செயல்படு செல்வமே
காலையில் விழிக்கப் பழகிடு
கவனமாய்ப் படிக்க முயன்றிடு
விளையாட்டு பற்பல பயின்றிடு
விடுமுறை நாளைக் களித்திடு
அடிமை வாழ்வை மறந்திடு
அன்பாய் என்றும் நடந்திடு
பிடிவாதத்தை ஒழித்திடு
பிழையிலா எழுத்தைக் கற்றிடு
நல்லதைச் செய்திட நாடிடு
நல்லோர் சொல்வதைக் கேட்டிடு
செல்வம் பெருக்க உழைத்திடு
செருக்கதை நீயும் விட்டிடு
நூல்கள் சொன்னதை அறிந்திடு
மாண்பாய் நற்பேர் எடுத்திடு
நலிந்தோருக்கு உதவிடு
இன்பஞ் சிறக்க வாழ்ந்திடு
-செயவாணன்
நூல் :’இனிய மழலை முத்துக்கள்'
மழை
கொட்டும் மழை கொட்டுதே
குளத்தில் தவளை கத்துதே
மின்னல் மின்னி வெட்டுதே
மேகம் இடித்துக் கொட்டுதே
தும்பில் தண்ணீர் வருகுதே
துள்ளி மீன்கள் துடிக்குதே
மண்ணும் குளிர்ந்து மணக்குதே
மரஞ்செடிகள் செழிக்குதே
எங்கும் வெள்ளம் ஓடுதே
எங்கள் வீடும் ஒழுகுதே
ஏரி குளங்கள் நிறையுதே
எல்லாப் பஞ்சமும் நீங்குதே
-அருப்புக்கோட்டை அழகிரி
நூல் :’சிந்திக்க வைக்கும் சிறுவர் பாடல்கள்'
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இந்திய அரசமைப்புச் சட்டம் சமூக நீதிக்கு எதிரானதா?
- தடைகளைத் தகர்த்து தஞ்சையில் வெடித்தது உழவர் போர்
- பர்மாவில் பௌத்த மதச் செல்வாக்கு
- மக்களாட்சி முறையில் மொழிவழித் தேசிய இனங்களின் விடுதலை
- சிங்காரவேலரின் சிறு தவறு!
- மின்மினிகளின் மின்னல் விளையாட்டு
- விரதப் புரட்டு
- திராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா?
- கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா?
- பகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா
தலித் முரசு - ஜூன் 2008
- விவரங்கள்
- அழகிரி
- பிரிவு: தலித் முரசு - ஜூன் 2008
குழந்தைப் பாடல்கள்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.