உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி தற்போது ஆண்டுக்கு 7.9 மில்லியன் மக்கள் புற்றுநோயால் மரணமடைகிறார்கள் என்றும், இது 2030 ஆண்டில் ஆண்டுக்கு 12 மில்லியன் மக்களாக உயரும் என்றும், தற்போது ஆண்டுக்கு 11.3 மில்லியன் மக்கள் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இது 2030ம் ஆண்டில் 15.5 மில்லியனாக உயரும் என்றும் தெரிவித்து உள்ளது.

இரத்த ஆய்வு வாயிலாக இரத்தில் உள்ள கொழுப்பு, சர்க்கரை அளவுகளை அறிவது போல, நமது மரபணுக்களை சாதரணமான பார்வையில் ஒருவருக்கு புற்று நோய் வருங்காலத்தில் வர வாய்ப்பு உள்ளதா என முன்னதாகவே கண்டறியும் புதிய முறை ஒன்று சில ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்துவிடும்.

மேரிலாண்ட் பலகலைகழகம் விஞ்ஞானி கே.ஜெ.ரேய் லியின் எண்ணியல் குறியிடு பகுப்பாய்வு முறை (Digital signaling processing techniques) மூலம் மரபணுக்களிலிருந்து தகவல்களைப் பெற்று, அதில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதா என நமக்குத் தெரிவிக்கும். புற்றுநோய் ஏற்படும்போது புற்றுபாதிக்கப்பட்ட செல்கள் முற்றிலும் மாறுபட்ட புரதத்தையும் மூலக்கூறுகளையும் வெளியிடும் இவைதான் இந்நோய்க்கான முன்அறிகுறியாகும்

கே.ஜெ.ரேய்-லியின் உயிரியல்குறியிடுகள் செல், மூலக்கூறுகள், மரபுமுறைகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை காண்பிக்கும். புற்றுநோயை உருவாக்கும் உயிரியல்குறியிடுகளை சரியாக நாம் கணிக்க இயன்றால் இந்நோய் வருவதை முன்கூட்டியே கண்டறியலாம். பரிசோதிக்கலாம், மருத்துவம் செய்யலாம்.

மேரிலாண்ட் பலகலைகழக விஞ்ஞானி கே.ஜெ.ரேய் லி என்பவர் கண்டுபிடித்து உள்ள குறுமஅமைப்பு(MICRO ARRAY TECHNOLOGY) முறை, மரபணுவில்(DNA) உள்ள பொறுக்கப்பட்ட(random) உயிரியல் விவரங்களை கணினி படிக்கதக்க உணர்தகவல்களாக மாற்றி தரும். அவரது குழு சார் முறை (ensemble dependence model) மரபணு தகவல்களை அல்லது புரதத்தை (mass spectrograph)மாஸ் ஸ்பெக்டரோகிராப் வாயிலாக உயிரனுக்கும் புரதத்துக்கும் உள்ள தொடர்பு ஆராய்ந்து, வித்தியாசமானவைகளை குழுவாக பிரித்து (different cluster ) பார்க்கிறது. மேலும் அவைகளின் நடத்தை (behaviour) மற்றும் ஒருங்கான செயல்பாடுகளை (interaction) ஆய்வு செய்து பார்க்கிறது. ஒவ்வொரு குழுவுக்கும் குறிப்பான உயிரணுவும் அவற்றிடைய திட்டவட்டமான உறவும் இருக்கும்.

இந்த கே.ஜெ.ரேய் லி சார்பு முறையை கொண்டு சாதாரணமானவைகளையும் புறறு பாதித்த மாதிரிகளை வகைபடுத்த முடியும். அதற்குப்பின் இது உண்மை புற்றுநோய் தகவல்களுடன் ஒப்பிட்டு, புற்றுநோய்க்கான உயிரியல் குறிப்புகளை (cancer biomarkers) கண்டறிகிறது.. கே.ஜெ.ரேய் லி சார்பு முறை உடல்நலத்துக்கும், உயிரணு உணர்ச்சி பட்டியலுக்கும்(global gene expression profile) உள்ள தொடர்புகளை கண்டுஅறிகிறது. இதன் மூலம் நுரையீரல், மார்பகம் கருப்பபை, புரஸ்டட் ஆகியவற்றில் புற்று நோய் உருவாகும் வாய்ப்பை 98 விழுக்காடு சரியாக கணிக்க உதவும். இந்த முன்னதாக புற்றுநோய் கண்டறியும் முறை இன்னும் 10 அல்லது 20 ஆண்டுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும். இன்னும் 5 அல்லது 10 ஆண்டுக்குள் வழக்கத்தில் உள்ள உயிரியல்முறை பரிசோதனைக்கு துணையாக எண்ணியல் பரிசோதனை (Digital testing)முறை நடைமுறைக்கு வந்துவிடும்.

நன்றி: the institute monthly

கூடுதல் விவரங்களுக்கு: www..ieee.org/theinstitute 

அனுப்பி உதவியவர்: பிச்சுமணி

Pin It