இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும் மற்றும் உலகம் தேடும் குற்றவாளி ராசபட்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்ககோரியும் ஏழு கோடி தமிழர்களின் உணர்வுகளை மதித்து தமிழக சட்ட மன்றத்தில் இயற்றிய தீர்மானத்தை ஆதரித்தும் உண்ணாநிலைப் போராட்டம்.

ஏழு கோடி தமிழர்களின் உணர்வுகளை துச்சமென மதிக்கும் டில்லி அரசே உடனே தீர்மானத்தை நிறைவேற்று!
 
நாள் : சனிக்கிழமை, 2.7.2011 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 வரை
 
இடம் : சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மின் இணைப்பு அலுவலகம் அருகில்(Near E.B Off)
 
ஒரே நாளில் ஒரு லட்சம் தமிழர்களை கொன்ற இலங்கைக்கு கப்பல் விடும் டில்லி அரசே! கப்பல் சேவையை உடனே நிறுத்து! உடனே நிறுத்து!
 
தினம் தினம் தமிழக மீனவர்களை கொன்றழிக்கும் சிங்கள இனவெறியாட்டத்தை தடுத்து நிறுத்த, டில்லி அரசே! டில்லி அரசே! சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை உடனே இழுத்துப் பூட்டு! இழுத்துப் பூட்டு!
 
இன்றும் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொண்டிருக்கும் சிங்கள ராணுவத்தின் களியாட்டத்தினை தடுத்தி நிறுத்திட, டில்லி அரசே! டில்லி அரசே! தமிழ்நாட்டில் இயங்கும் இலங்கை நிறுவனங்களை இழுத்து மூடு! இழுத்து மூடு!
 
உலகப் புகழ் பெற்ற யாழ் நூலகத்தை எரித்த சிங்கள இனவெறியர்களுக்கு கட்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்த டில்லி அரசே! டில்லி அரசே!, கட்சதீவை தமிழர்களுக்கே மீட்டுக்கொடு! மீட்டுக்கொடு!
 
நிகழ்ச்சி ஏற்பாடு

போர்குற்றம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள்
9003154128/9940963131/9042274271

Pin It