முன்பொரு காலத்தில்
எனக்கும் உனக்குமாக
வழக்கொன்றிருந்தது.
அறிவிக்கப்படாத சட்டமாயிருந்தது
பின்னாளில் அது.
என் குரல்வளை
நெருக்கிப் பின்னியபோதும்
கைகளைக் கயிறுகளில்
கட்டி பிணைத்தபோதும்
கால்கள் மீறிப் போகாமல்
பின்னுக்குத் தள்ளியபோதும்
உடலையே வளைத்து
திமிற முடியாமல் செய்தபோதும்
வேறு எவரின் குரல்களும்
எனக்காக எழுந்ததாய் சொல்லுதற்கில்லை.
எல்லாம்
எல்லாருக்கும் என ஒப்புகை செய்தபின்
தொடர்ச்சியே என்றாலும்
மறுதலித்தே வந்தாய் தொடர்ந்து
என் மண்ணில் உழைப்பெடுத்து
உண்டு, நீர் அருந்தி
வாழ்ந்த காலத்திற்கும்
வாழப்போகும் நாள்களுக்குமான
இடைவெளிகள் ஏதுமற்று
கடக்கிறது காலம் கவனமுடன்
எல்லாம் சமமென்பதாய் நினைத்து
நீதித்தராசில்
குத்திட்டு விழிக்கிறது கண்கள் அவ்வப்போது
என்றாலும்
வாழ்தலின் அர்த்தமென்பது
முரண்கள் நிறைந்தபடி
இப்படியாக இருக்க
தடைகள் பல கடந்தபடி
விசாரணைக்குள்ளாகியிருக்கிறது சமூகம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)
தலித் முரசு - பிப்ரவரி 2007
- விவரங்கள்
- விழி.பா.இதயவேந்தன்
- பிரிவு: தலித் முரசு - பிப்ரவரி 2007