“அடிமைப்பட்ட தமிழா, ஆண்டைக்கு அடங்கிப்போடா! ஆர்ப்பாட்டம் உனக்கொரு கேடா? சிங்களன் என் பங்காளி; அவன் சேனைக்குப் பயிற்சிகள் தருவெதன் உரிமை; கூடாது என்று சொல்ல நீ இங்கே கொற்றமா நடத்துகிறாய்? கொத்தடிமைப் பயலே!” என்கிறனர் இந்திய ஆட்சியாளர்கள்.
இந்திய ஏகாதிபத்தியத்தின் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராசு, பாசாங்கு எதுவுமின்றி, பத்துக் கோடித் தமிழர்களின் முகங்களில் காறி உமிழ்வது போல் சொற்களால் உமிழ்ந்து விட்டார். “இலங்கைப் படையினர்க்குத் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பயிற்சிகள் தருவது தொடரும். அது எமது நட்பு நாடு.” வேறு வேலையாகச் சென்றபோது, செய்தியாளர்கள் வினவியதற்கு கூறிய விடையன்று இது. தில்லிப்பட்டணத்தில் 27.8.2012 அன்று செய்தியாளர்களைக் கூட்டி சொன்ன செய்தி இது.
தமிழினத் தலைவரென்று ஒரு தன்னலத் தலைவரைத் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடும் தமிழர்களே, புரட்சித் தலைவி என்று ஒரு போலி அம்மாவுக்குப் போற்றிபாடும் தமிழர்களே, நாற்காலி நாயகர்களைப் போர்காலத் தளபதிகளாகப் புனைந்துரைக்கும் தமிழர்களே,
உங்கள் தலைவர்களால் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முடியவில்லை. மீனவத் தமிழர்களைக் காப்பாற்ற முடியவில்லை. அந்தந்தத் தமிழர்களைக் கொன்ற சிங்களவர்களுக்குத் தமிழ் மண்ணில் மீண்டும் கொலைப் பயிற்சி! இதைக் கூட பெரும் மக்கள் திரளை வைத்துள்ள உங்கள் தலைவர்களால் தடுக்க முடியவில்லை, ஏன்?
பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் உங்கள் தலைவர்களின் நாடகத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? அல்லது நீங்களே நாடகமாடுகிறீர்களா?
இந்த வினாக்களுக்கு, வேறு யாருக்கும் நீங்கள் விடை சொல்ல வேண்டாம். உங்கள் மனச் சான்றுக்கு விடை சொல்லுங்கள்.
இந்திய ஆளும் வர்க்கத்திற்குச் சிங்களவர்கள் நண்பர்கள் என்றால், தமிழர்கள் யார்? தமிழர்கள் பகைவர்கள் என்பதைத் தானே பல்லம் ராசுவின் அறிவிப்பு சொல்லாமல் சொல்கிறது. ஒரு சில மாதங்களில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த சிங்களவர்கள் இந்தியாவின் நண்பர்கள். சற்றொப்ப அறுநூறு தமிழ்நாட்டு மீனவத் தமிழர்களைக் கொன்று தீர்த்த- இன்றும் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வருகின்ற சிங்களவர்கள் இந்தியாவின் நண்பர்கள்.
சிங்களர்கள் மட்டுமா, ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தார்கள்? இந்திய ஏகாதிபத்தியத்தின் பங்களிப்போடுதானே இந்த இனப்படுகொலை நடந்தது. அதே போல் இந்தியாவின் தூண்டுதலோடும், துணையோடும் தானே மீனவத் தமிழர்களை சுண்டைக்காய் சிங்களம் கொன்று வருகிறது.
ஏ, விழித்துக் கொள்ளாத தமிழினமே, வீழ்ந்து கிடக்கும் தமிழினமே, இன்னுமா உனக்கு உண்மை புரியவில்லை. அடிமை கொள்ளப்பட்ட பகைவன் என்று இந்தியா உன்னைக் கருதுகிறது. அது, சிங்களனைப் பங்காளியாய்க் கருதுகிறது. “நண்பன்” என்ற பன்னாட்டு அரசியல் சொல்லாடலில் “பங்காளி” என்ற அந்தரங்க உறவை மறைத்துக் கொள்கிறது.
ஏ, ஏமாளித் தமிழினமே,
கல்வி பல கற்றேன் என்கிறாய்; கலைகள் பல ஆய்ந்தேன் என்கிறாய்; கணிப்பொறியில் வல்லோம் என்கிறாய்; விண்வெளி ஆய்வில் எங்கள் வெற்றியைப் பார் என்கிறாய்; பன்னாட்டு வரலாறும் அரசியலும் பால பாடம் என்கிறாய்; இந்தியாவின் சூழ்ச்சி மட்டும் உனக்குப் புரியாதா? அல்லது புரியாதது போல் நடிக்கிறாயா?
ஏ, ஏமாளித் தமிழினமே,
இன்னும் நீ எதை இழக்க வேண்டும்? காவிரியை இழந்தாய்; கச்சத் தீவை இழந்தாய் முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி , சிறுவாணி எல்லாம் பறிபோகும் அவலம்!
உன் இனத்தைக் கொன்றவன், மீண்டும் உன் இனத்தைக் கொல்ல உன் மண்ணில் அவனுக்குப் போர் பயிற்சி! உன் மானம் பறி போகவில்லையா? உன் உயிருக்கும் அவனால் ஆபத்து வர வாய்ப்புண்டு என்பதை நீ உணரவில்லையா?
இந்தியா உன் தாய் நாடல்ல, அது உன் பகைநாடு என்ற உண்மை இப்பொழுது கூட உனக்கு உறைக்க வில்லையா?
இமயத்தில் முக்கொடியும் பொறித்த சங்கத் தமிழனின் தலைமுறை தானே நீ! ஈழத்தில் புலிக் கொடியுடன் ஆண்ட பிரபாகரன் பிறந்த இனம் தானே நீ! தொல்காப்பியனும் திருவள்ளுவனும் தோன்றிய இனம் தானே நீ!
உன்னையே நீ எண்ணிப்பார்! உன் முன்னைப் பெருமைகளை எண்ணிப் பார்! உன் இன்றைய இழிவுகளை எண்ணிப் பார்! தொடர்ந்து வரும் இழப்புகளை எண்ணிப்பார்!
இதோ பாவலரேறு பெருஞ்சித்திரனார் உனக்குக் கட்டளை இட்டுப் பாடியப் பாடல்:
விடுதலை வேண்டும் அது முதல்வேலை
வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை!
எங்களுக்கு புரியவில்லை
நான் சொல்வது நம் மக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட அவர்கள் தம் தேவைகளை உரிமைகளை பெற்றுக்கொள்ள கற்றுக்கொடுத்து விட்டால்
நம் மக்களுக்கு போராட்டம் என்பது அவசியமில்லாது போகுமே!
என்ன புரியவில்லையா?
மீன் பிடித்து தரவேண்டாம் மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள ் என்கிறேன்
இன்னும் புரியவில்லையா?
ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு உள்ள கடைமையும் உரிமையும் என்ன என்பதையும் சட்டபூர்வமாக அதை அடைவதற்கு வழி செல்லித்தரலாமே!
எப்படி என்று கேட்கிறீர்களா?
ஒரு இந்திய குடிமகன் தனக்கு தேவையான குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட சான்றுகள், பட்டா பெயர் மாற்றம், வீட்டுக்கு மின் இணைப்பு, கட்டிட அனுமதி, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் இலவசக் கல்வி உள்ளிட்ட பயன்களை இலஞ்சம் கொடுக்காமல் அடைய வழிகாட்டுவது.
நம் ஊருக்கு தேவையான தெருவிளக்கு, சாலைவசதி,மருத்த ுவ வசதி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் எப்படி பெறுவது, தங்கள் பகுதி குறைகளை யாரிடம் எப்படி தெரிவிப்பது என்ற விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது.
நம் மக்களுக்காக செயலடும் அரசு அலுவலகங்கள் நடைமுறை எந்த வேலைக்கு யாரை அணுக வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
சீசன் தேவைகள் குறிப்பாக கல்விக்கடன் போன்று அந்த அந்த நேரங்களின் தேவைக்கு பலன் பெறுவது எப்படி என்று சொல்லித்தருவது.
இன்றைய இந்தியத் தேவை இது தான் என்று இந்தியன் குரல் அமைப்பு எண்ணுகிறது இதைச் சரியாக மக்களுக்கு சொல்லித்தரவில்ல ை என்றால் நம் மக்கள் போராடவேண்டியதும ், இலவசம் கேட்டு கையேந்தும் நிலையும், அதுவும் மறுக்கப்படும் போது அதனைத் தொடர்ந்து நாட்டுப்பற்று அற்றுப்போகும் அந்நிய சக்திகளிடம் விலைபோவார்கள் கொள்ளைகள் பெருகும் நம் சொத்துகள் யாவும் கொள்ளைபோகும் நம் பிள்ளைகள் தம் உரிமையைப் பெற ஒரு வேலை உணவிற்காக போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள ், போராடியும் தோற்ப்பார்கள் தோல்வி அவர்களை விரக்கதி நிலைக்கு இட்டுச் செல்லும் அதனால் அவர்கள் உணவுக்காக கொள்ளை அடிக்கவும் துணிந்துவிடுவர் . சமூகம் அவனை மாற்றிவிடும் ஆகவே நாம் இன்றே விழித்துக் கொள்வோம்
நாம் செய்யத்தவறினால் நம்மை நம் சந்ததிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்
உடனடியாக செயல்படுவோம்.
இத தாங்க நம்ம இந்தியன் குரல் அமைப்பு செய்துவருகிறது மேலும் விபரம் அறிய ந்ந்ந் .விட்ருச்டு ,ப்லொக்ச்பொட் .சொம் எனும் வலைப் பூவில் தொடருங்கள் --
ந்ந்ந்.விட்ருச்டு.ப்லொக்ச்பொட்.சொம்
வோஈசே ஓஃப் ஈண்டீஆண்
256 ட்வ்க் ஃட்ச் ட்வ்க் ணகர்,
ஸெம்பியம்,
பெரம்புர்,
சென்னை 600019
Dear Anti –Corruptionists!
We hope this is the time for us to rise up and examine as to whethere the the Apex Court’s judgement IS A BLESSING OR A DANGER or both?
Please attend and record your opinion.
DISCUSSION SESSION DURING 14-10-2012 10 am
at Chandrika chambers , opp PILOT Theater Royapettah Chennai -14
Not all Indians but only the front line RTI Activists KNOWS!
Not all the medias but only the Civil Society KNOWS
THE SHOCKING JUDGMENT OF SUPREME COURT On
NEW NORMS by SUPREME COURT FOR APPOINMENT OF RTI COMMISSIONERS !
The present Central and State Chief Information commissioners and other commissioners will LOOSE their posts ! The Supreme court has given 6 MONTHS time to the Govt., of India to amend the RTI rules accordingly ! The recently appointed FIVE Tamil Nadu Information Commissioners LOOSE their posts? POINTS FOR DISCUSSION
One Side: The said judgement would pay the way for …..
Ø The hare-brained RTI commissioners will be sent out !
Ø The results on second appeal would here after be judicious !
Ø The erred and careless officials will definitely get punishment !
Ø The shelved long pending second appeals would come to light !
Another side The said judgement would pay the way for …..
v All RTI Commissions would come under the judicary folds ?
v Qalified and honest Social Activist ie. member of Civil Society can not be appointed as Information Commissioners !
v Since the Chief commissioners would be the supreme court and high court judges, the lawyers to be appointed as Information Commissioners can not act autonomously !
v The plea of poor and pooest will not be given proper attention by the judges ?
v Or lawyers would be required for enquiries?
v All these are the tactics to keep the RTI Act., in dark !
v Is this a tactics to keep away the Civil Society which fought for this noble Act?
v Is the Supreme Court feel that there is no fit persons in the Civil Society to hold the post of information commissioners?
v Is this an advance caution to the Social Activists / Civil Society who are fighting for LOK PAL?
OUR SUGGESTION SHOULD BE on
What would /should be nature of the amendment to be suggested to the Govt. ?
Let us discuss in deep and make suggestions to the poper forum.
Save RTI and Democracy ! Do come and record your valuable opinion !!
Please confirm your presence before 01-10-2012 over phone 9940493159,9444 305581
- VOICE OF INDIAN
RSS feed for comments to this post