கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
தலித் முரசு - மார்ச் 2008
- விவரங்கள்
- யாழன் ஆதி
- பிரிவு: தலித் முரசு - மார்ச் 2008
யாழன் ஆதி கவிதை
இதனால் சகலமானவர்களுக்கும்...
நீதியின் பாதை உங்களுக்கானதாகவே இல்லை
அநீதிகளின் குரலில்
நீங்கள் கத்துகிறீர்கள்
மலத்தைக் கழிப்பதைப் போல
ஜாதியை கழிக்காமல்
அதை மீண்டும் மீண்டும் உண்ணுகிறீர்கள்
உங்கள் வாயின் வார்த்தைகளில் நாறும்
மலத்தை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள்
சகல ஜாதிகளையும் சீடராக்குங்கள்
மறந்து போனது உங்களுக்கு
உங்கள் ஜாதியை மட்டும்
உள்ளே வைத்திருக்கிறீர்கள்
தெரிந்தே செய்யும் உங்கள் பாவத்தை
எங்கே கொட்டுவீர்கள்
ஜாதி மகிமையின் ரூபத்தை
சரியாகவே மிகச்சரியாகவே காட்டுகிறீர்கள்
நீங்கள்
வெள்ளை அங்கி அணிந்தாலென்ன
மஞ்சள் கட்டினால்தான் என்ன!