eagle_340அமைதியின் பேருருவத்தை உருவாக்கி
முடிக்கும் அத்தருணம் உன்னதமானது

சுரண்டல்களற்ற பொழுதொன்று வரும்
வானம் எல்லாருக்குமானது

போரின்றி கைகள் தழுவும் அந்த நொடி
மனிதம் முளைக்கவுமானது

அடிமைகள் என்று யாருமில்லா
சமூகம் அப்பட்டமானது

யாரும் கேட்க முடியாத அதிகாரத்தின்
குரல் வீணானது

புறக்கணிப்பின் வலியறியா மக்கள்
சூழ்ந்த வாழ்வு சகோதரத்துவமானது

மேடுகள் சமனுறும் செதுக்கல்கள்
சமத்துவமானது

பிணைகளற்று வீசி நடக்கும்
கைகளும் கால்களும் சுதந்திரமானது

ஆயினும் இவற்றை அடைய
எளியோர் வெல்லும் போரே தேவையானது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.