படுக்கப் பாயில்லே
பசியெரிச்ச அடங்கலே
பொரள இடமில்லே
பொகைக்க சுருட்டு இல்லே
நடக்கமாட்டா கால்லே
நரம்புளைச்ச தாளலே
திட்டப் பொட்டையில்லே
திரும்பிப் பார்க்க நாதியில்லே
குழறும் வாயாலே
அம்மான்னு முனக ஏலலே

கூரைக் குடிசையிலே
குனிஞ்சு நொழைஞ்ச
சின்னவயசு சேக்காளி
முகம்மது ராவுத்தன்
“கதிர்வேலு பண்ணை இருக்காகளா
கடக்குட்டிக் கதிசாவுக்கு நிஹ்ஹா''ன்னு
கடுதாசி நீட்டினான்.

“மேலருந்து எப்படா மம்மூது
கடுதாசு வரும்''னேன்
புறங்கையால கண்ணத் தொடச்சபடி
“அல்லாவே''ன்னுட்டு அவன் போனான்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.