கம்பீரமாக
நடந்து வந்து
கையை நீட்டி
பிச்சை கேட்டது யானை..!
பிச்சை பெற்றதும்
பெருமை குலையாமல்
வழங்கியவனுக்கே
ஆசி வழங்கியது!
அதன் நடையில்
ஒரு போலிச்சாமியாரின்
வாழ்க்கை தெரிந்தது..!
- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
இன்றைய தினத்தந்தியில் ஒரு செய்தி(07/07/2010).
குடியரசு தலைவர் ஒரு சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார்.
உங்கள் கவிதை நினைவுக்கு வந்தது...
இந்த பிச்சை யானைகள் தான் பட்டத்து அரசனை தேர்வு செய்து, வழி நடத்தவும் செய்கிறது.
ஒரு பார்பண பெரியவாள் பிச்சை யானை கொலை,கற்பழிப்பு , குற்றங்களில் உள்ளே மாட்டி கொண்டதும் சட்டங்களும், ஆட்சி அதிகார வர்க்கங்களும்
பதறியடித்து வெளியே கூட்டிவந்து கு*** சந்தனம் மெழுகி பார்த்து மகிழும் பாசிச கரை பிடித்த கூட்டம் உள்ள வரை உங்கள் கவிதை வெல்லும்.
நன்றி
RSS feed for comments to this post