பப்பாளி இலையை நன்கு அலசி அதன் காம்பையும் நரம்புகளையும் எடுத்துவிட்டுச் சாறு பிழிந்து ஒரு வேளைக்கு 2 தேக்கரண்டி வீதம், அதிகாலையில் 3 நாள் குடித்தால் டெங்குக் காய்ச்சல் நீங்கும். இக்காய்ச்சல் தொண்டைவலி, இருமல், சுரம் ஆகிய அறிகுறிகளுடன் வரும். இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் என்னும் அணுக்கள் 5,0000-க்குக் கீழேயும் குறைந்துவிடும். பப்பாளி இலைச் சாறு கொடுத்ததுமே முதல் நாளிலேயே ஓரிலட்சம் அணுக்காளாகி அடுத்த நாளே இரண்டு இலட்சத்தை எட்டிவிடும்.

அண்ணா மருத்துவமனை சித்தமருத்துவ நூல்வெளியீட்டுப் பிரிவு முன்னாள் இயக்குநர் முனைவர் ஆனைவாரி ஆனந்தனும் இயற்கை மருத்துவர் திருமதி தமிழ்க்குயில் அவர்களும் இதனை உறுதி செய்தனர். இதனை உடனடியாக அண்ணா சித்த மருத்துவமனையும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையும் உறுதி செய்து, தமிழக அரசு மக்களிடம் நோய் பரவுகிற இடங்களில் – ஊர்களில் இச்செய்தியைப் பரப்பி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.