கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கொல்லப்பட்ட ஆப்ரிக்க காண்டாமிருகங்களின் மிருகங்களின் எண்ணிக்கை 800 க்கும் அதிகம். தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் வேட்டையாடப்படும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகம்.


தென் ஆப்ரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 333 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை வேட்டையால் உயிரைவிட்டவை சுமார் 70 .

இவற்றின் கொம்புகள் மருந்தாக பயன்படும் என்ற மூட நம்பிக்கை காரணமாக தென் கிழக்கு ஆசிய நாடுகள் இவற்றின் விற்பனை சந்தையாக உள்ளது. குறிப்பாக வியட்நாமிற்கு இவை அதிகமாக கடத்தப்படுகிறது. இதற்காக தென் ஆப்ரிக்காவில் இருந்து செயல்படும், வேட்டை தடுப்பு அமைப்புகள் வியட்நாமின் அதிகாரிகளுடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது. கடுமையான சட்டங்கள் அமலில் உள்ள போதும், இவற்றை வேட்டையில் இருந்து பாதுகாக்க ஆபரிக்க நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

தென் ஆப்ரிக்காவில் காடுகள் தவிர்த்து தனியார் நிலங்களிலும் காண்டமிருகங்கள் வந்து போவதால், பொது மக்களின் ஒத்துழைப்பும், காவல் துறையின் நடவடிக்கைகளும் நிச்சயம் தேவைப்படுகிறது. இன்னும் சில நாடுகளில் பயிற்சி பெற்ற வேட்டைக்காரர்களால் கொல்லப்படும் காண்டமிருகங்களின் கொம்புகள், விருதுகளாக வழங்கப்படுகிறது.


தன்னார்வு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல், கொல்லப்பட்ட விலங்குகளின் மரபணுக்களை ஆய்வு செய்தல், காவல் துறைக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்குதல் என தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், வேட்டைகளை தடுக்கப் போதுமானதாக இல்லை. இன்னும் அதிகப்படியான தண்டனைகள், தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன  காண்டாமிருகங்களின் தாயகங்கள்.

Pin It