கனடாவில் கடந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் 'காலம்' இலக்கிய சஞ்சிகையின் நாற்பதாவது சிறப்பிதழ் டிசம்பர் முதலாம் திகதி வெளிவருகின்றது. அதனை ஒட்டி 'ஈழ மின்னல் சூழ மின்னுதே' என்ற காலம் இலக்கிய நிகழ்வு டிசம்பர் முதலாம் திகதி சனி மாலை 5.30க்கு நிகழவுள்ளது.

இந்த நிகழ்வில் அண்ணாவியார் ம. யேசுதாசனின் விஐயமனோகரன் கூத்தும், மாலினி பரராஐசிங்கத்தின் நடனம், ஆனந்தப்பிரசாத்தின் பாடல்கள் இடம் பெறவுள்ளன. அத்தோடு அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம், செல்வா கனநாயகம், சேரன், வெங்கட்ரமணன், சந்திரகாந்தன் ஆகியோரின் சிறப்பு பேச்சுகள் இடம் பெறவுள்ளன.

இடம்: St. Maria Goretti Catholic School, 21 Kenmark Boulevard (Kennedy Road & Eglinton Avenue East)

kaalam_invitation_650

- காலம் செல்வம், ஆசிரியர், காலம்

Pin It