7.10.13 காலை 10 மணி 

தமிழக அரசே!

நத்தம் காலனி, நாயக்கன் கொட்டாய், கொண்டாம்பட்டி கிராமங்களை எரித்த குற்றவாளிகள் மீதான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்று!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட கிராமங்களிலேயே சிறப்பு நீதிமன்றம் அமைத்து, கிராமங்கள் எரிப்பு, இளவரசன் கொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்!

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் விவசாய நிலம் வழங்கு! அப்பகுதியிலேயே அவர்களின் வாழ்வாதாரத்திற்காக தொழிற்சாலை அமைத்திடு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மறுவாழ்வுப்பணிகளை நிறைவேற்று! அழிக்கப்பட்ட வீடுகளை உடனடியாகக் கட்டிக்கொடு!

ஜாதிவெறியைத் தூண்டி, தாழ்த்தப்பட்ட மக்கள்மீது ஊர்க்கட்டுப்பாடுகளை விதித்துவரும் ஜாதியக் கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடு!

வன்முறைத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஜாதி ஆதிக்கசக்திகளின் உடைமைகளைப் பறிமுதல் செய்!

கௌரவக்கொலைகளைத் தடுத்திட சிறப்புச் சட்டத்தை இயற்றிடு!

ஜாதிமறுப்புக் காதலர்களுக்குப் பாதுகாப்பு வழங்கு! ஜாதிமறுப்பு இணையர்களின் குழந்தைகளுக்கு ஜாதியற்றோர் இடஒதுக்கீடு வழங்கிடு!

- திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It