தலைவன் கூற்று

{வேந்தனிட்ட வேலையை மேற்கொண்டு செல்லும் தலைவன் தன் தேர்ப்பாகனை நோக்கி 'இன்று விரைந்து சென்று அரசன்இட்ட வேலையை முடித்து நாளைக்கே தலைவியின் இல்லத்தை அடைய வேண்டும்; தேரை விரைவாக நடத்து என்று கூறுவது.}

நாமின்று சென்று நாளையே வருவோம்;
வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்;
இளம்பிறை போல்அதன் விளக்கொளி உருளை
விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக்
வளையல் நிறைந்த கையுடை
காற்றைப் போலப் கடிது மீள்வோம்;
இளையளை மாண்புற யான்மணந் துவக்கவே.

{குறுந்தொகை 189-ஆம் பாடல், மதுரை ஈழத்துப் பூதன்தேவன் அருளியது}


தலைவி கூற்று

{தலைவனை நினைத்துத் தான் துயிலாது இருத்தலைத் தோழிக்குத் தலைவி கூறியது.}

ஆர்ப்புறும் இடிசேர் கார்ப்பரு வத்துக்
கொல்லையின் மணந்த முல்லைக் கொடியின்
சிரிப்ª¢பன அரும்பு விரிக்கும் நாடனை
எண்ணித் துயில்நீங் கியஎன்
கண்கள் இரண்டையும் காண்பாய் தோழியே!

(குறுந்தொகை 186-ஆம் பாடல். ஒக்கூர் மாசாத்தி அருளியது,)


தோழி கூற்று

{தலைவன், தலைவியை மணம் புரியாமல் நெடுநாள் பழகி, ஒருநாள் வேலிப்புறத்திலே வந்து நிற்கிறான்! அவன் காதில் விழும்படி, தலைவியை நோக்கிக் கூறுகிறாள் தோழி; "தலைவன் நட்பினால் உன் தோள் வாடினாலும் உன் அன்பை அது குறைத்து விடவில்லை" என்று}

மிளகு நீள்கொடி வளர்மலைப் பாங்கில்
இரவில் முழுங்கிக் கருமுகில் பொழிய,
ஆண்குரங்கு தாவிய சேண்கிளைப் பலாப்பழம்

அருவியால் ஊர்த்துறை வரும்எழிற் குன்ற
நாடனது நட்புநின் தோளை
வாடச் செய்யினும் அன்பைமாய்க்காதே!

Pin It