பொறுமையோடு கரை.
சீண்டியபடியே
அலை.

***

ஒரே கம்பம்
மாறிப் பறக்கின்றன
கொடிகள்.

***

அமர்ந்து ரசித்த திடல்
எழுந்து நிற்கிறது
கட்டிடமாய்.

***

என்னை விட
அழகாய் தெரியும்
எனது நிழல்.

***

கொடி படரும் ஏணிக்கு
தோள் கொடுக்கும்
சுவர்

More articles by தனலெட்சுமி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.