ஓராண்டில் அவரது கருத்தில் மாற்றம் வந்திருக்கிறதா என்பதை அவர்தாம் வெளிப்படுத்த வேண் டும்.

பா.ச.க.வில் “முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச்” (MRM) - “முசுலிம் தேசிய மன்றம்” என்ற அமைப்பை வைத் துள்ளார்கள். இதில் முக்தார் அப்பாஸ் நக்வி போன்ற அண்டிப் பிழைக்கும் முஸ்லிம் இரண்ட கர்கள் இருக்கிறார்கள். இராச பட்சேவுடன் டக்ளஸ் தேவானந்தா வும் கருணாவும் இல்லையா? அதைப் போல்தான் பா.ச.க.வின் முஸ்லிம் தேசிய மன்றத்தில் உள்ள முஸ்லிம் தலைவர்களும்!

முஸ்லிம்களை ஏமாற்றி இழுத் துக் கொள்ள முஸ்லிம் தேசிய மன்றம் வைத்திருப்பது போல, தமிழர்களை ஏமாற்றி இழுத்துக் கொள்ள “திருவள்ளுவர் தேசிய மன்றம்” தொடங்கத் திட்டமிடு கிறது பா.ச.க!

ஏமாளித் தமிழர்களே, ஆரியத் தின் போர்முறைகளை அறிந்து கொள்ளுங்கள். அரவணைத்து அடிமைப்படுத்தும் அவர்களின் உத்தியைப் புரிந்து கொள்ளுங்கள்!

பகைவன் நம்மைப் பாராட்டும் போது நாம் பல மடங்கு எச்சரிக் கையாக இருக்க வேண்டும். யானை யைப் பிடிப்பதற்கான குழியை மறைத்துப் பரப்பப்பட்டிருக்கும் பசுந்தழைகளைப் போன்றது பகை வனின் பாராட்டு!

தமிழகக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடக்கட்டும்; அனைத்து சாதிகளைச் சேர்ந்த “இந்துக்களும்” அர்ச்சகராகட்டும் என்று ஆர்.எஸ். எஸ்.ஸூம் பா.ச.க.வும் அறிவிக்க வில்லையே ஏன்?

உலகின் மூத்த மொழி தமிழ்; இந்தியத் துணைக் கண்டத்தில் சமற்கிருதத்திற்கு மெய்யியலும், எழுத்துருக்களும் வழங்கிய மொழி தமிழ்! ஆனால் தருண் விசய் என்ற தந்திரக்காரரும் பா.ச.க, ஆர்.எஸ். எஸ்., தலைவர்களும் என்ன சொல் கிறார்கள்? தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் சமற்கிருதம் தான் என் கிறார்கள்.

இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியாவில் 75 விழுக்காட்டினர் இந்தி பேசுவோர் என்று துணிந்து பொய்யுரைக் கிறார். சமற்கிருதத்தின் நடைமுறை வடிவம்தான் இந்தி!

தமிழ், சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததல்ல; தமிழ், தனி மொழிக் குடும்பம்! - அது சமற் கிருதம் உள்ளிட்ட வேறு எந்த மொழியின் துணையும் இன்றி இயங்கவல்லது என்று பத்தொன் பதாம் நூற்றாண்டில் மேலை நாட்டு ஆய்வாளர்களான பிரான் சிஸ் வைட் எல்லீசும், இராபர்ட் கால்டுவெல்லும் நிறுவி இருக்கி றார்கள். மறைமலை அடிகளார், மொழி ஞாயிறு தேவநேயப் பாவா ணர் போன்ற தமிழறிஞர்கள் தமிழின் தொன்மையை, அதன் தனித்தன்மையை நிறுவியிருக்கி றார்கள். ஆனால் ஆரியப் பித்த லாட்டக்கார்கள் இன்றும் சமற்கிரு தத்திலிருந்து பிறந்தது தமிழ் என் கிறார்கள்.

தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பார்ப்பனரல்லாதவர் ஆயிற்றே, அவர் ஏன் இந்த அளவு ஆரியமயத்தை தீவிரப்படுத்துகிறார் என்று சிலர் ஐயுறக்கூடும். ஆரிய வர்ணம் நான்கு! அதில் வைசிய வர்ணத்தைச் சேர்ந்தவர் நரேந்திர மோடி. பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று பிரிவினரும் நால் வருணத்தில் உயர் பிரிவினர். இம்மூன்று பிரிவினரும் இரு பிறப் பாளர் (துவிஜா). இந்த மூன்று பிரி வினரும் பூணூல் அணிந்து கொள் ளும் உரிமை பெற்றவர்கள்.

தமிழர்களிடையே ஆரிய நால் வருணம் கிடையாது. சாதிகள் இருக்கின்றன, பார்ப்பனர் தவிர்த்த அனைத்துத் தமிழகச் சாதிகளையும் சூத்திர சாதிகள் என்று கூறி பிற் காலத்தில் பார்ப்பனர்கள் இழிவு படுத்தினர். தமிழர்களில் உள்ள வணிகர்கள் (வைசியர்) சூத்திரர் களே! நரேந்திர மோடியோ, ஆரிய வைசியரே தவிர, சூத்திரர் அல்லர். எனவே பாப்பனர்களோடு இணக் கம் காணும் ஆரிய உறவு மோடிக்கு இருக்கிறது.

அதேவேளை ஆரியத்தின் துணையோடு, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதரவோடு இந்தியாவின் உயர் அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்ற தனிநபர் ஆசையும் நரேந்திர மோடிக்கு இருந்தது. அப்பதவியைப் பிடித்தும் விட்டார்.

பா.ச.க. தலைவர்கள் உற்சவ மூர்த்திகள்; ஆர்.எஸ்.எஸ். தலைவர் கள் மூல விக்கிரகங்கள்!

அரசியல் சதுரங்கம், பதவிப் போட்டி, மக்களுக்கு சர்க்கஸ் காட்டுதல் ஆகிய வேலைகளில் பா.ச.க. தலைவர்கள் ஈடுபடுவார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைமை கால இலக்கு வரையறுத்து, இந்தியாவை ஆரியப் பார்ப்பனிய - இந்துத்துவா நாடாக மாற்றுவதில் தீவிரக் கவனம் செலுத்தும். அரசியல் அதிகாரத்தின் வழியாகத்தான்- ஆர்.எஸ்.எஸ். தனது திட்டங்களை வேகமாக நிறைவேற்ற முடியும். பா.ச.க. ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. பா.ச.க. வேறு, ஆர்.எஸ்.எஸ். வேறு அன்று. வடிவங்கள் வெவ்வேறு! வடிவத்திற் கேற்ற செயல்பாடுகள்!

ஆண்டுக்கு ஒருமுறை ஆர்.எஸ். எஸ். தலைவர் விசயதசமி நாளன்று தம் தொண்டர்களுக்கு உரையாற்று வார். அதில் ஓராண்டுக்கான வேலைத் திட்டங்கள் கோடிட்டுக் காட்டப்படும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வரையறுப் புகளும் அவ்வுரையில் இடம் பெறும். இவ்வாண்டு கடந்த 04.10.2014 அன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் ஒரு மணி நேர விசயதசமி உரையை இந்திய அரசின் தூர்தர்சன் தொலைக்காட்சி இந்தியா முழுவ தும் நேரடி ஒளிபரப்புச் செய்தது. இந்திய அரசின் தொலைக்காட்சி, வானொலி நிறுவனங்களுக்குத் தலைமைதாங்கும் ‘பிரச்சார் பாரதி’யின் தலைவராக சூரியப் பிரகாஷ் என்ற ஆர்.எஸ்.எஸ். ஆதரவுப் பார்ப்பனரை மோடி அரசு அமர்த்தியது.

ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்ட நூற்றாண்டு விழா 2025இல் வரு கிறது. அதற்குள் இந்தியாவை- ஆரியப் பார்ப்பனிய - இந்துத்துவா நாடாக முழுமையாக மாற்றிவிட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. ஆகியவற்றின் இலக்கு. இத் திட்டத்தை நிறைவேற்ற நடுவண் அரசின் இரு துறைகளை - இந்துத் துவா துறைகளாக மாற்ற வேண் டும். ஒன்று கல்வித்துறை; இன் னொன்று பாதுகாப்புத் துறை. அதே போல், இந்தியாவின் இரு மண்ட லங்களில் இந்துத்துவாவை மக்கள் ஏற்கும்படிச் செய்ய வேண்டும். ஒன்று தமிழ்நாடு, இன்னொன்று வடகிழக்கு மாநிலங்கள்.

இந்தியத் துணைக் கண்டத்தில் ஆரியத்திற்கும் சமற்கிருதத்திற்கும் அறைகூவல் (சவால்) விட்டுத் தனித்து இயங்குவது தமிழினமும் தமிழ் மொழியும் மட்டுமே! அடுத்து வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றில் மங்கோலிய மரபின மக்கள் வாழ் கிறார்கள், அவர்கள் ஆரியத் திற்கு அப்பாற்படவர்கள்.

கைபர், போலன் கணவாய்கள் வழியாக ஆரியர்கள் சிந்துச் சம வெளிக்குள் நுழைந்த போதிலிருந்து தமிழர் - ஆரியர் முரண்பாடும் மோதலும் தொடங்கி இன்றுவரை நீடிக்கிறது. அப்போது தமிழர் களிடம் வளர்ச்சியடைந்த தமிழ் மொழி இருந்தது; நீர்த்தேக்கங் களும் - வேளாண் நிலங்களும் இருந் தன. சுட்ட செங்கல்லால் கட்டப் பட்ட மாளிகைகள் இருந்தன; ஆரியர்களிடம் ஆடுமாடுகள் இருந் தன; கூடாரங்கள் இருந்தன. மனித குல வளர்ச்சியில் மேய்ச்சல் சமூக மாக இருப்பது இழிவன்று. அது ஒரு கட்டம். ஆனால், சமூக வளர்ச்சி யில் பின் தங்கியிருந்த ஆரியரிடம், ஆதிக்கக் குணமும், சூழ்ச்சித் திட் டங்களும் வளர்ந்திருந்தன. அது தான் கோளாறு!

சமற்கிருதத்தின் துணையின்றித் தமிழைத் தவிர இந்தியத் துணைக் கண்டத்தில் வளர்ச்சியடைந்த வேறெந்த மொழியும் இயங்க முடி யாது. சமற்கிருத மொழிக் குடும்பத் திற்குத் தொடர்பில்லாத, சமற்கிரு தத்தை விடவும் மிகத் தொன்மை வாய்ந்த மொழி தமிழ். தமிழ் மொழிக் குடும்பம் தனித்தன்மை யானது. தமிழர் அறமும் ஆன் மிகமும் மனித சமத்துவத்தை நடுவமாகக் கொண்டவை. ஆரியர் தர்மமும் - ஆன்மிகமும் - பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை மேல் கீழாகப் பிரிப்பவை.

“நானே நான்கு வர்ணங்களைப் படைத்தேன்” என்று பகவத் கீதையில் கண்ணபிரான் கூறுகிறார். பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வுள்ள வர்ணசாதி முறையைக் கடவுளே படைத்தாகச் சொல்லப் படுகிறது.

தமிழர் அறம் “பிறப்பொக்கும் எல்லா உயிரும்” என்பது, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது.

ஆரிய எதிர்ப்பு அன்று தொட்டு இன்றுவரை தமிழர்க ளிடம் உள்ளது. நமது இலக்கி யங்கள் “ஆரியப் படை கடந்த தமிழ் மன்னன்” என்று சிறப்புப் பட்டம் கொடுக்கும், “ஆரியப் பேடி” என்று தாக்கும். இவ்வாறான இன முரண்பாடு இன்றும் தொடர்கிறது. திருவள்ளு வருக்கும் மனுவுக்கும் பிறப்புக் கோட்பாட்டில் முரண் பாடு, வள்ளலாருக்கும் காஞ்சி சங்கர மடத்துக்கும் ஆன்மிகத்தில் முரண்பாடு. சமற்கிருத நீக்க இயக்கமாக மறைமலையடிகளார் தனித் தமிழ் இயக்கம் தொடங்கி னார். தமிழக அளவில் தோன்றிய திராவிட இயக்கம், தமிழ்நாடு விடுதலை இயக்கங்கள் முதலிய அனைத்தும் தமிழர் - ஆரியர் முரண்பாடுகளின் தொடர்ச்சிகளே!

இன்றும் தமிழகத்தில் அனைத் திந்தியக் கட்சி, மாநில ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ச்சிய டைய முடியாமல் இருப்பது ஆரிய எதிர்ப்பின் சாரம் மட்டுமல்ல, தமிழினத் தனித் தன்மையின் எதிர் வினையும் ஆகும்.

எனவே, தமிழ்நாட்டைத் தனது வளையத்திற்குள் மடக்கிட ஆர். எஸ்.எஸ்.ஸூம், பா.ச.க.வும் படாத பாடுபடுகின்றன. அதற்காக சிறப்பு வேலைத் திட்டங்கள் தீட்டிச் செயல்படுகின்றன. இந்த உண்மை யைத் தமிழர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி, சாதி மத வேறு பாடின்றிப் புரிந்து கொள்ள வேண் டும்.

தமிழர்களில் பின்தங்கிய வகுப் பினரையும், ஒடுக்கப்பட்ட மக் களையும் ஈர்த்திட சிறப்புத் திட்டங்கள் வகுத்துள்ளது ஆர். எஸ். எஸ். வரும் சித்திரை 1ஆம் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு நாளாக விழா வெடுக்கத் திட்ட மிட்டுள்ளது. தை 1 தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழின உணர் வும் தமிழ் மொழி உணர்வும் கொண்ட அனைவரும் பெரும் பாலும் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆனால் ஆரிய மயப்படுத்தப்பட்ட சமற்கிருதப் பெயர்களையும் சமற் கிருதப் புராணக் கதைகளையும் கொண்ட சித்திரை 1-இல் தொடங் கும் ஆண்டைத் தமிழர் ஆண்டாக மீண்டும் திணிக்கிறது ஆர்.எஸ். எஸ்.. அதற்கேற்றாற் போல் செயல லிதா அரசும் சித்திரை ஆண்டை வலியுறுத்துகிறது.

தமிழர்களிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் பா.ச.க.-வையும் வளர்ப்பதற்கான வேலைத் திட் டத்தை “தர்ம ரட்சன சமிதி” என்ற உள் அமைப்பிடம் ஒப்படைத் துள்ளன. அது சித்திரை ஆண்டுப் பிறப்பின் சிறப்புகளை விளக்கி இலட்சக் கணக்கில் சிறு வெளியீடு களைக் கொண்டுவரப் போகிறது. தலித் குடியிருப்புகளில் சித்திரை 1ஆம் நாள் புத்தாண்டுப் பரிசுப் பைகள் கொடுக்கப் போகிறது. அதில் ஒரு குறு நூல், ஒரு சாமி படம், யாகத்தில் மந்திரித்த ஒரு ரூபாய் நாணயம் முதலியவை இருக்கும் என்கிறார் ஆர்.எஸ். எஸ்.ஸின் தமிழகப் பொறுப்பாளர் சடகோபன் (ஜிலீமீ பிவீஸீபீu - 30.11.2014). கிறித்துவத்திற்கு மாறிப்போன தலித்துகளை மீட்பது இந்த சித்தி ரைப் புத்தாண்டுக் கொண்டாட் டத்தின் முகாமை நோக்கங்களில் ஒன்றாகும் என்கிறார் சடகோபன்.

பா.ச.க.வும் ஆர்.எஸ்.எஸ்.ஸூம் திருவள்ளுவர் நாள் கொண்டாடு வதும் - பாரதியார்க்குக் காசியில் நினைவகம் உருவாக்குவதும், தமி ழைப் போற்றுவதும் என்ன நோக் கத்திற்காக என்று இப்போது நன்கு புரியும்.

தமிழர்கள் பா.ச.க.வையும் ஆர்.எஸ்.எஸ்.ஸையும் பாராட்டி மீண்டும் சூத்திரர்களாகவும் பஞ்ச மர்களாகவும் ஆகக் கூடாது.

ஆரியத்தின் தொண்டையில் முள்ளாகக் குத்திக் கொண்டிருப் பவை மூன்று இனங்கள்: 1. தமிழர்கள், 2. காசுமீரிகள், 3. மங்கோலிய மரபினத்தைச் சேர்ந்த வடகிழக்கு மாநிலத் தேசிய இனங்கள்.

இவற்றுள் மொழி, - மெய்யியல்,  வரலாறு-, அறம், ஆன்மிகம் எனப் பல துறைகளில் ஆரியத்திற்கு அறை கூவல் விடுவது தமிழினம். ஆனால் இறை வழிபாடு ஒன்றுபோல் தெரி யும். நுட்பமாகப் பார்த்தால் ஆரியர் இறைவழிபாட்டிற்கும் தமிழர் இறைவழிபாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு புரியும். ஆயு தந்தாங்கிய விடுதலைப் போராட் டம் எதுவும் இங்கில்லை. ஆனாலும் வட இந்தியத் தலைமைக் கட்சிகள் இங்கு வளர முடியவில்லை. ஆன் மிகத்தின் வழியாகவும் வரலாற்றைத் திரிப்பதின் வழியாகவும் உளவியல் போர் நடத்தி, கீழ்ப்படிதலுள்ள குடிமக்களாகத் தமிழர்களை மாற்ற வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. திட்டம். அதேவேளை அடக்கு முறைகளை ஏவி விடுவதும் அவற்றின் உத்தி.

காசுமீரைப் பொறுத்தவரை இராணுவத் தீர்வுதான் ஆரியத்தின் மேசைமேல் உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதம் மற்றும் அரசியல் இரண் டையும் பயன்படுத்துகிறது.

இந்த இருவகை நோக்கத்தில் தான் பா.ச.க. அரசு கல்வித் துறை யையும். பாதுகாப்புத் துறையையும் பார்ப்பன மயமாக்கியிருக்கிறது.

எனவே, ஆரியம் நம்மை அரவணைத்து ஒழிக்க வருகிறது என்பதைத் தமிழர்கள் உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள பார்ப் பனர்கள் தங்களைத் தமிழர்களாக உணர்ந்து வடநாட்டு ஆரிய இந்துத் துவாவை எதிர்க்க வேண்டும். சுப்பிரமணிய சாமி, எச். இராசா போன்ற ஆரிய இந்துத்துவா வெறி யர்களைத் தனிமைப்படுத்த வேண் டும்.

தமிழர்கள் தங்களின் பெரு மிதங்களுக்குத் தில்லியின் ஏற்பி சைவு வேண்டும் என்று கருதக் கூடாது. திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கோரிக்கை வைப்பது தமிழின உரிமைக்கும் பெருமிதத்திற்கும் முரணானது. திருக்குறள் தமிழ்த் தேசிய நூல் என்ற உண்மையை உணர வேண் டும்.

இந்துத்துவா என்பது, மதவா தம் மட்டுமன்று. ஆரிய இன வாதம், பார்ப்பனிய வர்ணாசிரமவாதம், இந்து மதத் தீவிரவாதம் மூன்றும் சேர்ந்ததுதான் இந்துத்துவா! இந்த இந்துத்துவாவின் தத்துவப் பாசறை ஆர்.எஸ்.எஸ்; படை வரிசை பா.ச.க.!

பா.ச.க.வும் ஆர்.எஸ்.எஸ்.ஸூம் தமிழ்நாட்டில் வளர்ந்தால் தமிழ் மொழி அழியும்; தமிழின அடை யாளம் அழியும்; தமிழர்களின் அறம் அழியும்; சமூக சமத்துவம் அழியும்.

ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. வளரா மல் தடுத்துத் தமிழும் தமிழினமும் செழிக்கச் செய்வோம். மனித சமத்துவம் பேணும் தமிழர் அறம் வளர்ப்போம்.

Pin It